
WRITTEN BY KATTUKKUTY
Post No. 8967
Date uploaded in London – – 25 NOVEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஏ, பணமே உன்னை எங்கே தேடுவேன்?!
Kattukutty
18 புராணங்களை விட பெரிய புராணம் பண புராணம்! அதிலிருந்து எடுத்த சில உண்மைகள்!
நீயின்றி நானில்லை என்று நான் சொல்கிறேன்,
நானின்றி நீயில்லை, என்று நீ சொல்ல மாட்டேன் என்கிறாயே???
உனக்குத் தான் எத்தனை எத்தனை பெயர்கள்!!!.
கோவில்களிலும் , சாமியார்களிடமும் நீ “காணிக்கை”என்ற பெயரில்
போய் சேருகின்றாய்.!!!
கல்விக்கூடங்களில், உனக்குப் பெயர் கல்விக்கட்டணம், கட்டிட நிதி,டொனேஷன்……
திருமணத்தில், “வரதட்சிணை”, “மொய்”என்கிறார்கள்…..
விவாகரத்தில் “குடும்ப பராமரிப்புச் செலவு”
கோர்ட்டில் உன் பெயர் என்ன தெரியுமா??? …….”அபராதம்”
அரசாங்கம் உன்னை “வரி”என்ற பெயரில் பல விதமாக வசூல் செய்து விடுகிறது( வீட்டு வரி, மின்சார வரி, குழாய் வரி,சாக்கடை வரி,
வருமானவரி இன்னும் பல விதமாக………)
அரசாங்கத்திடமிருந்து நான் பெற்றால் “உதவித்தொகை”
நிலத்திற்கு …….”கிஸ்தி , தீர்வை”………..
பணியாளர்களுக்கு…….”சம்பளம்”
வேலையாட்களுக்கு ……”கூலி”
பேங்கில் நீ நுழைந்தால்…….”டெபாசிட்”
பேங்கிலிருந்து நான் எடுத்தால் …”கடன்”
கடன்காரர்களிமிருந்து நீ வந்தால் உன் பெயர் “வட்டி”
தெரிந்தே ஒருவரிடமிருந்து உன்னைப் பறித்தால் “கொள்ளை”
தெரியாமல் எடுத்தால்…….”திருட்டு”
அரசியல்வாதிகளிடம் நீ போனால் “கட்சி நிதி”,”பரிசு”, “லஞ்சம்”
நன்றாக வேலை செய்த பணியாளர்களுக்கு…….”டிப்ஸ்”
பயணம் செய்ய ……”கட்டணம்”
மனைவியிடமிருந்து எனக்கு வந்தால் “செலவுத்தொகை”
நான் மனைவிக்கு கட்டாயம் கொடுக்க வேண்டியது “DUTY FREE AMOUNT”!!!

ஏ பணமே…….உன்னை,
தொழிலாளர்கள்………………….சம்பாதிக்கிறார்கள்
செல்வந்தர்கள்……………………..குவிக்கிறார்கள்
ஊதாரிகள்……………………………வாரி இறைக்கிறார்கள்.
திருடர்கள் ……………………………கொள்ளை அடிக்கிறார்கள்
கருமிகள்……………………………….பூட்டி வைக்கிறார்கள்
சூதாட்டக்காரர்கள்……………….இழக்கிறார்கள்
ஈட்டிக்காரர்கள்……………………..கடனாகக் கொடுக்கிறார்கள்
ஆனால்…………………………………..உபயோகிப்பவர்கள்???
இதோ நான் இருக்கிறேன் …….வா……வா….. …வா!!!

பணத்தைக் கொடுத்து புத்தகத்தை வாங்கலாம்,
அறிவைப் பெற முடியாது….
பணத்தைக் கொடுத்து படுக்கையை வாங்கலாம்,
ஆனால் தூக்கத்தை வாங்க முடியாது.
பணத்தைப் பரிசாக கொடுக்கலாம்,
ஆனால் அன்பைப் பெற முடியாது.
பணத்தினால் ஆட்களை வாங்கலாம்,
ஆனால் அன்பைப் பெற முடியாது.
பணத்தினால் ஆடம்பரப் பொருட்களை வாங்கலாம்,
ஆனால் அழகைப் பெற முடியாது.
பணத்தினால் ஆயுதங்களை வாங்கலாம்,
ஆனால் வீரத்தைப் பெற முடியாது.
பணம் என்ற காகிதத்தைப் பெற
சிலர் அன்பை இழக்கிறார்கள்.
சிலர் பண்பை இழக்கிறார்கள்,
சிலர் கற்பை இழக்கிறார்கள,
சிலர் மரியாதையை இழக்கிறார்கள்,
சிலர் மானத்தை இழக்கிறார்கள்,
சிலர் நட்புகளை இழக்கிறார்கள்,
சிலர் கண்ணியத்தை இழக்கிறார்கள்,
சிலர் மார்க்கத்தை இழக்கிறார்கள,
சிலர் கொள்கைகளை இழக்கிறார்கள்
சிலர் மனித நேயத்தை இழக்கிறார்கள்,
சிலர் வாலிபத்தை இழக்கிறார்கள்,
சிலர் வாழ்க்கையையே இழக்கிறார்கள்.

நானும் அவனும் நண்பனானோம்
ஒன்றாய் இருந்தோம்
கடன் கேட்டான், கொடுத்தேன்
கேட்டேன்
இன்று நான் வேறு, அவன்வேறு!!!!
பணம் சொல்கிறது “ நான் இது வரையில் குப்பைக் கூடையையே
பார்த்ததில்லை”
பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது,
பணம் இல்லவிட்டால் உன்னை யாருக்கும் தெரியாது!!!
வாழ்வதற்கான பணம் மிக குறைவு, ஆனால் அடுத்தவனைப் போல்
வாழ்வதற்குத்தான் அதிக பணம் வேண்டும்!!!
பணமும், கடல் நீரும் ஒன்று …..பணம் சேர்க்கச் சேர்க்க ஆசை,
கடல் நீர் குடிக்க குடிக்க தாகம்!!!
பணத்தைக் குறை கூறுபவர்கள், பணத்தை மறுப்பதில்லை!!!
பணமும், மகிழ்ச்சியும் பரம விரோதிகள்!!!!
பணம் இருந்தால் நீ பாம்பு,
பணம் இல்லாவிட்டால் நீ புழு…….
பணம் நம்மிடம் வரும்போது இரண்டு கால்கள்,
போகும் போது பல கால்கள்!!!
தங்கக் காசுகளை வீசி எறிபவன், ஒரு நாள்
செப்புக் காசுகளை பொறுக்க நேரிடும்!!!
பணத்திற்கு என்றும் ஒரே மொழி தான்!!!
பணம் சேர்ப்பது என்பது , குண்டூசியால் குழி தோண்டுவது போல,
செலவழிப்பது என்பது, குண்டூசியால் பலூனை குத்தி
உடைப்பது போல……..
நிரந்தரமில்லாத பணத்தைச் சேர்ப்பதற்காக,
நிரந்தரமான வாழ்க்கையை இழக்கிறான் மனிதன்!!!
உங்கள் நம்பிக்கையை பணத்தின் மீது வைக்காதீர்கள்,
பணத்தை நம்பிக்கையான இடத்தில் வையுங்கள்!!!

tags– பணமே ,எங்கே, தேடுவேன்
***