உண்மைக் கதை-கொடி கொடுத்த உயிர்! (Post No.6561)

Written by London  Swaminathan

swami_48@yahoo.com


Date: 17 June 2019


British Summer Time uploaded in London –  13-
45

Post No. 6561

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com

 பாரத நாடு 
14.
தாயின் மணிக்கொடி 
பாரத நாட்டுக் கொடியினைப் புகழ்தல் 
தாயுமானவர் ஆனந்தக்களிப்பு மெட்டு
பல்லவி


தாயின் மணிக்கொடி பாரீர்!- அதைத் 
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!
சரணங்கள்


1.
ஓங்கி வளர்ந்ததோர் கம்பம்-அதன் 
      உச்சியின் மேல்‘வந்தே மாதரம்’என்றே 
பாங்கின் எழுதித் திகழும்-செய்ய 
      பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்!(தாயின்)
2.
பட்டுத் துகிலென லாமோ?-அதில் 
      பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று 
மட்டு மிகந்தடித் தாலும்-அதை 
      மதியாதவ் வுறுதிகொள் மாணிக்கப் படலம்(தாயின்)
3.
இந்திரன் வச்சிரம் ஓர்பால்-அதில் 
      எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால்,-(தாய்) 
மந்திரம் நடுவுறத் தோன்றும்-அதன் 
      மாண்பை வகுத்திட வல்லவன் யானோ?(தாயின்)
4.
கம்பத்தின் கீழ்நிற் றல்காணீர்-எங்கும் 
      காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம் 
நம்பற் குரியர்அவ் வீரர்;-தங்கள் 
      நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார்(தாயின்)
5.
அணியணி யாயவர் நிற்கும்-இந்த 
      ஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ? 
பணிகள் பொருந்திய மார்பும்-விறல் 
      பைந்திரு வோங்கும் வடிவமும் காணீர்!(தாயின்)
6.
செந்தமிழ் நாட்டுப் பொருநர்,-கொடுந் 
      தீக்கண் மறவர்கள், சேரன்தன் வீரர், 
சிந்தை துணிந்த தெலுங்கர்,-தாயின் 
      சேவடிக் கேபணி செய்திடு துளுவர்.(தாயின்)
7.
கன்னடர் ஒட்டிய ரோடு-போரில் 
      காலனும் அஞ்சக் கலக்கு மராட்டர், 
பொன்னகர்த் தேவர்க ளொப்ப-நிற்கும் 
      பொற்புடை யார்இந்துஸ் தானத்து மல்லர்.(தாயின்)
8.
பூதலம் முற்றிடும் வரையும்-அறப் 
      போர்விறல் யாவும் மறப்புறும் வரையும், 
      மாதர்கள் கற்புள்ள வரையும்-பாரில் 
மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர்(தாயின்)
9.
பஞ்ச நதத்துப் பிறந்தோர்-முன்னைப் 
      பார்த்தன் முதற்பலர் வாழ்ந்தநன் னாட்டார், 
துஞ்சும் பொழுதினும் தாயின்-பதத் 
      தொண்டு நினைத்திடும் வங்கத்தி னோரும்.(தாயின்)
10.
சேர்ந்ததைக் காப்பது காணீர்!-அவர் 
      சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க! 
தேர்ந்தவர் போற்றும் பரத-நிலத் 
      தேவி துவஜம் சிறப்புற வாழ்க!(தாயின்)

tamilandvedas.com, swamiindology.blogspot.com

–subham–

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: