Written by S NAGARAJAN
Date: 10 JULY 2018
Time uploaded in London – 6-32 AM (British Summer Time)
Post No. 5202
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
சங்க காலம் பொற்காலம்
புலவர்களின் தமிழைப் பார்த்தார்கள்; ஜாதியைப் பார்க்கவில்லை!
ச.நாகராஜன்
சங்க காலத்தில் ஜாதி பேதம் இன்றைய திராவிட கண்களின் விஷப்பார்வை போல பார்க்கப்படவில்லை என்பது ஒரு அருமையான செய்தி.
அந்தக்காலத் தமிழர்கள் தமிழைப் பார்த்தார்கள்; தமிழ் கூறும் கருத்துக்களைப் பார்த்தார்கள்.
பாடியவர் அந்தணரா, அரசரா, இடையரா, எயினரா, கூத்தரா, தட்டாரா, வணிகரா, வேளாளரா என்று பார்க்கவில்லை.
அனைவரையும் மதித்தார்கள் – தமிழுக்காக, தமிழில் அவர்கள் தந்த கருத்துக்களுக்காக.
எடுத்துக்காட்டாக அகநானூற்றில் வரும் புலவர்கள் சிலரின் ஜாதியை இங்கு சுட்டிக் காட்டலாம்- இன்றைய திராவிட இயக்கங்கள் தீய நோக்கில் பரப்பும் விஷ பிரசாரத்தைத் தடுக்கவே இது தரப்படுகிறது.
ஜாதி மட்டுமல்ல, ஆண், பெண் என்ற பாலின பேதம் கூட அந்த காலத்தில் பார்க்கப்படவில்லை. பெண்பாற் புலவர்களும் உண்டு.
தமிழின் முன்னால் அனைவரும் சமம் என்ற உயர் நோக்கைச் சங்க காலம் கொண்டிருந்தது என்பதை இதன் மூலம் உணரலாம்.
பாடிய புலவர்களின் ஒரு பட்டியல் இதோ:
அந்தணர்:
ஆமூர்க் கௌதமன் சாதேவனார்
கடியலூர் உருத்திரங்கண்ணனார்
கபிலர்
கோடிமங்கலம் வாதுளி நற் சேந்தனார்
செல்லூர்க் கோசிகன் கண்ணனார்
நக்கீரனார்
மதுரை ஆசிரியர் நல்லந்துவனார்
மதுரை இளங்கௌசிகனார்
மதுரைக் கணக்காயனார்
மதுரைக் கௌணியன் தத்தனார்
மாமூலனார்
இந்தப் பெயர்கள் மூலம் பொதுவாக ஊர்ப் பெயர்களை புலவர்கள் தம் பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொள்வதைக் காணலாம்.
எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். கவுண்டின்ய கோத்திரம், கௌசிக கோத்திரம், வாதூல கோத்திரம் என்று இப்படிப் பல கோத்திரங்களை அவர்கள் பெயருடன் இணைத்துக் கொண்டிருந்தனர்.
அரசர்
அண்டர்மகன் குறுவழுதியார்
அதியன் விண்ணத்தனார்
ஒல்லையூர்தந்த பூதப்பாண்டியன்
கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்
சேரமான் இளங்குட்டுவன்
பாண்டியன் அறிவுடைநம்பி
பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
பாலை பாடிய பெருங்கடுங்கோ
மருதம் பாடிய இளங்கடுங்கோ
முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்
வீரைவெளியன் தித்தனார்
இடையர்
இடைக்காடனார்
இடையன் சேந்தன் கொற்றனார்
இடையன் நெடுங்கீரனார்
இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்
எயினர்
எயினந்தைமகன் இளங்கீரனார்
விற்றூற்று மூதெயினனார்
கூத்தர்
உறையூர் முதுகூத்தனார்
மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன்கூத்தனார்
மதுரைக் கூத்தனார்
மதுரைத் தமிழ்க்கூத்தன் கடுவன்மள்ளனார்
மதுரைத் தமிழ்க்கூத்தன் நாகன்றேவனார்
தட்டார்
தங்காற் பொற்கொல்லனார்
மதுரை பொன்செய்கொல்லன் வெண்ணாகனார்
மந்திரத்தலைவர்
ஏனாதி நெடுங்கண்ணனார்
வண்ணக்கர்
வடமவண்ணக்கன் டேரிசாத்தனார்
வணிகர்
காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
மதுரை அறுவைவாணிகன் இள வேட்டனார்
மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார்
வேளாளர்
ஆர்க்காடுகிழார்மகனார் வெள்ளைக்கண்ணத்தனார்
ஆவூர்கிழார் மகனார் கண்ணத்தனார்
ஆவூர் மூலங்கிழார்
மேற்படியார் மகனார் பெருந்தலைச்சாத்தனார்
உமட்டூர்கிழார்மகனார் பரங்கொற்றனார்
காட்டூர்கிழார்மகனார் கண்ணனார்
கோடியூர்கிழார்மகனார் நெய்தற்றனார்
செல்லூர்கிழார்மகனார் பெரும்பூதங்கொற்றனார்
நல்லாவூர்கிழார்
நெய்தற்சாய்த்துய்ந்த ஆவூர் கிழார்
நொச்சியமங்கிழார்
பொதும்பில்கிழார் வெண்கண்ணனார்
மதுரைக் காஞ்சிப் புலவர்
மதுரை மருதங்கிழார்மகனார் பெருங்கண்ணனார்
மருங்கூர்கிழார் பெருங்கண்ணனார்
மாற்றூர்கிழார்மகனார் கொற்றங்கொற்றனார்
வடமோதங்கிழார்
அருந்தொடரால் பெயர் பெற்றோர்
அந்தியிளங்கீரனார்
இம்மென்கீரனார்
ஊட்டியார்
நோய்பாடியார்
வண்ணப்புறக்கந்தரத்தனார்
பெண்பாற்புலவர்
அஞ்சில் ஆந்தைமகள் நாகையார்
அள்ளூர் நன்முல்லையார்
ஒக்கூர் மாசாத்தியார்
ஔவையார்
கழார்க் கீரனெயிற்றியார்
குமிழிஞாழார் நப்பசலையார்
நக்கண்ணையார்
போந்தைப் பசலையார்
மதுரை நல்வெள்ளியார்
முள்ளியூர்ப் பூதியார்
வெள்ளிவீதியார்
வெறிபாடியகாமக்கண்ணியார்
75 புலவர்களின் பெயர்களை மேலே காணலாம். இந்தப் புலவர்கள் வெவ்வேறு ஜாதியினரைச் சேர்ந்தவராய் இருப்பினும் தமிழால் ஒன்றுபட்டவர்கள். சமமானவர்கள். மதிப்பைப் பெற்றவர்கள். ஆண், பெண் என்ற வேறுபாடும் சங்க காலத்தில் பார்க்கப்படவில்லை என்பதற்கும் இந்தப் பட்டியலே சான்று!
***