
Compiled BY LONDON SWAMINATHAN
Post No. 9547
Date uploaded in London – –29 APRIL 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
பெண்களைப் பற்றிய பாரதி பொன்மொழிகள்
(தொடர் மார்ச் 22, 2021ல் துவங்கியது. முதல் கட்டுரை எண் 9410)

1.பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக்குள்ளே சிலமூடர் – நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார்.
கண்கள் இரண்டினில் ஒன்றைக் – குத்தி
காட்சி கெடுத்திட லாமோ?
பெண்கள் அறிவை வளர்த்தால் – வையம்
பேதமை யற்றிடும் காணீர்
Xxxx
2.கற்புநிலை என்று சொல்ல வந்தால் இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்
வற்புறுத்தி பெண்ணை கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்
3.சாதம் படைக்கவும் செய்திடுவோம்; தெய்வச்
சாதி படைக்கவும் செய்திடுவோம்
xxxx
(பிஜிதீவு கரும்புத் தோட்ட்த்தில் ஹிந்து மாதர்க்கு நேர்ந்த கொடுமைகள்)
4.பெண் என்று சொல்லிடிலோ – ஒரு
பேயும் இரங்கும் என்பார்; தெய்வமே நினது
எண்ணம் இரங்காதோ? – அந்த
ஏழைகள் அங்கே சொரியும் கண்ணீர் வெறும்
மண்ணிற் கலந்திடுமோ – தெற்கு
மாகடலுக்கு நடுவினிலே அங்கோர்
கண்ணற்ற தீவினிலே – தனிக்
காட்டினிலே பெண்கள் நடுங்குகிறார் – அந்த
கரும்புத் தோட்டத்திலே
xxx
5.தில்லித் துருக்கர் செய்த வழக்கமடீ! – பெண்கள்
திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்;
வல்லி யிடையினையும் ஓங்கி முன்னிற்கும்-இந்த
மார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய்;
xxxx
6.புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும்
பொய்ம்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச்
சதுர் மறைப்படி மாந்தர் இருந்தநாள்
தன்னி லேபொது வான் வழக்கமாம்;
xxx
7.போற்றி,போற்றி! ஜயஜய போற்றி!இப்
புதுமைப் பெண்ணொளி வாழிபல் லாண்டிங்கே!
மாற்றி வையம் புதுமை யுறச்செய்து
மனிதர் தம்மை அமர்க ளாக்கவே
ஆற்றல் கொண்ட பராசக்தி யன்னைநல்
அருளி நாலொரு கன்னிகை யாகியே
தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள்
செல்வம் யாவினும் மேற்செல்வம் எய்தினோம்
8.ஆதிசக்தி தனையுடம்பில் அரனும் கோத்தான்;
அயன்வாணி தனைநாவில் அமர்த்திக் கொண்டான்;
சோதிமணி முகத்தினளைச் செல்வ மெல்லாம்
சுரந்தருளும் விழியாளைத் திருவை மார்பில்
மாதவனும் ஏந்தினான்: வானோர்க் கேனும்
மாதரின்பம் போற்பிறிதோர் இன்பம் உண்டோ?
காதல்செயும் மனைவியே சதி கண்டீர்
கடவுள்நிலை அவளாலே எய்த வேண்டும்.
சிவன் உடலிலே பாதி மலைமகள், அயன் (பிரம்மன்) நாவினிலே சரஸ்வதி, விஷ்ணுவின் மார்பில் திருமகள் ஆணில்லாமல் பெண் இயங்க முடியாது பெண்ணில்லாமல் ஆண் இயங்க முடியாது என்று இந்து மதம் உணர்த்துகிறது. இதைத்தான் பாரதி தனது பாடலில் அழகாக விளக்கியுள்ளார்.
8a.பாகத்தில் ஒருவன் வைத்தான்; பங்கயத் திருந்த பொன்னை
ஆகத்தில் ஒருவன் வைத்தான்; அந்தணன் நாவில் வைத்தான்
- கம்பராமாயணம் ஆரண்ய 627
(சிவன் தனது உடலில் ஒரு பாகத்தில் உமை அம்மையை வைத்தான். தாமரையில் வீற்றிருக்கும் லெட்சுமியை விஷ்ணு தனது மார்பில் வைத்தான். பிரம்மனோ— சரஸ்வதியை தனது நாவில் வைத்தான்.)
xxxx
9.உண்டாக்கிப் பாலூட்டி வளர்த்த தாயை
உமையவள் என்று அறியீரோ – உணர்ச்சி கெட்டீர்!
பண்டாய்ச்சி ஔவை அன்னையும் பிதாவும்
பாரிடை முன்னறி தெய்வம் என்றாள் அன்றோ?
xxxx
9a.O woman! lovely woman!
Nature made thee to temper man:
we had been beasts without you. – OTWAY
பெண்ணே அழகிய பெண்ணே
ஆணை கட்டுக்குள் வைக்க அல்லவோ
இயற்கை உன்னைப் படைத்தது
நீ இல்லாதபோது நாங்கள் மிருகமாகி இருந்தோம் – OTWAY
xxxx
10.சிங்கத்தில் ஏறி சிரிப்பாள் உலகழிப்பாள்
சிங்கத்தில் ஏறி சிரித்து எதையும் காத்திடுவாள்
11.வசிட்டருக்கும் இராமருக்கும் பின்னொரு
வள்ளு வர்க்கும்முன் வாய்த்திட்ட மாதர்போல்
பசித்தொ ராயிரம் ஆண்டு தவஞ்செய்து
பார்க்கினும் பெறல் சால அரிதுகாண்.
xxxx
12.பூட்டைத் திறப்பது கையாலே – நல்ல
மனந்திறப்பது மதியாலே
பாட்டைத் திறப்பது பண்ணாலே – இன்ப
வீட்டைத் திறப்பது பெண்ணாலே
xxxx
13.பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
ஓம் ஓம் ஓம் ஓம்
xxxx
14.நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி
நயம்புரி வாள்எங்கள் தாய் – அவர்
அல்லவ ராயின் அவரைவி ழுங்கிப்பின்
ஆனந்தக் கூத்தி டுவாள்.
xxxx
15.நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர்மணிப் பூண்,
பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம்,இவள்
பார்வைக்கு நேர்பெருந்தீ
வஞ்சனை யின்றிப் பகையின்றிச் சூதின்றி
வையக மாந்தரெல் லாம்,
தஞ்சமென் றேயுரைப் பீர்அவள் பேர்,சக்தி
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்
xxxx
16.மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்
வைய வாழ்வு தன்னில்
எந்த வகையினும் நமக்குளே
தாதர் என்ற நிலைமை மாறி
ஆண்களோடு பெண்களும்
சரிநிகர் சமானமாக வாழ்வம்
இந்த நாட்டிலே
xxxx
17.ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்!
அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்குமாம்
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்
QUOTATIONS FROM POET BHARATIYAR
xxxx
TO BE CONTINUED………………………………………………

tags — பெண்கள் வாழ்க Part 20, பொன்மொழிகள் , பாரதி