கழிவுப் பொருள்களைக் குறைப்போம்! (Post No.9905)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9905

Date uploaded in London – 29 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் சென்னை A அலைவரிசை 720 HZ ச.நாகராஜனின் சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகளை 16-7-2021 முதல் ஒலிபரப்புகிறது. நேரம் காலையில் தமிழ்ச் செய்திகள் முடிந்தவுடன், சரியாக 6.55க்கு ஆரம்பிக்கும் காலைமலர் நிகழ்ச்சியில் முதல் ஒலி பரப்பாக இது அமையும். ஆன்லைன் நிகழ்ச்சியாக கணினி, ஐபாட் மூலமாகவும் இதைக் கேட்கலாம்.

தொடுப்பு : https://onlineradiofm.in/stations/all-india-air-chennai-pc

உரை எண் : 6 – 21-7-21 அன்று காலை ஒலிபரப்பப்பட்டது

கழிவுப் பொருள்களைக் குறைப்போம்!

சுற்றுப்புறச்சூழல் மாசின்றித் திகழ கழிவுப் பொருள்களை கூடிய மட்டில் ஒவ்வொருவரும் குறைப்பது அவசியமாகிறது. சிந்தித்துப் பார்த்தால் இதற்கான ஏராளமான எளிய வழிமுறைகள் நமக்குப் புலப்படும்.

வீட்டில் ஒரு முறைப் பயன்படுத்தியவுடன் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகள்,ஸ்டிரா போன்றவற்றைத் தவிர்க்கலாம். மறுசுழற்சிக்கு உள்ளாகும் பாட்டில்களை மட்டுமே இல்லத்தில் பயன்படுத்த உறுதி பூண்டு செயல்படலாம்.   

                                                                                  வெளியில் மளிகைப் பொருள்கள் அல்லது காய்கறிகளை வாங்கும் போது மொத்தமாக வாங்குவது சாலச் சிறந்தது. ஒவ்வொரு முறையும் ஆகும் பாக்கிங் பொருள்களின் பயன்பாடு இதனால் குறையும். பாக்கிங் இல்லாமல் இருக்கும் பழங்கள், காய்கறிகளை வாங்கி நமது துணிப்பையில் எடுத்து வருவது பாக்கிங் கழிவுப் பொருள் உருவாவதைப் பெருமளவு குறைக்கும்.

தயிர், பால், பருப்பு வகைகள், நொறுக்குத் தீனிகள் ஆகியவற்றைச் சிறிய அளவில் வாங்குவதால் நிறைய பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப் படுகின்றன. இவற்றைக் குறைக்க, பயன்பாட்டு அளவைத் திட்டமிட்டு பெரிய அளவில் வாங்கலாம்.         

                                                                     கடற்கரை, பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களுக்குப் பொழுதுபோக்கிற்கென செல்லும் போது அங்கு எந்தக் குப்பையையும் போடாமல் நாமே கழிவுகளை எடுத்து வந்து உரிய இடங்களில் அவற்றை நீக்கலாம். இதனால் பொது இடங்கள் மிகுந்த சுத்தத்துடன் இருந்து அனைவரின் ஆரோக்கியத்தை உறுதிப் படுத்துவதோடு மனதிற்கு ரம்யமான சூழ்நிலையைத் தரும்.                  பள்ளிகள் திறக்கும் போது பழைய நோட், ஃபைல்களை அப்படியே போட்டு விடாமல் பயன்பாட்டிற்குரியவற்றை மீண்டும் பயன்படுத்தலாம். பழைய ஃபைல்களில் புதிய லேபிளை ஒட்டி பயன்படுத்தலாம்.    

            இல்லத்திற்கான பல்வேறு நுகர்வுக் கட்டணங்களை மின்னஞ்சல் மூலமாகச் செலுத்துவதால் ஏராளமான பேப்பர் பயன்பாடு தவிர்க்கப்படும். கணினி பிரிண்டரில் பேப்பரின் இரு புறமும் பயன்படுத்தும் பழக்கமானது பேப்பர் நுகரவை ஏராளமாகக் குறைக்கும். பேப்பர் பெருமளவு குறைக்கப்படும் போதும் பல்வேறு மரங்களைக் காத்த உணர்வு நமக்கு ஏற்படும்.                  இல்லத்தரசிகள் கழிவுகளை இனம் பிரித்து அததற்குரிய குப்பைப் பெட்டிகளில் அவற்றைப் போடுவதன் மூலம் மறுசுழற்சிக்குள்ளாக வேண்டிய பொருள்களைப் பிரிப்பது எளிதாகும். இப்படிப் பல்வேறு வழிகளை ஒவ்வொருவரும் சிந்தித்துச் செயல்பட்டால் கழிவுப் பொருள்கள் கணிசமாகக் குறையும் அல்லவா?

*

INDEX

Waste Disposal, Avoid plastic, Plan Bulk purchasing, use double side of the paper, wastes to be segrecated

tags- கழிவுப் பொருள்,பிளாஸ்டிக்

Leave a comment

Leave a comment