பஞ்சாங்கம் பலித்தது !!!! (Post No.8597)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8597

Date uploaded in London – 30 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பஞ்சாங்கம் பலித்தது !!!!

Kattukutty

(கண்டிப்பாக கடைசி வரி வரை படிக்கவும்)

இரவு 8 மணி…… சாப்பிட்டு 5 நிமிடம்கூட ஆகவில்லை யாரோ கதவைத் தட்டும் சப்தம்……

அண்ணா ஒரு joke ஜோக்கு……

வாப்பா என்ன ஜோக்கோ.?? நீங்க பஞ்சாங்கம் பிரமாதமாய் எழுதிருக்கேள்…

இது ஜோக்கா ???

ரொம்ப கஷ்ட்டப் பட்டு விவரங்கெளெல்லாம் சேகரிச்சு எழுதியிருக்கேன்……இதைப்போய் ஜோக் எங்கிறீறே?

அவர் – கதைய கேளுங்கோன்னா…   எல்லாம் எழுதின நீங்க பல்லி விழும் பலன் எழுதல்லே….

நான் – அதுதான் எல்லா பஞ்சாங்கத்திலேயும் விரிவா பலன் போட்டிருக்கே அதுனால எழுதல்ல

எங்காத்துல எங்க அத்திம்பேர், அக்கா, தம்பி wife வைப், குழந்தைகள் சாரு பாச்சு மச்சினன் மணி அவன் wife வைப் எல்லோரும் சாப்டுட்டு கதை பேசிண்ட்ருந்தோம்

தண்ணி குடிக்கப் போன அத்திம்பேர் குடு குடுன்னு ஓடி வந்தார்.

டேய் மணி பஞ்சாங்கத்தை எடுத்துண்டு வா……

அப்பா – என்ன விஷயம்ப்பா….வலது தோள் பட்டையில் பல்லி விழுந்துடுத்துடா

மணி பாம்பு பஞ்சாங்கத்தை கொண்டு வரும்பொதே பிடுங்கிங்கிட்டுட்டார்…..அப்பா கண்ணாடு கொண்டு வாடி ராஜின்னார்.

எங்க விழுந்தது ???

வலது தோள் பட்டேலே…….படிச்சார், சிரிச்சார். உள்ளே போய்ட்டார் பஞ்சாங்கத்த டேபிள்ளே போட்டுட்டு

மணியோட wife வைப் ஓடி வந்தாள் அப்பாவுக்கு கண் தெரியல்ல போல

படித்தாள்……. என்னவோ மாதிரி எல்லோரைபார்த்து room ரூமுக்குள்

ஓடி விட்டாள். பார்த்தான் மணி.

என்ன ஒடுகிறாய் விஷயத்தைச் சொல்லாமலே..

அவனும் பஞ்சாங்கத்தைப் பார்த்தான்.room ரூமுக்குளே போய் கதவை

சாத்தி தாழ்ப்பாள் போடும் சத்தமும் கேட்டது.

என்ன ஆளாளுக்கு சொல்லாமலே கதவைச் சாத்திண்டு உள்ளே போறேள்…..சொல்லிண்டே பார்த்தார் பஞ்சாங்கத்தை

கூடவே அக்காவும் எட்டிப் பார்த்தாள். சிரித்தார்கள் ஒருத்தரை

பார்த்து….. உள்ளே தாழ்ப்பாள்  போடற சத்தம் கேட்டது

கடைசியில்தாண்ணா என் கையில் வந்தது …..சிரி சிரி சிரிச்சார்.

என்னோட wife வைப் வந்து ஏதாவது சாப்படறேளான்னு கேட்க வந்தாள்

இல்லெ இந்த பஞ்சாங்கத்திலே……சிரிச்சுண்டே எனக்கு

கொஞ்சம் வேலை இருக்கு போயிட்டு வரேன்….

என் மனைவி அப்படி என்ன போட்டிருக்கு சிரிக்கிற மாதிரி???

ரூமுக்குள் நழைந்தேன் பஞ்சாங்கத்தைக் காட்டினேன்

“ஸ்த்ரி ஸம்போகம்” (Sexual Intercourse)

எனக்கு பல்லி விழாமலே கிடைத்தது!!!

பெரியவர்கள் ரொம்ப அனுபவசாலிகள், அனுபவிச்சு எழதியிருக்கா!!!

tags – பஞ்சாங்கம், பலித்தது,பல்லி ,பலன் ,ஸ்த்ரி ஸம்போகம், sexual intercourse

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: