லத்தின் மொழிக் கவிஞர் வர்ஜில் (Post.9711)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9711

Date uploaded in London – –9 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

VIRGIL

(70 – 19 BC)

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த புகழ்மிக்க ரோமானிய கவிஞர் வர்ஜில் VIRGIL

ஏனீட் (AENEID) என்ற காவியத்தின் கர்த்தா இவர்.

     ஸிசால்பின் என்னுமிடத்தில் இவர் பிறந்தார். இவரது தந்தை குடியானவர் என்று தோன்றுகிறது. மிலன் நகரிலும் ரோமாபுரியிலும் இவர் கல்வி கற்றார். சிறுவயதிலேயே கிரேக்க கவிஞர்கள் வாழ்க்கையைப் பயின்ற அவருக்கு வாழ்நாள் முழுவதும் கவிதை எழுதுவது தொழி லானது. ‘நமக்குத் தொழில் கவிதை; இமைப்பொழுதும் சோராதிருத்தல்’ என்ற பாரதியின் வாக்கு இவர் வாழ்க்கையில் உண்மையானது

வர்ஜில் லத்தின் மொழிக்  கவிஞர்; மிகவும் கூச்சம்முடையவர். ஏனைய ரோமானியப் பெரும்புள்ளிகளைப் போல ராணுவத்திலோ அரசியலிலோ ஈடுபட்டவரல்ல. இருந்தபோதிலும் இவரது நண்பர்கள் மூலம் நாட்டு நடப்புகளை அறிந்தார். அவை இவரது கனிதைகளில் எதிரொலித்தன.

VIRGIL மூன்று பெரிய நூல்களை லத்தின் மொழியில் எழுதினார். அவை THE ECLOGUES, THE GEORGICS, THE ANENEID என்பன.

ECLOGUES என்ற நூலில் இயற்கை, நாட்டுப்புறம் தொடர்பான கிராமிய பாடல்களைக் காணலாம். கி மு 42 – கி மு 37க்கு இடைப்பட்ட காலத்தில் மலர்ந்த கவிதைகள் அவை. வர்ஜில் VIRGILக்கு முதல்  வரிசையில் இடம்பெற்றுக் கொடுத்தவை இவை. சிறிது காலத்திற்கு ரோமானிய அரச வட்டாரத்திற்கு நெருக்கமாகி இருந்த இவர் ரோமில் வாழ்ந்தார். பின்னர் தெற்கு இதாலியிலுள்ள CAMPANIAவுக்குச் சென்று தனது வாழ்நாள் இறுதிவரை நேப்பிள்ஸ் NAPLES நகரில் தங்கினார்.

பண்ணைத்தொழில் பற்றிய இவரது கவிதைகள் கி மு 37 – கி மு 30க்கு இடைப்பட்டவை. என்ற நூலில் இவை உள்ளன.

கி மு 30 முதல் இறுதிநாள் வரையுள்ள காலத்தில் இவர் படைத்ததுதான் AENEID காவியம்.

ஹோமரின் காவியங்கள் அவரது நடையில் பிரதிபலிப்பதைக் காணமுடிகிறது.

AENEID  நூலில் 12 காண்டங்கள் உண்டு. TROY நகர வீழ்ச்சிக்குப் பின்னர் AENEASக்கு என்ன ஆகியது என்பதை விளக்கும் காவியம் இது.

கி மு 19-இல் அவர் இதை எழுதி முடிக்கவில்லை. கிரேக்க நாட்டில் மூன்றாண்டுகள் தங்கி இதை முடிக்க எண்ணியிருந்தார். ஆனால் பயணம் துவங்கிய சிலநாட்களில் நோய்வாய்ப்பட்டார். இதாலிக்குத் திரும்பினார். BRINDISI என்னுமிடத்தில் உயிர்நீத்தார்.    

–subham—

Tags – வர்ஜில், ஏனிட் , லத்தின் மொழி , கவிஞர்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: