
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 9657
Date uploaded in London – –28 May 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
THOMAS MANN
(1875 – 195)

தாமஸ் மான் ஜெர்மனியைச் சேர்ந்த நாவலாசிரியர். சிறுகதை எழுத்தாளர்.
ஜெர்மனியிலுள்ள லூபெக் (LUBECK) நகரில் பிறந்தார். அவருடைய தந்தை பெரும் பணக்காரர். ஆகவே மானின் இளமைக்காலம் மகிழ்ச்சியான பருவமாகக் கழிந்தது. இளம் வயதில் தந்தை திடீரென்று இறக்கவே குடும்பத்தின் சூழ்நிலை தலைகீழாக மாறியது. வறுமை வாட்டியது.
தனது தந்தை எப்படி பணக்காரர் ஆனார் என்பதை அடிப்படையாக வைத்து அவர் முதல் நாவலை BUDDEN BROOKS எழுதினார். மானுக்கு 25 வயதானபோது இந்தப் புதினம் வெளியானது. இது ஜெர்மானிய மொழியில் ஒரு சிறந்த நாவல். இதற்கடுத்த நாவலை அவர் 25 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் எழுதினார். அந்த நாவலின் பெயர் THE MAGIC MOUNTAIN ஆனால் இடைப்பட்ட காலத்தில் அவர் சிறுகதைகளை எழுதினார்.
மாயாஜால மலை (THE MAGIC MOUNTAIN) என்ற புதினம் இவருக்கு அக்காலத்தில் ஐரோப்பாவின் மிகப்பெரிய நாவலாசிரியர் என்ற புகழைத் தந்தது. ஒரு மலைமீதுள்ள மனநோய் மருத்துவமனையில் வாழ்பவர்கள் உலகத்தை எப்படி கண்ணோட்டமிட்டார்கள் என்பதை விளக்கும் கதையாகும். இந்த உலகில் வாழ்பவர்களை அவர்கள் கடவுள்களாகக் காண்கிறார்கள்.
இந்த நாவல் எழுதிப் புகழ் பெற்றவுடன் 1929-இல் மானுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது.
1933ஆம் ஆண்டில் இவர் இன்னுமொரு நாவலை எழுதினார். பழங்கால எகிப்தை கதை நடைபெறும் இடமாக வைத்து எழுதப்பட்டாலும் இக்கால மனிதர்களின் வாழ்க்கை குறித்த எதிரொலியாக இருந்தது இந்த நாவல். இந்த நாவலின் தலைப்பு JOSEPH AND HIS BRETHEREN
மானின் எழுத்துக்களுக்களிடையே இழையோடிய ஒரு கருத்து – தனிமனிதனின் சுதந்திரத்திற்கும் அரசின் கொடுகோன்மைக்கும் இடைப்பட்ட மோதலாகும். நாஜி (NAZI) இயக்கத்தின் போக்கை அவர் முன்கூட்டியே உணர்ந்திருந்தார். அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஜெர்மனியிலிருந்து அமெரிக்கவுக்கு குடியேறினார். அங்குதான் அவரது முக்கிய படைப்பான DR FAUSTUS உருவானது. இந்த நாவல், ஜெர்மனியைப் பிடித்த பைத்தியத்தையும் அது எப்படிப் போரில் நுழைந்தது என்பதையும் விளக்கும் உருவகமாக (ALLEGORICAL) அமைக்கப் பட்டிருந்தது. போர் முடிந்த பின் ஜெர்மனிக்குத் திரும்பிய MANN இறுதிநாட்களை சுவிட்சர்லாந்தில் (SWITZERLAND) கழித்தார்.
–subham—

tags — ஜெர்மனி, நாவலாசிரியர், தாமஸ் மான்





