தள்ளாடும் தமிழகம்! (Post No.10,008)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,008

Date uploaded in London –  23 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தள்ளாடும் தமிழகம்!

ச.நாகராஜன்

1  

தமிழகமே தள்ளாடுகிறது! ஆம், ஏராளமான ‘குடி மகன்களால்’ அது தள்ளாட்டம் போடுகிறது. சிந்திக்கும் திறனின்றி குடி நிறையப் பேரை ஆட்டிப் படைப்பதனால் அது தள்ளாடுவதில் வியப்பே இல்லை. தந்தையை விஞ்சிய விதத்தில் செயல்படும் மகனைப் பார்க்கவே வியப்பாக இருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் “சாதனைகளில்” எதை முதல் சாதனையாக் முன் நிறுத்துவது என்பதில் அறிஞர் பெருமக்களுக்குள் ஒரே குழப்பம் என்பது உண்மை தான்! அத்துணை “சாதனைகள்!”

தாய்க்குலத்தோர் தவிக்க சம்பாதித்த அனைத்தையும் இழந்து தடுமாறும் எண்ணற்ற “குடி மகன்களுக்க்காக” இறைவனை பிரார்த்திப்போமாக!

போதையிலிருந்து விடுபட்டால் பாதை தடுமாறிய இவர்கள் வேதனை நீங்கி நல்வழிக்கு வரட்டும்!

2

அடுத்த சாதனை ஒவ்வொரு தமிழனையும் “கடன்காரனாக்கிய” சாதனை இன்னும் பெரிதோ?! தந்தை இலவச டிவியை வழங்கி அதன் மூலம் அதைப் பார்ப்பதற்கான விண்வழி இணைப்புகளுக்கு காசு வாங்கித் தன் குடும்பத்தைச் செழிக்க வைத்த உத்தி “சிறப்பானது” தான்!

இன்று ஒவ்வொருவனும் கடன்காரனாகித் தவிக்கும் நிலையை டபிள் வாட்ச் காரர் வெள்ளையறிக்கை மூலம் சுட்டிக் காட்டி சாதனை படைக்க உடனே ஒரு நல்ல தமிழர், ‘அய்யா நகைக் கடன் தள்ளுபடியால் வரும் தொகை இவ்வளவு, விவசாயக் கடன் தள்ளுபடியால் வரும் தொகை இவ்வளவு, பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருவதால் வரும் தொகை இவ்வளவு, பஸ் இலவசப் பயணத்தால் வரும் தொகை இவ்வளவு’ என்று ஒரு நீண்ட கணக்கை விரைவாகப் போட்டு வெள்ளை போர்டில் அனைத்தையும் கூட்டி “அடடே! இது கடன் தொகையை விட அதிகமாகி விட்டதே! எங்களுக்கு இவ்வளவும் வேண்டாம், நீங்களே வைத்துக் கொண்டு கடன் தீர்ந்து விட்டது என்று பத்திரம் தந்து விடுங்கள் என்று பத்திரமாகச் சொல்லி விட்டார்.

இப்படிப்பட்ட புத்திசாலிகள் வேண்டாம் என்று தானே முதலில் சொன்னது போல குடிகாரக் கடைகளைத் திறந்து வைத்தோம், இவன் ஏன் அங்கு போகவில்லை என்று அவர்(கள்) கோபப்பட்டால் அதில் நியாயமே இல்லை!

3

அடுத்து ஒன்றியக் குழப்பத்தை திமுக முன் வைக்க, மத்திய வார்த்தையில் நிலையாக இருக்கும் நண்பர் “Take your seat” என்றால் நாற்காலியைக் கையில் எடுத்துக் கொள்வது என்பது அர்த்தம் இல்லை, நண்பரே. உட்காருவது தான் என்று சொல்ல, ஆங்கிலம் தெரியாத நிலையைக் கொண்ட அனைவரையும் மக்கள் இனம் காண முடிந்தது.

4

இரு வாரங்களுக்கு ஒரு குழப்பம் வைத்தால் தங்களின் மொத்த (505) வாக்குறுதியையும் மறந்து ஐந்து ஐம்பத்திரண்டு வாரங்களையும் கடந்து விடலாம் என்ற நிலையில் அடுத்ததாக கடவுள் மேலேயே கையை வைக்கும் விதமாக அர்ச்சனைக் குழப்பம்!

இதில் அறிஞர்களும் நல்லோரும் ஆவேசமாய்ப் பல கேள்விகளை வைத்துள்ளனர்.

இறைவனோ அல்லது பக்தர்களோ இதைக் கேட்டார்களா?

கடவுள் இல்லை இல்லவே இல்லை என்ற ஈவெராவின் சிலை முன்னே அர்ச்சகர் ஆணை கிடைத்தவர்கள் போஸ் கொடுத்து போட்டோ எடுத்துக் கொண்டதிலிருந்தே இவர்கள் நாத்திகம் பேசி நாத்தழும்பேறியவர்களே தவிர நாவார தேவாரம் பாடும் கோஷ்டி இல்லை என்பதை அனைவரும் உணர்ந்து விட்டனர்.

இவர்களுக்கு ஆகம சிலபஸை யார் தந்தது? யார் தேர்வு வைத்தது? எவர் திருத்தினர்? எப்படி சர்டிபிகேட் வழங்கப்பட்டது? கேள்விகள் கணைகளாக வருகின்றன!

பிராமண – பிராமணர் அல்லாதவருக்கு இடையே ஒரு சண்டையையும் பிளவையும் ஏற்படுத்தும் முயற்சியும் கேள்விகளால் துவண்டு விட்டது.

40000 கோவில்களில் ஐந்து சதவிகிதமோ அல்லது அதிக பட்சமாக பத்து சதவிகிதமோ தான் பிராமண அர்ச்சகர்கள்! ஆகவே இதர கோவில்களில் ஆங்காங்கு உள்ள சம்பிரதாயப்படி பிராமணர் அல்லாதாரே முறைப்படி வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.

இது ஒரு புறமிருக்க மசூதிகளில் தமிழில் வழிபாடு நடத்தக் கோராத தமிழக அரசு, சர்ச்சுகளில் (AMEN) ஆமெனைக் கூட தமிழில் சொல்ல வேண்டுமென்று சொல்ல முன் வராத தமிழக அரசு ஹிந்துக் கோவில்களை மட்டும் குறி பார்த்து வழிபாடுகளை பக்தர்களின் இஷ்டப்படி நடத்த விடாமல் செய்ய ஆரம்ப முயற்சிகளை மேற்கொள்வது ஹிந்து மதத்திற்கே ஆபத்தானது என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

அத்துடன் கடவுள் நம்பிக்கை இல்லாத அர்ச்சகர்கள் கோவிலில் நுழைவது ஏன், இதற்குப் பின்னர் உள்ள சதித்திட்டம் என்ன என்று கேட்கின்றனர்.

40000 ஏக்கர் கோவில் நிலம் பறி போயிருக்கிறது. அங்கு பல்வேறு கட்டிடங்கள் எழுந்துள்ளன.

சில ஏக்கர் நிலங்களை மீட்டு விட்டோம் என்று கூறும் தமிழக அரசு அது யார்  வசம் இது வரை இருந்தது, ஏன், எப்படி இருந்தது என்று தெரிவிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோருகின்றனர். இதுவரை நஷ்டத்தை ஏற்படுத்திய அவர்களிடமிருந்து கோவிலுக்குச் சேர வேண்டிய தொகை வசூலிக்கப்பட்டதா என்றும் கேட்கின்றனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக முத்தாய்ப்பானதும் முதலாவதுமான ஒரு விஷயம் இருக்கிறது.

இப்படிப்பட்ட அரசு ஆணை சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பிற்கு எதிரானது என்பது தான்!

இது contempt of the court ஆகுமா? அரசு ஆணை செல்லத்தக்கது அல்ல என்று சுப்ரம்ண்யம் சுவாமி போன்ற மூத்த அறிவாளிகள் கூறுகின்றனர்.

ஆக நீதிக்குப் புறம்பானது, தர்மத்திற்குப் புறம்பானது, பழக்க வழக்க சம்பிரதாயங்களுக்குப் புறம்பானது, ஜாதி கலவரங்களை ஏற்படுத்தக் கூடியது, கோவில் சொத்துக்களுக்கும் நிலங்களுக்கும் நகை, சிலைகள் உள்ளனவற்றிற்கும் ஆபத்தை விளைவிப்பது, தாங்கள் அளித்த வாக்குறுதிகளைப் பற்றி மக்கள் தங்களைப் பல கேள்விகள் கேட்காமல் திசி திருப்புவது உள்ளிட்ட பல காரணங்களுக்காக இந்தச் சட்டம் தவறானதாகும்! இது தனது அதர்மச் சுமையால் சுமை அழுத்தம் தாங்காது தானே விழுந்து விடும்!

It will fall on its own deadweight!

இறுதியாக திருமூலரின் எச்சரிக்கை ஒன்றையும் கூறி இந்தக் கட்டுரையை  முடிக்கலாம்:-

முன்னவனார் கோயில் பூசைகள் முட்டிடின்

மன்னவர்க்குத் தீங்குள வாரி வளம் குன்றும்

கன்னங் களவு மிகுத்திடும் காசினி

என்னரு நந்தி எடுதுரைத் தானே (திருமந்திரம் இரண்டாம் தந்திரம் – திருக்கோயிலிழிவு அதிகாரத்தில் -பாடல் எண் 518)

***

INDEX

திமுக ஆட்சி, குடித்தல் அதிகரிப்பு, கடன் சுமையும் இலவசங்களும் அதிகரிப்பு, ஒன்றியம் உள்ளிட்ட வார்த்தைக் குழப்பம், வழிபாடு மாறுதல்கள், அறிஞர்களின் ஆதங்கமும், கேள்விகளும்,

திருமூலர் திருமந்திரத்தில் எச்சரிக்கை

LIQUOR SHOP Q

TAGS- திருமூலர் ,எச்சரிக்கை, திமுக ஆட்சி ,தள்ளாடும் ,தமிழகம்,

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: