

Post No. 8663
Date uploaded in London – –11 SEPTEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பிரும்ம இலை ரகசியம் (Post No.8663)
முப்பெரும் தேவியர் மேல் உலகில் உள்ள நந்த வனத்தில் உலாவுவது வழக்கம்.
ஒருநாள் நந்த வனத்தில் ஒரு அழகான சிறிதளவு வாசனை உள்ள
ஓரு செடியின் இலையை பறித்தாள், லட்சுமி !!!தலையில் சூடிக்கொண்டாள்.
அதற்கு பெயர்தான் துளசி !!!!
சற்று தூரம் சென்றதும் ஓரு செடியில் மூன்று மூன்று இதழ்களாக்க்
கொண்ட ஒரு பெரிய செடியைக் கண்டாள் பார்வதி…….
பார்க்க அழகாக இருக்கவும் அதிலிருந்து ஒரு இலையைப. பறித்து தன் தலையில் சூடிக்கொண்டாள் பார்வதி…..
அதற்குப் பெயர் தான் வில்வம் !!!!
சரஸ்வதிக்கும் ஓர் ஆசை ….தானும் ஓர் இலையை தன்தலையில்
சூடிக்கொள்ள ஆசை…..வனம் மு ழுவதும் தேடிப்பார்த்தும்
தன்மனதிற்கு பிடித்த மாதிரி இலை கிடைக்க வில்லை………
நேராக பிரும்மனிடம் சென்றாள்.தனது ஆசையைதெரிவித்தாள்
அவர்ஓருயாகமே செய்துவிட்டார் மனைவி சரஸ்வதி தேவிக்கு!!!
யாகத்திலிருந்து ஓர் இலை தோன்றியது, இது வரைக்கும்
மனித இனிமே கண்டிராத இலை……..அந்த இலையின் மணமோ
நிறமோ அமைப்போ சரஸ்வதிக்கு சிறிதும் பிடிக்கவில்லை……பிரும்மனிடமே திருப்பித்தந்தாள்சரஸ்!!!
யாகத்தின் மூலமாக வந்த இலையை என்ன செய்வது ???
கடைசியாக பூலோகவாசிகள் அதை அனுபவிக்கட்டும் என நினைத்தார்.தூக்கி எறிந்தார் பூமியில் !!!!


அந்த இலையை மனிதர்கள் மட்டும் உபயோகிக்கலாமோ??
என்று எண்ணிய சரஸ்வதி யார் அந்தஇலையை
உபயோகித்தாலும் அவர்களுக்கு கெடுதலே
உண்டாகட்டும் என சபித்தாள் சரஸ்!!!!
பிறகு பிரம்மனின்
வேண்டுகோளுக்கு இணங்க தொடர்ந்து உபயோகித்தால்
மட்டுமே கெடுதல் ஏற்பட ட்டும் என சாபத்தின் கடுமையை
சற்றே குறைத்தாள் சரஸ்வதி!!!!
அந்த இலைக்குப் பெயர் தான் பிரும்ம பத்திரம் என்னும்
புகையிலை!!!!
மனிதர்களை சிகரட் ,பான் , பான் பராக் , பீடி…………என்று
பல வகையிலும் ஆட்டிப் படைக்கிறது அந்த பிரும்ம பத்திரம்!!!!
tags- பிரும்ம இலை, பிரும்ம பத்திரம், புகையிலை

–subham—