ஹென்றி ஃபோர்டின் வெற்றிக்குக் காரணம் (Post No.5486)

WRITTEN BY S NAGARAJAN

Date: 29 September 2018

 

Time uploaded in London – 6-11 AM (British Summer Time)

 

Post No. 5486

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

ஹென்றி ஃபோர்டின் வெற்றிக்குக் காரணம் மறுபிறப்பு நம்பிக்கையே!

ச.நாகராஜன்

1

எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை; இந்தியாவில் மதமாற்றத்தில் தீவிரமாக ஈடுபடவேண்டும் என்று கிறிஸ்தவ பாதிரிகள் மும்முரமாக ஈடுபட்டு கோடிக் கணக்கில் டாலர்களைத் திரட்டுவதற்கான காரணம் அவர்களின் முதலுக்கே மோசம் வந்ததால் தான்!

 

மேலை நாடுகளில் இன்று ஏராளமானோர் மறுபிறப்பு நம்பிக்கை கொண்டு மறுபிறப்பு கொள்கை பற்றி அறிய மிகுந்த ஆவல் கொண்டு ஹிந்து மதத்தின் பக்கம் பார்வையைத் திருப்பியுள்ளனர்.

 

இது அடிப்படையையே ஆட்டம் காண வைப்பதால் ஹிந்து மதத்தின் மீது  ஒரு மோசமான வெறுப்பை கிறிஸ்தவ பாதிரிகள் கொண்டுள்ளனர்.

 

ஆனால் மறுபிறப்பு நம்பிக்கையை நூறாண்டுகளுக்கு முன்பேயே  மேலை நாட்டில் பல பிரபலங்கள் உட்பட ஏராளமானோர் கொண்டிருந்தனர் என்பதை ஆதாரபூர்வமாக  வரலாறு நிரூபிக்கிறது.

மறுபிறப்பு நம்பிக்கையே தனது வெற்றிக்குக் காரணம் என்று அழகுறச் சொன்னவர் ஹென்றி போர்ட். மோட்டார் மன்னன் என்ற பெயரால் செல்லமாக அழைக்கப்படும் போர்ட் வாழ்க்கை சுவை தரும் ஒன்று.

 

 

2

 

ஹென்றி போர்ட் (பிறப்பு 30-7-1863 மறைவு 7-4-1947) தனது 26ஆம் வயது முதலே மறுபிறப்பில் நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதை அவரே San Francisco Examiner என்ற பத்திரிகைக்கு 1928ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி அளித்த பேட்டியில் குறிப்பிடுகிறார் இப்படி:

 

I adopted the theory of Reincarnation when I was twenty six. Religion offered nothing to the point. Even work could not give me complete satisfaction. Work is futile if we cannot utilise the experience we collect in one life in the next. When I discovered Reincarnation it was as if I had found a universal plan I realised that there was a chance to work out my ideas. Time was no longer limited. I was no longer a slave to the hands of the clock. Genius is experience. Some seem to think that it is a gift or talent, but it is the fruit of long experience in many lives. Some are older souls than others, and so they know more. The discovery of Reincarnation put my mind at ease. If you preserve a record of this conversation, write it so that it puts men’s minds at ease. I would like to communicate to others the calmness that the long view of life gives to us.

 

 

“26ஆம் வயதில் மறுபிறப்பு பற்றிய நம்பிக்கையைக் கொள்ள ஆரம்பித்தேன். மதம் ஒன்றும் தர முன்வரவில்லை. வேலை கூட பூரண திருப்தியைத் தரவில்லை. ஒரு பிறப்பில் நாம் பெற்ற அனுபவத்தை இன்னொரு பிறவியில் நாம் பயன்படுத்த முடியவில்லை எனில் அது மிக மோசம். மறுபிறப்பு பற்றி நான் கண்டுபிடித்த போது ஒரு பிரபஞ்ச திட்டத்தை கண்டுகொண்டது போல இருந்தது. எனது கருத்துக்களை நிறைவேற்ற ஒரு வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்தேன். காலம் என்பது இனி ஒரு எல்லைக்குட்பட்டதாக இல்லை. கடிகாரத்தின் முள்களுக்கு நான் இனி அடிமை இல்லை. மேதைத் தனம் என்பது அனுபவம். சிலர் அதை ஒரு பரிசு என்றோ அல்லது ஒரு திறமை என்றோ நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் அது பல ஜென்மங்களில் ஏற்பட்ட அனுபவங்களின் விளைவே. சிலர்  மற்ற ஆன்மாக்களை விட முதியவர்கள். ஆகவே அவர்களுக்கு அதிகம் தெரியும். மறுபிறப்பைக் கண்டுபிடித்ததிலிருந்து எனது மனம் தெளிவாக இருக்கிறது. இந்த உரையாடலை நீங்கள் பாதுகாத்தீர்கள் என்றால் இது மனித மனங்களை தெளிவாக இருக்கச் செய்கிறது என்று எழுதுங்கள். நான் மற்றவர்களுக்குச் சொல்ல விரும்புவது வாழ்க்கை பற்றிய நீண்ட நோக்கு நமக்குத் தரும் அமைதியைப் பற்றியே

