
Post No. 9622
Date uploaded in London – – –19 May 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஸ்வாமி ராமதீர்த்தரின் இறுதி நாளில் அவர் எழுதிய இறுதிச் செய்தி!
ச.நாகராஜன்
17,அக்டோபர் 1906. பகல் மணி 12. ஸ்வாமி ராமதீர்த்தர் தனது உடலைக் கங்கையில் துறந்தார்.
ஸ்வாமி ராமதீர்த்தர் ஆங்கிலக் கணக்குப் படி 33 வயதை முடிக்கும் சமயம்! (பிறந்த தேதி :22-10-1873).
அது ஒரு விபத்து தான். சில நாட்களுக்கு முன்னர் அவர் முழங்காலில் ஒரு அடிபட்டிருந்தது. அந்த நிலையில் அவர் வீட்டிலேயே குளித்து வந்தார். ஆனால் அக்டோபர் 17ஆம் தேதி தீபாவளி நன்னாள்.
அன்று கங்கையிலே குளிக்க எண்ணிய அவர் கங்கையில் இறங்கினார். தவறி அவரை கங்கை இழுக்க, அவரால் மீண்டு நீந்தி வர முடியவில்லை.
குளிக்கச் செல்லும் முன்னர் ஸ்வாமி ராமதீர்த்தர் ஒரு கட்டுரையை உருது மொழியில் எழுதிக் கொண்டிருந்தார். Self-Intoxication என்பது பற்றிய அவரது கட்டுரையில் இறுதிப் பாராவை அவர் எழுதி முடித்து விட்டுக் குளிக்கப் போனார்.
இதை அவரது சமையல்காரர் குறிப்பிட்டிருக்கிறார்.
அவரது கடைசி எழுத்துக்கள் உருதுவிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.
அது இது தான்:-
Indra! Rudra! Maruta! Vishnu! Shiva! Ganga! Etc. Bharat!
O, Death! Certainly blow up this one body. I have enough bodies to use. I can wear those divine silver threads, the beams of the moon, and live. I can roam as divine minstrel, in the guise of hilly streams and mountain brooks. I can dance in the waves of the sea. I am the breeze that proudly walks and I am the wind inebriate. All these shapes of mine are wandering shapes of change. I came down from yonder hills, raised the dead, awakened the sleeping, unveiled the fair faces of some and wiped the tears of a few weeping ones. The nightingale and the roe both I saw and I comforted them. I touched this, I touched that, I doff my hat and off I am. Here I go and there I go; none can fine me.
கடைசி வரி பென்சிலால் எழுதப்பட்டிருந்தது.
இந்திரா! ருத்ரா! மருதா! விஷ்ணு! சிவா! கங்கா! பாரத்!
ஓ, மரணமே! நிச்சயமாக இந்த ஒரு உடலை வெடித்துச் சிதறச் செய். என்னிடம் பயன்படுத்துவதற்கு ஏராளமான உடல்கள் இருக்கின்றன. நான் இந்த தெய்வீக வெள்ளி இழைகளை, சந்திர ஒளிக்கற்றைகளை அணிந்து வாழ்வேன். குன்றில் பாயும் ஓடைகளாக, மலையில் ஓடும் சிற்றோடைகளாக தோற்றம் கொண்டு ஒரு தெய்வீக பாணனாக உலவுவேன். கடலில், அலைகளில் நான் ஆடுவேன். நானே உலவும் தென்றல் காற்று.நானே போதை கொண்ட காற்று.
இந்த எனது அனைத்து வடிவங்களும் மாறுகின்ற எனது சஞ்சார வடிவங்கள்! நான் அதோ அங்கிருந்த மலைகளிலிருந்து இறங்கி வந்தேன், இறந்தவர்களை உயிர்ப்பித்தேன், உறங்கியவர்களை விழித்தெழச் செய்தேன், அழகிய முகங்களை மூடியிருந்த, சிலரது முகத்திரையை விலக்கினேன், அழுகின்ற சிலரது கண்ணீரைத் துடைத்தேன். பாடுகின்ற கானம்பாடி பறவை, ரோஜா மலர் ஆகிய இரண்டையும் பார்த்தேன். அவற்றிற்கு ஆறுதல் தந்தேன். இதைத் தொட்டேன், அதைத் தொட்டேன். எனது தலைப்பாகையைக் களைந்தேன்.இதோ போகிறேன். இதோ இங்கே போகிறேன், அதோ அங்கே போகிறேன். யாராலும் என்னைக் கண்டுபிடிக்க முடியாது.
மரணத்திற்குச் செய்தி கொடுத்து அதையே மனித குலத்திற்குத் தந்த செய்தியாக மாற்றினார் ஸ்வாமி ராமதீர்த்தர்.
பெரியோரது ஒவ்வொரு செயலிலும் ஒரு உள்ளர்த்தம் பொருந்தி இருக்கும் அல்லவா!
தற்செயல் ஒற்றுமையாக இருந்தாலும் கூட ஸ்வாமி ராமதீர்த்தரின் இறுதி வரிகள் அவரது அவதார நோக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருப்பது ஒரு தெய்வீக விளையாடல் தானே!
***

tags- ஸ்வாமி, ராமதீர்த்தர் ,