
WRITTEN BY S Nagarajan
swami_48@yahoo.com
Date: 25 SEPTEMBER 2019
British Summer Time uploaded in London – 15-30
Post No. 7014
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.






வள்ளுவர் புரை தீர்ந்த நன்மை பயக்குமெனில் பொய் சொல்வதில் தப்பில்லை என்கிறார்.
நரியைக் காப்பாற்ற ரஸ்ஸல் பொய் சொன்னார். ஆனால் அந்த நன்மை பயக்கும் பொய்யைக் கூட சத்திய சோதனை செய்து வந்த காந்திஜி ஒத்துக் கொள்ளவில்லை.
*
காந்திஜி வழியில் இன்னொரு கதை உண்டு.
ஒரு முறை துர்வாஸ முனிவரிடம் ஒரு மான் அடைக்கலம் புகுந்தது.தன்னைத் தேடிக் கொண்டு வேட்டைக்காரர்கள் வருவதாகவும் அவரிடம் அடைக்கலம் புகுவதாகவும் கூறிச் சரணடைந்தது.
துர்வாஸ மஹரிஷி அதை தன் ஆசனத்தின் பின்னால் மறைத்து வைத்தார்.
வேட்டைக்காரர்கள் வந்தனர். மானைப் பார்த்தீர்களா என்று கேட்டனர்.
துர்வாஸ முனிவரின் கண்கள் சிவந்தன. கோபம் கொப்பளிப்பது போல அவர் முகம் மாறியது.
‘என்ன கேட்டீர்கள்’ என்று அவர் உரக்க வேட்டைக்காரர்களை நோக்கிக் கேட்டார்.
துர்வாஸ மஹரிஷியின் கோபம் நாடறிந்த ஒன்று.
எங்கே தவம் கலைந்த நேரத்தில் அதற்குத் தாம் தான் காரணம் என்று சபிக்கப் போகிறாரோ என்று வேட்டைக்காரர்கள் பயந்தனர்.
அந்த இடத்தை விட்டு ஓடோடிச் சென்றனர்.
மான் பிழைத்தது; மஹரிஷியும் மகிழ்ந்தார்.
ஒரே விஷயம். பல விதமான கருத்துக்கள்.
வீரராகவ முதலியார், பர்ட்ரெண்ட் ரஸ்ஸல், மஹாத்மா காந்திஜி, துர்வாஸ மஹரிஷி ஆகிய இவர்கள் கூறிய அனைத்தையும் பார்க்கும் போது சத்தியம் என்பது கத்தி முனையை விடக் கூர்மையானது; அதை முதன்மையாகக் கொண்ட தர்மம் இன்னும் சூக்ஷ்மமானது என்று தெரிகிறது.
யத் பாவம் தத் பவதி!
(இதிலும் கூட) உள்ளத்தின் உணர்விற்கேற்ப உண்மை அமைகிறது.
சத்யமேவ ஜயதே!
***