கிரேக்க நாட்டிலும் யூத மதத்திலும் பெண்கள் (Post No.7592)

When i went to Greece, i visited the historical island Santorini. I took this picture in Santorini.

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7592

Date uploaded in London – 19 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

தம்பதி என்ற சொல் வேதத்தில் வருகிறது. இதன் சம்ஸ்கிருதப் பொருள்- கணவனும் மனைவியும் குடும்பத்தின், வீட்டின் கூட்டுச்  சொந்தக்காரர்கள் என்பதாகும். இதை விளக்கும் வகையில் சிவனும் உமையும் அர்த்தநாரீஸ்வரர்  வடிவத்தில் காட்டப்பட்டுள்ளது  . அதாவது உறவினில் ல் 50-50; உரிமையில் 50-50. tamilandvedas.com, swamiindology.blogspot.com

தம்பதி – ரிக் வேதம் 8-31-5/6

யா தம்பதி சமனஸா சுனுதா அ ச

தாவள: தேவஸோ நியயாசிர்

Xxx

இல்லாள், இல்லத்தரசி

Picture card bought in Athens Museum

தமிழில் இல்லாள், இல்லத்தரசி என்றெல்லாம் சொல்கிறோம். இதுவும் தமிழில் வருவதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே ரிக்வேதத்தில் உள்ளது. கல்யாண மந்திரங்களில் ‘நீயே வீட்டுக்கு ராணி’ என்று வருகிறது.

சங்க இலக்கியப்  பாடல்களில் மனைவியை ‘குடும்ப விளக்கு’ என்று அற்புதமாக வருணிக்கிறரர்கள் .

ரிக் வேதம் (3-53-4) மனைவியே வீடு என்கிறது.

கிருஹம் என்றால் வீடு/ இல்லம். கிருஹிணி  என்றால் வீட்டுக்காரி , இல்லாள் , இல்லத்தரசி ; அதாவது இல்லத்தை ஆள்பவள். தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் இந்தக்கருத்து அப்படியே இருப்பது இமயம் முதல் குமரி வரை ஒரே சிந்தனை, ஒரே அணுகுமுறை, ஒரே பண்பாடு என்பதைத் தெள்ளிதின் tamilandvedas.com, swamiindology.blogspot.com

விளக்கும்.

Xxx

மணப் பெண்

இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்ட வேண்டும் . ‘வது’ என்ற சொல் சம்ஸ்கிருதத்தில் மணப் பெண் என்ற பொருளிலும் வரும். சங்கத் தமிழ் பாடல்களிலும் இந்த ரிக் வேதச்  சொல் அதே பொருளில் பயன்படுத்தப்படுகிறது.

Xxx

தொழிற்சாலைகளில் பெண்கள்

துணி நெய்தல், நூல் நூற்றல் ஆகிய தொழில்களில் வேதகாலப் பெண்கள் ஈடுபட்டிருந்தனர். ஆனால் வியப்பா ன விஷயம் அவர்கள் போர்க் கருவி செய்யு ம் ஆலைகளிலும் வேலை பார்த்ததை ‘இஷு கர்த்ரயாக’ என்ற சொல் காட்டுகிறது.

வேத காலத்தில் ‘பர்தா’ முறை கிடையாது. இதை பாரதியார் பாடலிலும் வலியுறுத்துகிறார். இது தில்லித் துருக்கர் (துலுக்கர்) செய்தவழக்கமடி என்று சாடுகிறார். துலுக்கர் என்று பாரதியார்  எழுதியதை சில தமிழ் அறிஞர்கள் ஒன்றுகூடி துருக்கர் என்று மாற்றியதாக எங்கள் தமிழ் குருநாதர் , மதுரை சேதுபதி உயர் நிலைப் பள்ளி ஆசிரியர் வி.ஜி.சீனிவாசன் சொல்லி tamilandvedas.com, swamiindology.blogspot.com வருத்தப்படுவார்.

xxx

கிரேக்க நாட்டிலும் யூத மதத்திலும் பெண்கள்.

Picture card from Athens Museum

வேதம் தோன்றிய சுமார் ஆயிரம் வருடங்களுக்குப் பின்னர் கிரேக்க மொழியில் ஹோமர் என்னும் அந்தகக் கவிராயர் (Blind Poet Homer) இலியட், ஆடிஸி என்ற இரு பெரும் காவியங்களை எழுதினார்.

அதில் அக்காலப் பெண்கள் எப்படி  நடத்தப்பட்டனர் என்று வருகிறது. ஒரு மன்னர் வேற்று நாட்டை வென்றால் அந்த நாட்டிலுள்ள பெண்களை  வீரர்கள்  அ னைவரும்  பகிர்ந்து கொள்ளலாம். “வாருங்கள் வீரர்களே, அணி திரண்டு வாருங்கள். நாம் வெற்றி பெற்று வேற்று நாட்டுப் பெண்களை பகிர்ந்து கொள்வோம்” என்று ஹோமர் அறைகூவல் விடுக்கிறார். இந்து மன்னர்கள், வேற்று நாட்டு செல்வங்களைப்  பகிர்ந்து கொள் வார்கள். ஆனால் பெண்களை மதிப்புடன் நடத்துவர். வீர சிவாஜி முஸ்லீம் மகளிரை எவ்வளவு மதிப்புடன் நடத்தினார் என்பதை நாம் tamilandvedas.com, swamiindology.blogspot.com அறிவோம்.

வேதத்தில் சில பாடல்களை சகோதர -சகோதரி திருமணம் நடந்ததாக சிலர் சித்தரிப்பர். எகிப்தில் இவ்வழக்கம் இருந்தது. தமிழ் நாட்டில் இப்போது காணப்படும் அத்தை மகன், மாமன் மகள் கல்யாணத்தையும்  ஆங்கிலேயர் ‘கஸின் மேரியேஜ்’ (Cousin Marriage) என்றே சொல்லுவர்; அதாவது ‘ஒன்றுவிட்ட சகோதரர்’ என்னும் பொருள். இது வேதகாலத்தில் இருந்திருக்கலாம். கிருஷ்ணர் விஷயத்திலும் இதைக் காண்கிறோம். அதாவது உறவு முறைத் திருமணம்- முறைப் பெண் கல்யாணம்.

கணவன் இறந்த பின் மனைவி உடன்கட்டை ஏறுவது பிற்கால வழக்கம். புற  நானுற்று பாடலில் பாண்டிய ராணி பூதப்பாண்டியன் தேவி இப்படி உடன்கட்டை ஏறிதைக் காண்கிறோம். வேதகாலத்தில் இது குறைவு . அதற்குப் பதிலாக இறந்து போன கணவரின் சகோதரன் அவளை மனைவியாக ஏற்பான் . இந்த வழக்கம் யூதர்களிடையேயும் tamilandvedas.com, swamiindology.blogspot.com இருந்தது.

பார்ஸி மதத்தினரின் வேத நூலான ஜெண்ட் அவஸ்தா(Zend Avesta) கணவனுக்கு கீழ் படிந்து பெண்கள் நடக்க வேண்டும் என்கிறது. இதையெல்லாம் ஒப்பிட்டுக் கட்டுரை எழுதிய டாக்டர் ராதாகிருஷ்ணன் , டாக்டர் ரமேஷ் சந்திர மஜூம்தார் போன்ற பேரறிஞர்கள் வேத காலப் பெண்கள் வாழ்வே சிறந்தது என்று உறுதிபடப் tamilandvedas.com, swamiindology.blogspot.com பேசுகிறார்கள்

Source book –  Great Women of India, Advaita Ashrama, Mayavati, Almora, Himalayas, year 1953 (with my inputs from Tamil literature )

xxx

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: