
WRITTEN by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 30 OCTOBER 2019
Time in London – 7-59 AM
Post No. 7157
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
போரில் பிறந்த புஸ்தகங்கள் என்ற என்னுடைய கட்டுரை 1992 பிப்ரவரி 9-ல் தினமணிப் பத்திரிக்கையில் வெளியானது.
அந்தக்காலத்தில் அரசியல் என்பது சாக்கடையென்றும் அதுதான் அயோக்கியர்களின் கடைசி புகலிடம் (Politics is the last refuge of a scoundrel என்றும் சொல்லுவர். இப்பொழுது அதை பத்திரிக்கை, டெலிவிஷன், திரைப்படம் போன்ற மாஸ் மீடியா (Mass Media people ) பேர்வழிகளுக்குச் சூட்டலாம். எப்படி ஒரு போரில் அதிகமான பேர் இறக்க, இறக்க தாக்கியவனுகு சந்தோஷம் வருமோ அது போல அதிகம் பேர் இறக்க, இறக்க பத்திரிக்கைக் கா ரனுக்குக் கொண்டாட்டம். ஊர் இரண்டுபட்டால் அவர்களுக்கு அதிக Sales ஸேல்ஸ்.
வெளிநாடுகளைத் தாக்கும்போது பத்திரிக்கையாளர்கள் ஒரு படி மேலே சென்று கூடுதலாகப் பொய் சொல்லுவார்கள். இல்லாததையும் பொல்லாததையும் போட்டி போட்டுக் கொண்டு ஜோடித்து எழுதுவார்கள்.
போர் தொடுக்கும் நாடு பொருளாதார லாபத்துக்காகவும், அந்த நாட்டு வணிக கான்ட் ராக்டுகளுக்கும், அங்கேயுள்ள பெட் ரோ லியம், யுரேனியம், தங்கம், வைரம் ஆகியவற்றைக் கொள்ளையடிக்கவும் திட்டம் போடும். மாஸ் மீடியாவுக்கு இதில் பங்கு கிடைக்காது. ஆனால் அரசு விளம்பரங்கள் கிடைக்கும். அவர்கள் புஸ்தகமும் கட்டுரைகளும் எழுதி காசு சம்பாதிப்பர். சுருக்கமாகச் சொல்லபோனால் பிணம் தின்னிக் கழுகுகள். இதோ 1992ல் குவையத் – இராக் போர் நடந்த பின்னர் எழுந்த புஸ்தகங்களைப் பாருங்கள்:–

9th February 2019 Dinamani






