
WRITTEN BY S NAGARAJAN
Post No. 9025
Date uploaded in London – – –12 DECEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
டிசம்பர் 11. பாரதியாரின் பிறந்த தினம். அதையொட்டிய சிறப்புக் கட்டுரை இது!
பாரதியாரின் ராகங்கள்! – 2
ச.நாகராஜன்
மஹாகவி பாரதியாரின் தோத்திரப் பாடல்கள் மிக அற்புதனமானவை. பக்திச் சுவை நனி சொட்டச் சொட்ட இயற்றப்பட்டவை அவை.

அந்தப் பாடல்களுக்கு அவரே உரிய இசையை அமைத்துள்ளது ஒரு தனிச் சிறப்பாகும்.
அவர் இசை அமைத்த பாடல்களையும் ராகங்களையும் பார்ப்போம்.
- ஸரஸ்வதி ஸ்தோத்திரம் – எங்ஙனம் சென்றிருந்தீர்
நொண்டிச் சிந்து
- ஸரஸ்வதி தேவியின் புகழ் – வெள்ளைத் தாமரைப் பூவில்
ராகம் – ஆனந்த பைரவி தாளம் – சாப்பு
- லக்ஷ்மி பிரார்த்தனை – மலரின் மேவு திருவே
ராகம் – நாட்டை தாளம் – சதுஸ்ர ஏகம்
- ஸ்ரீ தேவி ஸ்துதி – நித்தமுனை வேண்டி
ராகம் – சக்கரவாகம் தாளம் – திஸ்ர ஏகம்
- மூன்று காதல் ஸரஸ்வதி காதல் – பிள்ளைப் பிராயத்திலே
ராகம் – ஸரஸ்வதி மனோஹரி தாளம் – திஸ்ர ஏகம்
லக்ஷ்மி காதல் – இந்த நிலையினிலே
ராகம் – ஸ்ரீ ராகம் தாளம் – திஸ்ர ஏகம்
காளி காதல் -பின்னோரிராவினிலே
ராகம் – புன்னாகவராளி தாளம் – திஸ்ர ஏகம்
- முருகன் பாட்டு – முருகா – முருகா – முருகா
ராகம் – நாட்டைக்குறிஞ்சி தாளம் – ஆதி
- ஆர்ய தரிசனம் – கனவென்ன கனவே
ராகம் – ஸ்ரீ ராகம் தாளம் – ஆதி
- கண்ணம்மா அங்க வர்ணனை – எங்கள் கண்ணம்மா
ராகம் – செஞ்சுருட்டி தாளம் – ரூபகம்
- ஸூர்ய தரிசனம்
ராகம் – பூபாளம்
- சந்திரமதி பாட்டு – பச்சைக் குழந்தையடி
ராகம் – ஆனந்தபைரவி தாளம் – ஆதி
- அக்நி தோமம் (தீ) – எங்கள் வேள்விக்கூட மீதில்
ராகம் – நாதநாமக்கிரியை தாளம் – சதுஸ்ர ஏகம்
- அக்நி பகவான் – தீ வளர்த்திடுவோம்
ராகம் – புன்னாகவராளி
- இறைவனை வேண்டுதல் – எத்தனை கோடி இன்பம்
ராகம் – தன்யாசி
- மகா காளியின் புகழ் – காலமாம் வனத்திலண்ட
காவடிச் சிந்து
ராகம் – ஆனந்த பைரவி தாளம் – ஆதி
- சக்திக் கூத்து – தகத் தகத்தக
ராகம் – பியாக்
- சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம் – கையைச் சக்தி தனக்கே
ராகம் – பூபாளம் தாளம் – சதுஸ்ர ஏகம்
- சிவ சக்தி புகழ் – ஒம் சக்தி சக்தி சக்தியென்று
ராகம் – தன்யாசி தாளம் – சதுஸ்ர ஏகம்
தோத்திரப் பாடல்கள் என்ற இந்தப் புத்தகத்தின் முதற்பதிப்பு 1930இல் பதிக்கப்பட்டது. 1947இல் இது எட்டாம் பதிப்பைக் கண்டது. முதல் பதிப்பில் இல்லாத சில பாடல்கள் பின் வந்த பதிப்புகளில் சேர்க்கப்பட்டன.
இதில் பல ராகங்களை பாரதியார் கையாண்டிருப்பது அவரது இசை வல்லமையைக் குறிக்கிறது.
அடுத்து இன்னும் சில பாடல்களைப் பார்ப்போம்.

***