COMPILED by London SWAMINATHAN
Date: 11 August 2018
Time uploaded in London – 14-23 (British Summer Time)
Post No. 5310
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
பத்மலோசனர் செய்த அற்புதம்! கைக்குட்டை, தண்ணீர் ரஹஸியம்! (Post No.5310)
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் பெருமையை உலகிற்குப் பறைசாற்ற விரும்பிய பெரியோர்களில் ஒருவர் பத்மலோசன். அவர் சில அற்புதங்களை நிகழ்த்தி வந்தார். அது எப்படி என்பது அவருடைய மனைவிக்கும் தெரியாது. அதை ராமகிருஷ்ணர் கண்டுபிடித்தவுடன் ராமகிருஷ்ணர் ஒரு அவதாரம் என்று அறிவிக்கத் துவங்கினார்.
இதோ அந்தக் கதை
பர்த்துவான் அரசரின் அவைப் புலவர் பத்மலோசன். அவர் மஹா மேதாவி. சாஸ்திரங்களின் கரை கண்டவர். அவரைச் சந்திக்க ராமகிருஷ்ணர் ஆசைப்பட்டார். அதன்படி அவரும் கல்கத்தா வந்தார். ஏனெனில் அவருக்கு ராமகிருஷ்ணரின் மீது அளவற்ற மரியாதை.
தாந்த்ரீக சாதனைகளைப் பழகியதன் விளைவாக பத்மலோசனர் சில அற்புதமான சக்திகளைப் பெற்றிருந்தார். அவர் எபோதும் தன் பக்கத்தில் ஒரு பாத்திரம் நிறைய தண்ணீரும் கைக் குட்டை (HAND KERCHIEF)யும் வைத்திருப்பார்.ஏதாவது கடினமான பிர்ச்சினையைத் தீர்த்து வைக்குமாறு அவர் அழைக்கப்பட்டால், சிறிது தூரம் நடந்து சென்றுவிட்டு , திரும்பிவருவார். பாத்திரத்தில் உள்ள தண்ணீரில் முகத்தைக் கழுவுவார். பின்னர் அந்தக் கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக்கொண்டு தீர்ப்பு கூறுவார். அவருடைய இஷ்ட தெய்வத்தின் அருளினால் அவர் இப்படிச் செய்துவந்தார். இப்படிச் செய்யும் அவரை யாரும் வாதத்தில் மிஞ்ச முடியாது. அவர் சொல்லும் தீர்ப்பும் கனகச்சிதமாக இருக்கும். யாரும் அதை மறுக்க முடியாது.
ஏதோ சிந்தனை செய்வது போல நடந்து சென்று வீட்டுத் தண்ணீரில் முகம் கழுவுவார். பின்னர் தீர்ப்புக் கூறுவார். எல்லோரும் ஏதோ வெளியே போய் வந்த களைப்பில் முகம் கழுவுவதாக நினைத்துக் கொள்ளுவர். அவருடைய மனைவிக்கும் இதன் ரஹஸியம் தெரியாது.
ராமாகிருஷ்ணருக்கு அன்னை காளியின் அருள் இருந்ததால் இதன் காரணம் புரிந்துவிட்டது. ஒருநாள் அவர் அந்தத் தண்ணீர் பாத்திரத்தையும், கைக்குட்டையையும் எடுத்து ஒளித்து வைத்துவிட்டார். அப்பொழுது பத்மலோசனருக்குக் கடினமான ஒரு கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பண்டிதர் அதற்குப் பதில் சொல்லும் முன் கைக்குட்டையையும் தண்ணீர் பாத்திரத்தையும் தேடினார். அவை அங்கு இல்லாதது கண்டு ஆச்சரியப்பட்டார். அவற்றை ராமகிருஷ்ணர்தான் எடுத்து மறைத்து வைத்திருக்கிறார் என்ற செய்தி கிடைத்த பின்னர் மேலும் வியப்படைந்தார். அதிலும் அவர் அதை வேண்டுமென்றே செய்திருக்கிறார் என்பதைக் கேட்டவுடன் அவர் அடைந்த ஆச்சர்யத்துக்கு அளவே இல்லை.
தன் இஷ்ட தெய்வமான காளியைத் தவிர வேறு யாராலும் அறிந்துகொள்ள முடியாத இந்த ரஹஸியத்தை அறிந்து கொண்ட ராமகிருஷ்ண பரமஹம்ஸர் காளியின் அவதாரமே என்று நினைத்து கண்ணீர் மல்கி, ராமகிருஷ்ணரையே வழிபடத் துவங்கினார். இந்த நிகழ்ச்சியால் அவர் தம்மை முழுதுமாக ராமகிருஷ்ணரிடம் அர்ப்பணித்தார்
இந்த நிகச்ழ்ச்சி பற்றி பண்டிதர் பத்மலோசனர் சொல்லும்போது, நான் நல்ல நிலையை அடைந்ததும், இந்த நாட்டிலுள்ள சமய அறிஞர்கள் எல்லோரையும் அழைத்து, ஒரு பெரிய கூட்டம் நடத்தி, அவரை கடவுளின் அவதாரம் என்று மெய்ப்பிப்பேன். யாருக்குத் தைரியம் இருக்கிறதோ அவர்கள் வந்து எதிர்க்கட்டும் என்றார். (ஆனால் பத்மலோசனர் மோசமான உடல்நிலையில் இருந்ததால் விரைவில் காலமாகிவிட்டார்.)
ஆதாரம்- பக்கம் 181-182, பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர், ராமகிருஷ்ண மடம் வெளியீடு, மயிலாப்பூர், சென்னை.
–SUBHAM-