கம்போடியாவில் கந்தன், காமராஜ்! (Post No.5383)

WRITTEN BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 1 September 2018

 

Time uploaded in London – 9-09 am (British Summer Time)

 

Post No. 5383

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

கந்தன், காமராஜ் பொன்ற பெயர்கள்  தமிழ்நாட்டில் சர்வ சாதாரணமாகக் காணப்படும்  பெயர்கள்;  இந்தப் பெயர்கள்  ஸம்ஸ்ருதச் சொற்கள் என்றாலும் தமிழ்நாட்டில் நிறைய புழக்கத்தில் உள்ளது. இந்தப் பெயர்களும்  ஏனைய சில பெயர்களும் கம்போடியா நாட்டிலும் உள்ளன.  இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு நிலவிய தமிழர்களின்  செல்வாக்கைக் காட்டும்.

 

லண்டன் (SOAS) பல்கலைக்கழகத்தில் சீனியர் விரிவுரையாளராக வேலை செய்த ஜூடித் ஜாகப் (CAMBODIAN LINGUISTICS, LITERATURE AND HISTORY BY JUDITH JACOB AND EDITED BY DAVID A SMYTH) எழுதிய புஸ்தகத்தை நான் ஆராய்ந்தபோது கிடைத்த தகவல்கள் இதோ:

 

ஒரு கல்வெட்டில் ‘மே கந்தன், தா கந்தன், கு கந்தன்’ என்று வருகிறது – இதன் பொருள் கந்தனின் தாய், கந்தனின் தந்தை, அவர்களுடைய மகன் கந்தன் என்பதாகும்.

 

(வா என்பது திரு, கு என்பது குமாரி அல்லது திருமதி)

 

கம்போடியா, பர்மா, தாய்லாந்து ஆகிய நாடுகளின் நாட்டுப்புற கதைகளில் தனஞ்ஜயன் (அர்ஜுனனின் பெயர்) மிகவும் அடிபடும். கிட்டத்தட்ட தெனாலிராமன் கதைகள் போல பல நிகழ்ச்சிகள் இருக்கும்.

 

தமிழ் இலக்கியத்தில் காணப்படும் ‘தாக்கு அணங்கு’ கம்போடிய கதைகளிலும் உண்டு . காடு, மலை, மரம், ஏரி, குளம் ஆகியவற்றை ஆக்ரமிக்கும் பிரம்ம ராக்சஸ் போன்றவை அணங்கு என்னும் தேவதைகள்

 

ஒரு நாட்டுப்புற கதையிலும் கந்தன் வருகிறான்.

 

இதோ அந்தக் கதை:-

பிரம்ம தத்தன் என்ற அரசனின் மனைவி பெயர் காக்கி. (கார்கி என்பவள் உபநிஷத்தில் வரும் புகழ்பெற்ற பெண்மணி). கருடர்களின் அரசனுடன் ராஜா, சதுரங்கம் விளையாடுவான். அவன் காகியைக் காதலிக்கத் துவங்கினான். அரசனுக்குத் தெரியாமல் காதல் சமிக்ஞைகளைச் செய்வான். அவளும் காதல் வலையில் விழுந்தாள். ஒருநாள் கருட அரசன் ஒரு புயலை உருவாக்கி, எல்லோரும் பயந்துகொண்டு இருந்த சம்யத்தில் ராணியை அணுகி தன்னுடைய நாட்டுக்கு வரும்படி வலியுறுத்தினான். அரசனுக்கு நடந்தது தெரியாது. புயல் ஓய்ந்த பின்னர் கருட அரசன் வழக்கம்போல சதுரங்கமாட வந்தான். அரசனுக்கு அவன் மீது சந்தேகம் ஏற்படவே தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான தளபதி கந்தனை அழைத்து ஒரு பூச்சி ரூபத்தில் கருடனுன் போய், ரஹஸியத்தை அறிந்து வா என்று அனுப்பினான்

அங்கே கந்தனும் காக்கியைக் காதலித்தான்; பின்னர் திரும்பி வந்தான்; மறு நாளன்று வழக்கம்போல கருட ராஜா ‘செஸ்’ விளையாட வந்தபோது யாழ் வாத்தியத்தையும் வாசித்தனர். அப்போது காக்கியின் வேசித்தனத்தையும் ஏசினர் (கந்தனும் அவனுடைய ராஜா பிரம்மத்ததனும்).

