
Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 17 June 2019
British Summer Time uploaded in London – 13-45
Post No. 6561
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com







பாரத நாடு
14. தாயின் மணிக்கொடி
பாரத நாட்டுக் கொடியினைப் புகழ்தல்
தாயுமானவர்
ஆனந்தக்களிப்பு மெட்டு
பல்லவி
தாயின்
மணிக்கொடி பாரீர்!- அதைத்
தாழ்ந்து
பணிந்து புகழ்ந்திட வாரீர்!
சரணங்கள்
1.
ஓங்கி
வளர்ந்ததோர் கம்பம்-அதன்
உச்சியின் மேல்‘வந்தே மாதரம்’என்றே
பாங்கின்
எழுதித் திகழும்-செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்!(தாயின்)
2.
பட்டுத்
துகிலென லாமோ?-அதில்
பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று
மட்டு
மிகந்தடித் தாலும்-அதை
மதியாதவ் வுறுதிகொள் மாணிக்கப் படலம்(தாயின்)
3.
இந்திரன்
வச்சிரம் ஓர்பால்-அதில்
எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால்,-(தாய்)
மந்திரம்
நடுவுறத் தோன்றும்-அதன்
மாண்பை வகுத்திட வல்லவன் யானோ?(தாயின்)
4.
கம்பத்தின்
கீழ்நிற் றல்காணீர்-எங்கும்
காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற்
குரியர்அவ் வீரர்;-தங்கள்
நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார்(தாயின்)
5.
அணியணி
யாயவர் நிற்கும்-இந்த
ஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ?
பணிகள்
பொருந்திய மார்பும்-விறல்
பைந்திரு வோங்கும் வடிவமும் காணீர்!(தாயின்)
6.
செந்தமிழ் நாட்டுப்
பொருநர்,-கொடுந்
தீக்கண் மறவர்கள், சேரன்தன்
வீரர்,
சிந்தை
துணிந்த தெலுங்கர்,-தாயின்
சேவடிக் கேபணி செய்திடு துளுவர்.(தாயின்)
7.
கன்னடர்
ஒட்டிய ரோடு-போரில்
காலனும் அஞ்சக் கலக்கு மராட்டர்,
பொன்னகர்த்
தேவர்க ளொப்ப-நிற்கும்
பொற்புடை யார்இந்துஸ் தானத்து மல்லர்.(தாயின்)
8.
பூதலம்
முற்றிடும் வரையும்-அறப்
போர்விறல் யாவும் மறப்புறும் வரையும்,
மாதர்கள் கற்புள்ள வரையும்-பாரில்
மறைவரும்
கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர்(தாயின்)
9.
பஞ்ச
நதத்துப் பிறந்தோர்-முன்னைப்
பார்த்தன் முதற்பலர் வாழ்ந்தநன் னாட்டார்,
துஞ்சும்
பொழுதினும் தாயின்-பதத்
தொண்டு நினைத்திடும் வங்கத்தி னோரும்.(தாயின்)
10.
சேர்ந்ததைக் காப்பது காணீர்!-அவர்
சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க!
தேர்ந்தவர்
போற்றும் பரத-நிலத்
தேவி துவஜம் சிறப்புற வாழ்க!(தாயின்)
tamilandvedas.com, swamiindology.blogspot.com
–subham–
