
WRITTEN BY R. NANJAPPA
Post No.7874
Date uploaded in London – – 24 April 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஹிந்தி படப் பாடல்கள் – 16 – கலையின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்!
R.Nanjappa
கலையின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்

உலகில் ஒவ்வொரு கலையும் ஒரு பரிணாம விதிக்கு உட்பட்டது போலும். எங்கோ, எப்படியோ தோன்றி வளர்ச்சியடைந்து ஓர் உன்னத நிலை எய்துகிறது; பின்னர், படிப்படியாகச் சரிந்து விடுகிறது. அஜந்தா, சித்தன்னவாசல் போன்ற சித்திரக்கலை இன்று இல்லை. நம் புராதனக் கோவில்கள் போன்று இன்று கட்ட முடியாது. கலை இருக்கிறது–ஆகம, சில்ப சாஸ்திரம் இருக்கிறது. ஆனால் அந்த புராதனக் கோவில் போன்று இன்று கட்ட முடியுமா? அதற்கு ஆதரவு இல்லை. பெரிய அளவில் செய்ய இயலாது.
கோவில் கட்டும் கலை
ஸ்ரீ ரமணாஸ்ரமத்தில் பகவானின் தாயார்– ஸ்ரீ மாத்ருபூதேஸ்வரர் – கோவில் 1939ல் கட்டத் தொடங்கி 10 ஆண்டுகள் சிரமப்பட்டு 1949ல் நிறைவுபெற்றது. மிகச் சிறிய கோவில்தான். ஆனால் அற்புத சிற்ப வேலைப்பாடுகள் கொண்டது–ஆகம விதி மீறாமல் கட்டப்பட்டது. இதைப் பார்வையிட்ட அன்றைய கவர்னர் ஜெனரல் ராஜாஜி அசந்துபோனார். இத்தகைய கலை அழிந்துபோகக் கூடாது என நினைத்தார். அதன் விளைவாக அரசினர் சிற்பக் கல்லூரி மஹாபலிபுரத்தில் தோன்றியது. இந்தக் கோவில் கட்டிய ஸ்ரீ வைத்யநாத ஸ்தபதியே அக்கல்லூரியின் முதல் முதல்வரானார். கலை அழியவில்லை–ஆனால் முன்புபோல் massive scale இன்று நடக்குமா? அந்த சகாப்தம் இன்று இல்லையே.
இதற்கும் சினிமா இசைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன்.
1930களில் தொடங்கிய திரை இசை 40களில் வளர்ச்சியடைந்தது. 1950களில் புதிய உத்தி, வடிவம், பொலிவு பெற்று உச்ச நிலை எய்தியது. அதற்குப் பிறகு சரிவுதான். அந்தத் துறையைச் சேர்ந்தவர்களே 50களைத்தான் பொற்காலம் என்று சொல்கிறார்கள். நடப்பது பிளாஸ்டிக் காலம் போலும்!
இசை என்று அங்கங்கும் கூப்பாடு போடுகிறார்கள்.ஆரவாரம் மிகுந்துவிட்டது. ஆனால் முன்பிருந்த தரம் இல்லையே! இன்று டாப் ஹிட் என்று ஒரு பாடலை கொண்டாடுகிறார்கள் மூன்று மாதத்தில் அதை மறந்துவிடுகிறாகள். எல்லாம் இன்ஸ்டன்ட் காஃபி மாதிரிதான். பழைய கோவில்கள் போன்று 50களின் இசை இன்னும் மதித்துக் கேட்கப்படுகிறது. இன்று வியாபார உத்திகள் பெருகிவிட்டன, கலையம்சம் குறைந்துவிட்டது. தொழில் நுட்பம் வளராத அந்த நாட்களில் உன்னத இசை படைத்தார்கள். தொழில் நுட்பம் மிகுந்துவிட்ட இந்த நாட்களில், அந்தத் தரம் இல்லை. நடைபாதைக் கோயில்கள் போன்று ஏதோ நடக்கிறது!
ரமணாசிரமக் கோயில் எங்கோ மூலையில் இருப்பதுபோல். நல்ல இசையும் எங்கோ முடங்கிக்கிடக்கிறது!
டூயட்– சிறப்புச் செல்வம்!
டூயட் பாடல்களை உருவாக்குவது ஒரு சிறப்புக் கலை. பாடகர்–படகி குரல்கள் அடிப்படையிலேயே வித்தியாசமானவை. சுருதிகள் வேறுபடும். பாடகர்கள் பாடும் பாட்டை பாடகிகள் பாடுவதாக சில சமயம் அமையும், அவற்றைக் கவனமாகக் கேட்டுப் பாருங்கள்– வித்தியாசம் புரியும். ஆனால் இருவரும் சேர்ந்து பாடும்போது அவை தனிச் சிறப்புப் பெறுகின்றன, இது நம் இசைஞர்களின் திறமைக்கு ஒரு சான்று!

இப்படி அமைந்த சில பாடல்களைப் பார்ப்போம்.
ஓ தேகே தோ
वो देखे तो उनकी इनायत, ना देखे तो रोना क्या
जो दिल गैर का हो उसका होना क्या और ना होना क्या
ஓ தேகே தோ உன் கீ இனாயத் நா தேகே தோ ரோனா க்யா
ஜோ தில் கைர் கா ஹோ உஸ்கா ஹோனா க்யா ஔர் நா ஹோனா க்யா
அவள் என் பக்கம் பார்த்தாள் என்றால், அது அவள் நல்ல மனது.
பார்க்கவில்லையென்றால் அதற்காக அழவேண்டுமா?
அறிமுகமாகாதவரின் மனது உன் பக்கம் இல்லையென்றால்,
அதனால் ஆவதென்ன, ஆகாததென்ன? ( நமக்கென்ன?)
इश्क दिलों का मेल है प्यारे, ये नज़रों का खेल नहीं
जब तक दो दिल एक ना हो ले, दिल की लगी का रोना क्या
இஷ்க் திலோ(ன்) கா மேல் ஹை ப்யாரே, யே நஃஜ்ரோ(ன்) கா கே நஹீ,
யே நஃஜ்ரோ(ன்) கா கேல் நஹீ
ஜப் தக் தோ தில் ஏக் நா ஹோலே, தில் கீ லகீ கா ரோனா க்யா
காதல் என்பது மனங்கள் ஒன்று சேர்வதே யாகும்.
இது கண்களின் கூத்தில்லை, கண்களின் விளையாட்டு இல்லை!
இப்படி இரு மனங்கள் ஓன்றுபடவில்லையெனில், அது காதல் இல்லையே
அதற்காக ஏன் அழவேண்டும்?
इश्क की बाजी सीधी बाजी, दिल जीतो और दिल हारो
इस सौदे में ओ दिलवालों, पाना क्या और खोना क्या
இஷ்க் கீ பாஜீ ஸீதீ பாஜீ, தில் ஜீதோ ஔர் தில் ஹாரோ
இஸ் சௌதே மே ஓ தில்வாலோ, பானா க்யா ஔர் கோனா க்யா
இந்த காதல் என்னும் விஷயம் நேரடியானது–
ஒருவர் மனதில் இடம்பிடி, உன் மனதைக் கொடுத்துவிடு!
இந்த விவகாரத்தில் எது லாபம்? எது நஷ்டம்?
நல்ல மனதுடையவர்களே, யோசியுங்கள்!
Song: Wo Dekhe tho unki inayat Film: Funtoosh 1956 Lyricist: Sahir Ludhianvi
Music: S.D.Burman Singers: Kishore Kumar & Asha Bhonsle
What a fantastic song! What a tremendous message the poet is bringing! Love is not light hearted affair. It is serious and straight. It is not a plaything.
What a composition by Burmanda!
People said KIshore was not formally trained. They should listen to how he sings the passages ‘Haiya ho haiyaa” and ‘Ishq ki baaji”. This song is based on the Raag Gaud Sarang and Kishore sang it with such verve! And yet how modern it sounds! That is the genius of our old music directors. To repeat a Raga note by note-swara by swara- is not art. It is imitation. Creation is taking some notes and making a tune! Out of three notes, a star is born, as Browning said!
கிஷோர்குமாரின் ‘ஜீனியஸ்’ஸிற்கு எல்லையே இல்லை! மேற் கண்ட பாட்டிலிருந்து முற்றும் மாறுபட்ட ஒரு பாடலைக் கேளூங்கள்:

யே ஸமா ஹம் தும் ஜவான்
adi odley ae oyee
ki yodley ae oyee
ये समाँ, हम–तुम जवाँ, पहलू से दिल सरक जाए
ये प्यार की टेढ़ी गली, अब छोड़ी न जाए, हाय रे हाय
யே ஸமா ஹம் தும் ஜவா(ன்), ஃபஹலூ சே தில் ஸரக் ஜாய்
யே ப்யார் கீ டேதீ கலீ, அப் சோடீ ந ஜாய், ஹாய் ரே ஹாய்
இனிய பொழுது, நாம் இருவரும் இளவயது, மனம் நழுவிப் போகிறதே!
காதலின் இந்த வளைந்து போகும் பாதை– அது விலகாமல் இருக்கவேண்டுமே!
मिल जाए गर तुझसे नज़र, नन्हा–सा दिल धड़क जाए
ये प्यार की टेढ़ी गली, अब छोड़ी न जाए, हाय रे हाय
மில் ஜாயே கர் துஜ் ஸே நஃஜர் நன் ஹா ஸா தில் தடக் ஜாய்
யே ப்யார் கீ டேதீ கலீ, அப் சோடீ ந ஜாய், ஹாய் ரே ஹாய்
உன்னைக் கண்டதும் இந்தச் சிறிய மனது படபடக்கிறதே!
காதலின் இந்த வளைந்த பாதை விலகாமல் இருக்க வேண்டுமே!
la la la laa laa
la la la laa laa
adi odley ae oyee
ki yodeli ae oyee
भीगी–भीगी ये चाँदनी रात आँखों–ही–आँखों में जाए रे
मैं कुछ कहूँ दिल कुछ कहे, याद बैरी बलम की सताए रे
बिन तेरे मुझको ग़म घेरे, रहे मेरा दिल उदास हरदम
चिकी बम चिकी बम चिकी चिकी बम बम
ये तो चोरी–चोरी मिलने का मौसम
ये समाँ, हम–तुम जवाँ
…
பீகீ பீகீ யே சாந்த்னீ ராத் ஆ(ன்)கோ ஹீ ஆ(ன்)கோ மே ஜாயேரே
மை குச் கஹூ(ன்) தில் குச் கஹே, யாத் பைரீ பலம் கீ ஸதாயேரே
பின் தேரே முஜ் கோ கம் கேரே, ரஹே மேரா தில் உதாஸ் ஹர் தம்
சிகி பம் சிகி பம் சிகி சிகி பம் பம்
யே தோ சோரீ சோரீ மில்னே கா மௌஸம்
யே ஸமா, ஹம் தும் ஜவா(ன்)……..
நிலவொளி தவழும் இந்த இரவு–மெல்ல மெல்ல கண்களைத் தழுவுகிறதே!
நான் ஏதோ சொல்கிறேன், மனது ஏதோ சொல்கிறது–
அன்பரின் நினைவு மனதை அலைக்கிறதே!
நீ இல்லாமல் என்னை வருத்தம் அணைத்துக்கொண்டுவிட்டது
மனது சதாகாலமும் வருத்தமாகவே இருக்கிறது!
நாம் ரகசியமாகச் சந்திக்கவேண்டிய நேரமிது.
la la la laa laa
la la la laa laa
adi odley ae oyee
ki yodley ae oyee
मेरी–मेरी, नज़रों के भेजे हुए तार का तो जवाब दो
मेरे–मेरे, थी क्या ख़बर तुम भी नीयत के इतने ख़राब हो
तेरी बांकी नज़र की झांकी, लड़खड़ाती है मेरे क़दम
चिकी बम चिकी बम चिकी चिकी बम बम
ये तो चोरी–चोरी मिलने का मौसम
ये समाँ, हम–तुम जवाँ …
மேரீ மேரீ நஃஜ்ரோ கே பேஜே ஹுயே தார் கா தோ ஜவாப் தோ
மேரே மேரே தீ க்யா கபர் தும் பீ னீயத் கே இத்னே கராப் ஹோ
தேரீ பா(ன்)கீ நஃஜர் கீ ஜாங்கீ, தட்கடாதீ ஹை மேரே ஸனம்
சிகி பம் சிகி பம் சிகி சிகி பம் பம்
யே தோ சோரீ சோரீ மில்னே கா மௌஸம்
யே ஸமா ஹம் தும் ஜவா(ன்)……..
லல ல லாலா, லல ல லாலா..
என் கண்கள் அனுப்பிய செய்திக்குப் பதில் என்ன?
நீ இப்படியெல்லாம் நியதி மீறி நடந்துகொள்வாய் என எப்படித் தெரியும்?
உன் கண்களின் அசைவைக் கண்டு என் கால்கள் தள்ளாடுகின்றன!
நாம் ரகசியமாக சந்திகவேண்டிய நேரமிது!
Song: Ye sama hum tum jawan Film: Mshuka 1953 Lyricist: Shailendra
Music; Roshan Singers: Kishore Kumar & Meena Kapoor.
இது ஷைலேந்த்ராவின் சிறந்த பாடல் எனச் சொல்லமுடியாது, பண்பாடு உள்ளவர்கள் cultured circles பேசக் கூசும் சில சொற்களைப் பயன்படுத்துகிறார்.[ தேரே பா(ன்)கீ, நஜர் கீ ஜா(ன்)கீ, நஜ்ரோனே பேஜே ஹுயே தார், etc] இதற்குக் காரணம் இருக்கவேண்டும்!
இந்தப் படம் பாடகர் முகேஷ் எடுத்தது, அவரே ஹீரோ. அதனால் இந்தப் பாட்டு அவருக்காக எழுதியதல்ல. காமெடி நடிகர் ஆகாவுக்காக எழுதியது. அதனால் இப்படிப் பட்ட நமக்குப் பொருந்தாத சொற்கள் வருகின்றன போலும்! ஆனால் நாம் இங்கு கவிதைக்காக இந்தப் பாடலைப் பார்க்கவில்லை! அதன் இசைக்காகவே பார்க்கிறோம்.
எத்தனை racing, light-hearted பாடல், பாருங்கள். இரண்டு சுருதி நிலை உள்ளவர்களின் குரலை இழைத்திருகிறார்! மீனா கபூரின் குரலில் தான் எத்தனை குழைவு! இனிமையோ இனிமை! கடைசி வரிகளில் இரண்டு சுருதி உள்ள இருவரையும் சேர்ந்தே, இரண்டு சுருதிகளிலேயே இணைந்து பாடவைத்திருகிறார்– மீண்டும் கேளுங்கள். ஆனால் காதுக்கு இதமாகவே இருக்கிறது! இது அசாத்யச் செயல். சபாஷ் ரோஷன்!
இந்தப் பாடலில் Yodeling என்னும் உத்தியை முதன் முதலில் இந்தியத் திரை இசைக்கு அறிமுகப் படுத்தினார் கிஷோர்குமார்! இவருக்கு முன்னும் பின்னும் இந்த யாடலிங்க் வேறு எவருக்கும் வராத புதுமை! சபாஷ் கிஷோர்!
மீனா கபூர் நல்ல பாடகர். பாவம். லதாவின் நிழலில் அவருக்கு அதிக வாய்ப்பு இல்லை!
ரோஷன் சிறந்த, ரசனைமிக்க sensitive இசைஞர், பாவம் அதிக நாள் இருக்கவில்லை. “பர்ஸாத் கீ ராத்” (1960) என்ற படத்தில் இவர் அமைத்த “கவ்வாலி” [ ந தோ கார்வான் கீ தலாஷ் ஹை}] நமது சினிமா உலகிலேயே இன்றுவரை தலையிடத்தைப் பெற்றுத் திகழ்கிறது! அதை மிஞ்ச ஆளில்லை!
இந்த மஷூகா படம் படுதோல்வி கண்டது. அதனால் இந்தப் பாட்டு பிரபலமடையவில்லை.
கேட்டு ரசிப்பதற்கு நமக்கென்ன தடை!
இனி, இன்னொரு கிஷோர் பாடிய டூயட் பார்ப்போம்:

ஆங்கோ(ன்) மே க்யா ஜீ
आँखों में क्या जी, रुपहला बादल
बादल में क्या जी, किसी का आँचल
आँचल में क्या जी, अजब सी हलचल
ஆ(ன்)கோ மே க்யா ஜீ, ருபஹலா பாதல்
பாதல் மே க்யாஜீ, கிஸீ கா ஆஞ்சல்
ஆஞ்சல் மே க்யாஜீ, அஜப் ஸீ ஹல்சல்!
உன் கண்ணில் தான் என்னவோ?
அதுவா, அழகிய மேகம்!
மேகத்தில் தான் என்னவோ?
யாரோ ஒருவரின் முந்தானை!
அந்த முந்தானையில் தான் என்னவோ?
ஓ, அங்கு வினோத அசைவு!
रंगीं है मौसम
तेरे दम की बहार है
फिर भी है कुछ कम
बस तेरा इंतज़ार है
देखने में भोले हो पर हो बड़े चंचल
आँखों में क्या जी…
ரங்கீ(ன்) ஹை மௌசம்
தேரே தம் கீ பஹார் ஹை
ஃபிர் பீ ஹை குச் கம்?
பஸ், தேரா இந்தஃஜார் ஹை!
தேக் நே மே போலே ஹை பர் ஹோ படே சன்சல்
ஆன்) கொ மே க்யா ஜீ
பொழுது ரம்யமாக இருக்கிறது!
அது உன் மூச்சுக் காற்றால் உண்டான வசந்தம்!
இருந்தாலும் ஏதோ குறைகிறதோ?
ஓ அதுவா, அது உனக்காகக் காத்திருப்பதுதான்! ( நீ இன்னமும் வரவில்லையே, அதுதான்)
பார்ப்பதற்கு சொத்தையாய் இருக்கிறாய், ஆனால் நீ குறும்பு பிடித்த ஆள் தான்!
झुकती है पलकें
झुकने दो और झूम के
उड़ती है ज़ुल्फें
उड़ने दो होंठ चूम के
देखने में भोले हो पर हो बड़े चंचल
आँखों में क्या जी…
ஜுக்தீ ஹை பல்கே(ன்)
ஜுக்னே தோ ஔர் ஜூம் கே
உட்தீ ஹை ஜுல்ஃபே(ன்)
உட்னே தோ ஹோன்ட் சூம் கே
தேக்னே மே போலே ஹோ பர் ஹோ படே சன்சல்
ஆ(ன்)கோ மே க்யாஜி..
கண் இமைகள் கீழே தாழ்கின்றனவே?.
இன்னும் தான் ஜோராகத் தாழட்டுமே!.
கூந்தல் விரிந்து எழுகின்றதே?
எழுந்து உதடுகளைத் தான் தழுவட்டுமே!
ஓ பார்ப்பதற்கு சொத்தையாய் இருக்கிறாய், ஆனால் குறும்பு போகவில்லையே!
झूमें लहराएं
नयना मिल जाये नैन से
साथी बन जाएँ
रस्ता कट जाये चैन से
देखने में भोले हो पर हो बड़े चंचल
आँखों में क्या जी…
ஜூமே லஹராயே
நைனா மில் ஜாயே நைன் ஸே
ஸாதீ பன் ஜாயே(ன்)
ரஸ்தா கட் ஜாயே சைன் ஸே
தேக்னே மே போலே ஹோ பர் ஹோ படே சன்சல்
ஆ(ன்) கோ மே க்யா ஜீ……
மகிழ்ச்சி அலை பொங்குகிறதே!
நம் கண்களின் பார்வை இணையட்டுமே!
நாம் சேர்ந்தே பயணம் செய்வோமே!
ஐயோ, பாதை கண்களிலிருந்து மறைந்துவிடுமே!
ஓ நீ பார்ப்பதற்கு சொத்தை, ஆனல் குறும்பு போகவில்லையே
ஓ கண்ணில் தான் என்னவோ?
Song: Ankhon mein kya ji Film: Nau Do Gyarah 1957 Lyricist: Majrooh Sultanpuri
Music: S.D.Burman Singers: Kishore Kumar & Asha Bhonsle

இதுவும் ஒரு கேள்வி–பதில் பாடல் Teasing– குறும்புத்தனம் வெளியாகிறது. .மஜ்ரூஹ் சுல்தான்புரியின் கவிதை இதை அழகாக கொண்டுசெல்கிறது!
கிஷோர்–ஆஷா பாடிய பல ஹிட் பாடல்களில் இதுவும் ஒன்று. குறும்புத்தனம் பாடல் தொனியிலேயே தெரிகிறது!
Ideal romantic song, polished expressions, and sung in a jovial spirit! S.D.Burman was 51 years old when he composed this youngish melody! Makes one feel young!
ஸாஹிர் லுதியான்வி பிரிந்தபின், மஜ்ரூஹ் பர்மன் படங்களுக்கு பாடல்கள் எழுதினார். சிலர் படங்களில் டூயட் எடுபடுவதில்லை என்று சொல்லி வந்தனர். மஜ்ரூஹ் ஒப்பவில்லை. ஆடத்தெரியாத ஆசாமி கூடம் பத்தாது என்று சொல்வதைப் போன்றது இது, பாட்டு நன்றாக இருந்தால் ரசிப்பார்கள் என்று சொன்னர். பல ஹிட் டூயட்களை எழுதினார்.1992 வரை எழுதினார். தீவிர கம்யூனிஸப் பற்றுள்ள இவர் புரட்சி அரசியலில் சம்பந்தப்பட்டதாகக் கருதப்பட்டு 2 ஆண்டுகள் சிறையில் இருந்தார். ரஷ்யாவிலும் சீனாவிலும் கம்யூனிஸம் போன போக்கைக் கண்டு வெறுப்படைந்தார், கவிதையிலேயே காலம் கழித்தார். சிறந்த உருதுக் கவிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
tags – ஹிந்தி படப் பாடல்கள் – 16 , கலை, வளர்ச்சி,
***
.