 

கருட ராஜாவுக்குக் கோபம் வரவே அவளைத் திருப்பிக் கொண்டுவந்து விட்டான். பிரம்மதத்தனும் அவள் மீது கோபம் கொண்டு ஒரு படகில் வைத்து நதியில் அனுப்பிவிட்டான்.

 

இந்தக் கதையிலும் கந்தன் என்ற பெயர் தமிழ் வழக்குப்படி ‘கந்தன்’ என்றே வருகிறது; ‘ஸ்கந்த’ என்பது ஸம்ஸ்க்ருத மூலம்.

காமராஜ், அருண்ராஜ்

 

மற்றொரு கதையில் காமராஜ், அருண்ராஜ் என்ற பெயர்கள் வருகின்றன. இன்னொரு கதையில் கிருஷ்ணகுமார், சுவண்ண (ஸ்வர்ண) குமார் என்ற பெயர்கள் காணப்படுகின்றன.

 

ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் என்றபோதிலும் அவை தமிழர் பயன்படுத்தும் வடிவத்தில் இருப்பது தமிழ் மொழியின் தாக்கத்தைக் காட்டுகிறது.

 

 

 

 

அடிமைகளின் ஸம்ஸ்க்ருதப் பெயர்கள்

 

அங்கோர் ஆட்சிக்கு முந்தைய கம்போடியாவில் (Pre-Angkhor) படித்த மக்கள் ஸம்ஸ்க்ருதப் பெயர்களையே பயன்படுத்தினர். அப்படிப்பட்ட பெயர்கள் அடிமைகளாக இருந்தவர்களிடமும் காணப்படுகின்றன. ‘வசந்த மல்லிகா’ என்பது ஒரு அடிமைப் பெண்ணின் பெயர்.

 

அடிமைகள், நாம் பயன்படுத்தும் பலசரக்கு சாமான்களைப் போல,

நடத்தப்பட்டனர். ஆனால் அவர்கள் எப்படி அடிமை ஆயினர் என்பது தெரியவில்லை. அவர்களுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டது.

 

கோவிலுக்கு தானம் செய்யும் போது இத்தனை அரிசி மூட்டை அல்லது நிலம், இத்தனை அடிமை என்று எழுதப்பட்டது.

 

 

இந்தியாவில் காணப்படும் கல்வெட்டுகளைப் போலவே, கம்போடியக் கல்வெட்டுகளில் பின்வரும் தகவல்கள் இருக்கின்றன:

 

1.ஆளும் அரசனின் பெயர் அல்லது ஆண்டு;

2.தானம் செய்வோரின் பெயர்கள், பதவி;

3.எந்தக் கடவுளுக்கு தான்ம்

4.யார் யார் கொடுத்ததை அறக்கொடைக்கு எழுதுகின்றனர்.

5.அறக்கொடைக்காக அப்படி நிலத்தை விட்டுக் கொடுத்தோருக்கு என்ன நஷ்ட ஈடு அளிக்கப்பட்டது;

6.தானம் செய்யப்பட்ட நிலங்களின் பரப்பு

7.நிலத்துடன் தானம் செய்யப்பட அடிமைகளின் பெயர், அவர்கள்

செய்யப் போகும் வேலை;

8.குருமார்களுக்கான ஊதியம்

9.அறக்கொடை நிறுவனங்களுக்கு இத்தோடு கூடுதலாகத் தரப்படும் நந்தவனம், கடை முதலியன.

10.கொடுக்கப்படும் வேறு விலையுயர்ந்த பொருட்கள்

11.வருவாயை என்ன செய்வது, எப்படிச் செலவிடுவது;

12.எவரேனும் இந்த தானத்துக்குப் பாதகம் செய்தால் அவருக்குக் கிடைக்கும் தண்டனை.

இந்தக் கல்வெட்டு அமைப்பும் இந்தியாவின் செல்வாக்கைக் காட்டுகிறது. தமிழ்க் கல்வெட்டுகளும் இதே வரிசையில் விஷயங்களைத் தருகின்றன.

 

–சுபம்–

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: