
தமிழ், சம்ஸ்க்ருத, ஆங்கில இலக்கண அகராதி -2 (Post.8713)
Post No. 8713
Date uploaded in London – –20 SEPTEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஸ்ரீ மாதவ சிவஞான யோகிகள் அருளிச் செய்த தொல்காப்பிய சூத்திர விருத்தியை, திருவாவடுதுறை ஆதீனம் 1968-ல் வெளியிட்டது அதன் பிற்பகுதியில் ஆதீன மஹாவித்துவான் ச. தண்டபாணி தேசிகர் விளக்கக் குறிப்புகளை அளித்துள்ளார்.
பிரத்தியயம் என்றால் என்ன ?
பிரகிருதி – இயல்பின் நிற்பது .
பிரத்தியயம் – பால், எண் , இடம், காலம், பொருள் இவற்றான் பிரக்கிருதியை
வேறுபடுத்தும் இடைச் சொற்கள்
பிராதிபதிகம் – வேற்றுமையுருபு முதலிய ஒன்றையும் ஏலாது . அவற்றை ஏற்கும் நிலையில் தனித்து நிற்கும் பெயர்ச் சொல் பொருளொடு கூடியும் வினைச் சொல்லன்றி முதலியவற்றை ஏலாது நிற்பது .
பிராதிபதிகம் என்னும் கருத்துடைய “அர்த்தவது தாது:” அப்பிரத்தியாயமாகித் திருத்தக நிற்பது பிராதிபதிகம் என்னும் பிரயோக விவேக உரைச் சூ த்திரத்தானும் அறிக
‘அர்த்தவது…..பிராதிபதிகம்’ என்பது வரையிலுள்ள பகுதி பாணினீய சூத்திரம்.
XXXX

தத்திதம் – பெயர்ச் சொல்லின் பொருள்பட வரும் விகுதி.
XXX
சுப் – என்பது வேற்றுமை உருபு
முதல் வேற்றுமை உருபாகிய ‘சு’ என்பதில் தொடங்கி ஏழாம் வேற்றுமை பன்மை உருபாகிய ‘சுப்’ என்பதன் இருபத்தொரு வேற்றுமையுருபுகளின் தொகுப்பால் உண்டாக்கிய பெயர் .
திங் – வினை முற்று விகுதி . இது ‘தி’ என்னும் ஒருமை விகுதியும் ‘அங்’ என்னும் பன்மை விகுதியும் கூட்டி அமைத்த குறியீட்டுத் தொகுப்புப் பெயர் ‘திங்’ என்பது
XXXX
ஆத்மனே பதம்
வடமொழியில் வினைச் சொற்கள், ஆத்மனே பதம் என்றும் பரஸ்மை பதம் என்றும் இருவகைப்படும் . அடித்தான் என்ற வழி , அடித்தலாகிய தொழிற்பயனையுறுவான் பிறன் ஆதலின் அது பரஸ்மை பதம் என்றும் அடித்துக்கொண்டான் .என்ற வழி , அடித்தலாகிய தொழிற்பயனையுறுவான் தான் ஆதலின் அது ஆத்மனே பதமாம் என்க.
((சுருக்கமாகச் சொன்னால் பிறர் செய்யும் செய்கை பரஸ்மை ; தமக்குத் தாமே செய்யும் செய்கை ஆத்மனே பதம் .))
xxxx
விகரணி — பெயர் வினைகளின் பொருளைக் காலத்தொடும் , பொருளொடும் கூட்டி வேறுபடுத்துவது .
XXXX

மாபாடியம்
பாணினி செய்த அஷ்டாத்யாயீ வியாகரண சூத்திரங்கட்குப் பதஞ்சலி முனிவர் செய்த அகலவுரை . இது ஆரிய வழக்கில் மாபாடியம் என்று அடைமொழியின்றியே வழங்கப்பெறும்.
அம் மாபாடியத்துக்கு கையட னார் , ‘பிரதீபிகா’ என்னும் பெயரால் விளக்க உரை எழுதினார். அவ்வுரையில் வேத மொழி வைதிகம் என்றும் , உலக மொழி லெளகிகம் என்றும் வழங்கப்பெற் றுள்ளது .
மாபாடியம் = மஹா பாஷ்யம்
To becontinued……………………………….
tags– பிரத்தியயம், ஆத்மனே பதம்,தத்திதம், சுப் திங்
XXX subham xxxxx