
மன்னாதி மன்னர் (மொக்க) ஜோக்ஸ்!!!! (Post No.8986)
WRITTEN BY KATTUKKUTY
Post No. 8986
Date uploaded in London – – 1 DECEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மன்னாதி மன்னர் (மொக்க) ஜோக்ஸ்!!!!
Kattukutty
போர் அபாயம் நிகழ்ந்துள்ளதை எப்படி கண்டு பிடித்தீர்கள்
மன்னா???
நிறைய வீரர்கள் மருத்துவ விடுப்பு கேட்கின்றனரே???
xxx

சிம்மாசனத்திற்குப் பின் பதுங்கு குழியா…ஏன் மன்னா???
புலவர்களிடமிருந்து தப்பிக்கத் தான்.!!!
xxxx
நம்ம மன்னர் அரசியல்வாதியாகி விட்டாரா…….எப்படி???
போர்க்களத்தில் எதிரி மன்னரை பார்த்து “வாழ்த்த வயதில்லை,
வணங்குகிறேன்” என்று சொல்லி தப்பிச்சிட்டாரே……….
Xxx
அமைச்சரே எதிரிநாட்டு மன்னர் அனுப்பிய புறாவுக்கு ஒரு காலை
காணோமே???
மன்னா இதுதான் மிஸ்டு கால்…….
xxxx
நம்ம மன்னரின் பலவீனம் அறிந்து, சிறை பிடிச்சுட்டான் எதிரி மன்னன்…….
எப்படி???
பதுங்கு குழி பக்கத்திலே குல்பி ஐஸ் வண்டிய எடுத்துட்டுப் போய்
மணியடிச்சிருக்கான்……!!!
Xxx
நம்ம மன்னர் போருக்கு போனதை இப்படி சொல்லி அசிங்கப்
படுத்தி இருக்கக்கூடாது…..
எப்படி???
ஓட்டப் பந்தயத்திற்கு போயிருக்கார்ன்னு…….
xxxx
எதிரி நாட்டு மன்னன் நாய்ப்படை அமைத்துள்ளானாமே….எதற்கு???
போரின் போது தாங்கள் எந்த பதுங்கு குழியில் மறைந்துள்ளீரகள்
என்று கண்டு பிடிப்பதற்கு!!!
xxxx
போருக்குப் போகும்போதெல்லாம் ஊரடங்கு உத்திரவு போடுகிறாராமே ஏன்???
போர்க்களத்திலிருந்து ஓடிவரும்போது யாரும் பார்த்து விடக் கூடாது
என்பதற்காகத் தான்……..
Xxxx

மன்னா, எதிரி நாட்டு மன்னன் நம் மகாராணியை குதிரையோடு
கடத்திக் கொண்டு போகிறான்…….
அமைச்சரே எப்படியாவது மீட்டுவாருங்கள் குதிரையை!!!
xxxx
மன்னா நாம் வெற்றியை நெருங்கி விட்டோம்…..
எந்த அளவுக்கு??.??
இன்னும் ஒரு மைல் ஓடினால் நம் அரண்மனை வந்து விடும்!!!
xxxx
மந்திரியாரே, தொல்பொருள் ஆராய்ச்சியில் கிடைத்த கல்
வெட்டுகள் என்ன சொல்கிறது????
உங்கள் பாட்டனாரும் பதுங்குழியில் தான் வாழ்ந்திருக்கிறார்கள்
என்று சொல்கிறது மன்னா…….
xxx
வழக்கம் போல புறா மூலமாக போர்ச் செய்தி அனுப்பும் எதிரி
மன்னர் இப்போது நாய் மூலமாக செய்தி அனுப்புகிறாரே ஏன்???
பதுங்கு குழியில் இருக்கும் உங்களை கண்டு பிடித்து
ஓலை கொடுக்க !!!
xxx
மந்திரியாரே இங்கே மாட்டியிருந்த கேடயம் எங்கே .???
மகாராணி இட்லி சுட எடுத்துச் சென்றுள்ளார்!!!!
xxx
மந்திரியாரே போருக்கு வேண்டிய ஏற்பாடுகளெல்லாம் செய்து
விட்டீர்களா???
ஆம் மன்னா, உங்கள் பெயருக்கு நிறைய தொகைக்கு
இன்ஷூரன்ஸ் எடுத்து விட்டேன்……..
xxx
புலவரே, மகராஜாவை திட்டிப் பாடினீர்…..உமக்கு சவுக்கடிதானே
கொடுத்தார்??? பின் கையில் பண முடிப்பு ஏது???
மகாராணி கொடுத்தார் அமைச்சரே!!!!
Xxx
மன்னர் ரொம்ப பயந்த சுபாவம் உடையவர்….
எப்படி சொல்லற???
பதுங்கு குழிக்கு பதில் பறக்கும் கவசம் கேட்கிறாரே!!!
xx