போர்ட் கூறியதில் ஒரு சிறிய பகுதியையே மேலே நாம் படித்தோம்.

 

இன்னும் ஏராளமாக அவர் மறுபிறப்பு பற்றிக் கூறியிருக்கிறார்.

மனித வாழ்வில் ஒரு ஆறுதலையும் அர்த்தத்தையும் தரும் மறுபிறப்பு நம்பிக்கையே தன் வெற்றிக்குக் காரணம் என்று அவர் கூறியிருப்பது பொருள் பொதிந்த ஒன்று.

 

3

அமெரிக்காவின் 25வது ஜனாதிபதியான வில்லியம் மக் கென்லி (William McKinley) (பிறப்பு : 29-1-1843 சுடப்பட்டு மரணமடைந்த தேதி 14-9-1901) 1901ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி 50000 பேர் அடங்கிய ஒரு கூட்டத்தில் பங்கு கொண்டார். அவரைக் கொலை செய்ய முயன்ற ஜொல்காஸ் (Czolcosz) அது முடியாமல் போகவே மறுநாள் அவர் டெம்பிள் ஆஃப் மியூசிக் மைதானத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொள்ள வந்த போது அவர் அருகில் வந்து அவரது அடிவயிற்றில் இரு முறை சுட்டான். மரண காயமடைந்த மக்கென்லி செப்டம்பர் 14ஆம் தேதி மரணம்டைந்தார்.

அவரது இறுதிச் ச்டங்கில் கலந்து கொள்ள வந்தார் போர்ட். அப்போது அவரது நண்பரான ஆலிவர் பார்தெல் (Oliver Barthel) என்பவர் அவரிடம் ஆர்லாண்டோ ஸ்மித் (Orlando Smith)  எழுதிய “A Short view of the Great Questions and Eternalism : A Theory of Infinite Justica”  என்ற புத்தகத்தை அளித்தார். இரு தொகுதிகள் அடங்கிய அந்த நூல் மறுபிறப்பு பற்றி நன்கு விளக்கும் ஒரு நூல். அதை நன்கு ஊன்றிப் படித்தார் போர்ட். அவரது மறுபிறப்பு பற்றிய நம்பிக்கை இன்னும் ஆழமானது. இதை போர்டின் வாழ்க்கை வரலாறை எழுதிய வின்செண்ட் கர்சியோ (Vincent Curcio) ‘ஹென்றி போர்ட்’ என்ற நூலில் எழுதியுள்ளார்.

 

4

இது போல ஏராளமான மேலை நாட்டு அறிஞர்களும், விஞ்ஞானிகளும், தொழிலதிபர்களும், சாமானியர்களும் மறுபிறப்பு பற்றிய நம்பிக்கை கொண்டிருந்ததை நாம் பார்க்கலாம்.

நாளுக்கு நாள் ஏராளமானோர் அறிவுக்கு இணக்கமான, அறிவியலால் நிரூபிக்கப்பட்ட இந்த நம்பிக்கையைக் கொள்வதில் ஆச்சரியம் இல்லை!

 

இது கிறிஸ்தவ மதத்தின் ஆணி வேர் கொள்கையான, ‘பிறப்பு ஒன்றே; பின்னர் மீளாத் துயில் தான்’ என்பதை ஆட்டம் காணச் செய்வதால் பாதிரிகள் என்ன செய்வதென்று தெரியாமல் விழிப்பதிலும் ஆச்சரியம் இல்லை!!

***

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: