
Post No. 8083
Date uploaded in London – 1 June 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தமிழ் ஒரு வினோத மொழி
பழங்கால மொழிகளில் தமிழ் ஒரு வினோத மொழி. தமிழில் நிறைய எழுத்துக்கள் முதல் எழுத்தாக வராது. ஆனால் தொல்காப்பியர் சொன்ன விதிகளையும் மீறி சில விஷயங்கள் நடந்துள்ளன.
சம்ஸ்க்ருதத்தில் க் , ச் ம் , ன் முதலிய எல்லா எழுத்துக்களிலும் சொற்கள் உண்டு. ஆனால் தமிழ் மொழியில் புள்ளி வாய்த்த மெய் எழுத்துக்களில் துவங்க மாட்டோம்.
‘ஒள’ என்ற எழுத்தில் துவங்கும் சொற்களே சங்க காலம் அதற்குப் பின்னர் வந்த திருக்குறள் முதலான பதினெண் கீழ் கணக்கு நூல்களில் காண முடியாது !!! எல்லோருக்கும் தெரிந்த ‘ஒளவையார்’ பெயர் ஒன்று மட்டும் பாடலின் கீழ் இருக்கும். அதையும் கூட அவ்வையார் என்று எழுத முடியும் . தொல்காப்பியர் 12 உயிர் எழுத்துக்களிலும் சொற்கள் இருக்க முடியும் என்று சூத்திரம் எழுதியும் கூட 18 சங்க நூல்களிலும் 18 கீழ்க்கணக்கு நூல்களிலும் ஒரு “ஒள” சொல் கூட இல்லாதது வியப்பிலும் வியப்பே.
சம்ஸ்க்ருத மொழியின் உயிர் நாடியே “ச, ஸ , ஷ” சப்தங்களில்தான் இருக்கிறது. ஆனால் தமிழில் “ச” என்ற எழுத்திலும் “சை, சௌ” என்ற எழுத்துக்களிலும் சொற்களே துவங்கக் கூடாது என்று தொல்காப்பியர் தடை போடுகிறார். இது வியப்பிலும் வியப்பான செயல். இந்திய- ஐரோப்பிய மொழிகளில், குறிப்பாக சம்ஸ்க்ருதம் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ‘ஸ்’ (sssssss) சப்தம்தான் அதிகம் கேட்கும்
தமிழின் உயிர் மூச்சே மூன்று தமிழ் ‘சங்க’ங்களில் தான். ஆனால் அந்த சங்கம் என்ற சொல்லே தமிழில் கிடை யாது . ஏனெனில் சங்கம் (கூட்டு அமைப்பு) என்பது சம்ஸ்கிருத சொல். பாணினி பலவகை சங்கங்கள் பற்றி 2700 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதி வைத்துள்ளார். சங்க இலக்கியத்தில் தொல்காப்பியரையும் மீறி சுமார் 30 “ச” எழுத்துச் சொற்கள் உண்டு!!
இதே போல ‘ய’ ,’ஞ’ எழுத்துக்களிலும் சொற்கள் துவங்கக் கூடாது என்று தொல்காப்பியர் தடை போட்டார்.. அவரை மீறி ஓரிரு சொற்கள் சங்க கால நூல்களில் இடம்பெற்றன .
தொல்காப்பியர் என் இப்படி ‘ச, ஞ , ய’ ஆகிய மூன்று எழுத்து துவக்கத்துக்கு தடை போட்டார் என்பது ஆச்சர்யமாக உள்ளது. உலகின் பழங்கால மொழிகளில் இவற்றுக்குத் தடை ஏதுமில்லை.
இதை விட வியப்பான விஷயம் ‘ல, ர’ எழுத்துக்களின் வர்க்கத்துக்கே தடை போட்டுவிட்டார். ஆயினும் இந்த எழுத்துக்களுக்கு முன்னர் உயிர் எழுத்தை இணைத்து அதைத் தமிழ் மயமாக்கும் வித்தையைத் தமிழர்கள் கற்றுக்கொண்டனர் (எ .கா . லோகம் -உலகு, ராமன் – இராமன், ரங்கன் -அரங்கன்)

ஒவ்வொரு மொழிக்கும் ஒரு சில குறைகள் இருக்கத்தான் செய்யும் தமிழில் ‘ஸ ஷ க்ஷ ஜ ஹ’ ஒலிகள் இல்லாமை பெரிய குறைபாடு ; ஷேக்ஸ்பியர், ஸ்டாலின் ,ஜெயலலிதா, ஹாரிபாட்டர், குஷ்பூ , புஷ்பம் முதலிய சொற்களை கிரந்த எழுத்துக்களான ஜ ,ஷ ஹ , க்ஷ , ஷ இல்லாமல் சொல்ல முடியாது!! அப்படிச் சொன்னாலும் அதைக் கேட்கும் எவருக்கும் புரியாது. ஒருவேளை தமிழர்களுக்குக் கொஞ்சம் புரியலாம்!!
Tag –தமிழ், வினோத மொழி
–subham—