ஆயுதக்கிடங்கைப் பார்த்த மன்னர் அதிர்ச்சி ஆயிட்டாராம்…. ஏன்???
ஆயுதங்களுக்குப் பதிலாக ஒரே பேரீச்சம்பழ கொட்டைகளாக கிடந்துச்சாம்……
xxx
எந்த நாடாக இருந்தாலும்,புதிதாக மன்னர் பதவிக்கு
வருபவர்கள், முதலில் நம்மிடமே போருக்கு வருகிறார்களே
காரணம் என்ன????
முதல் போரில் தோற்றதாக இருக்கக கூடாது என்ற “சென்டிமென்டிற்காக” தான் மன்னா!!!
xxxx
மன்னர் ஏன் மகாராணிக்கு இவ்வளவு நகைகளைப்போட்டு
அலங்கரித்துள்ளார்.???
மகாராணியை கடத்திட்டு போறவங்களுக்கு மன்னர் தரும்
சன்மானம் இவைகள்!!!!
xxxx
மன்னர் ஏன் வேட்டைக்குச் செல்லவில்லை????
வேட்டை வேண்டாம் எல்லாவற்றையும் “டிஸ்கவரி சானலில்”
பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லி விட்டார்!!!
xxxx
அனேகமாக எதிரி நாட்டு மன்னர் நம்மீது படைஎடுப்பார் என நினைக்கிறேன்…….
எப்படி சொல்லறே???
பதுங்கு குழி வெட்ட ஆட்கள் தேவைன்னு நம் மன்னர் விளம்பரம்
கொடுத்திருக்காரே………
xxx
தளபதியாரே மன்னரின் பட்டத்துக் குதிரை ஏன் கூனி குறுகி
நிற்கிறது???
போர்களத்தில் மன்னர் தன்னைவிட வேகமாக ஓடி வந்துவிட்டதால்
அவமானப்பட்டு நிற்கிறது……..
xxxx

அமைச்சரே, புலவர் ஏன் “குவாட்டர் “ பாட்டிலோடு வருகிறார்???
“சரக்கு” உள்ள புலவரை அழைத்து வரச்சொன்னீர்களே அது தான்
மன்னா!!!!
xxxx
மன்னர் ரொம்ப அல்பம்ன்னு எப்படி சொல்றே???
போர் இல்லாத சமயம் பதுங்கு குழியை வாடகைக்கு விடறாரே???
xxxx
புலவர் பாடும்போது ரெக்கார்ட் பண்ணச் சொல்றாரே மன்னர் ஏன்??
மறுபடியும் இதே பாட்டை பாடி சன்மானம் பெற்று விடுகிறார்களாம்!!!
xxxx
எதிரி நாட்டு மன்னன் போர்களத்தில் நம் வீரர்களை ஒரே வார்த்தையில் மடக்கிவிட்டனா…….
எப்படி???
பழைய இரும்புக்கு பேரீச்சம் பழம் என்று கூவியதும் நம் வீரர்கள்
அவன் காலடியில் வாள் கேடயங்களை போட்டு விட்டனரே……..
xxxx
புலியை வேட்டையாடச் சென்ற மன்னர் ஏன் திரும்பி வந்துட்டார்???
புலியும் வேட்டையாடும் “மூடில்”தான் காத்திருக்கிறது என தகவல்
சொன்னார்களாம்…….
xxxx
அரண்மளை வைத்தியருக்கு ஏன் மரண தண்டனை???
நோய்க்கு மருந்து கேட்டால் வெடி மருந்து தயாரிச்சு கொடுத்தாராம்……..
xxx
படை வீர்ர்களே எனக்கு ஒரு சத்தியம் செயு்து கொடுங்கள்.
புற முதுகிட்டு ஓட மாட்டோம் என்றா மன்னா???
இல்லை, எனக்கு முன்னால் ஓடி விட மாட்டோம் என்று!!!!
xxxx
நம்மிடம் ஆயுதம் இல்லை என்று எதிரி நாட்டு மன்னனுக்கு
எப்படி தெரிந்தது????
பேரீச்சம்பழக் கடைக்காரன் சொல்லியிருப்பான் மன்னா…..
.tags — மன்னர், ஜோக்ஸ்
***