
Compiled BY LONDON SWAMINATHAN
Post No. 10,077
Date uploaded in London – 10 September 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
POEMS WRITTEN BY DR A NARAYANAN, LONDON

அம்பிகையின் மைந்தனே
தும்பிக்கைத் துணைவனே
கணங்களுக்கு அதிபதியே
குணங்களுக்குக் கணபதியே
கந்தனுக்கு முந்தியவனே
சதுர்த்தியில் தோன்றியவனே
சங்கடங்களை நீக்குபவனே
ஆனை முகத்தோனே
பானை வயிறோனே
பல கலைகளுமவனே
பரம குருவுமவனே
மூஞ்சூறு வாகனனே
மோதகப் பிரியனே
விக்ன விநாயகனே
வினையறுப்பவனே
அரசமரத்தடிப் பிள்ளையாரே
ஆழ் கடல் தாண்டிவந்து
ஏழு கண்டம் கோயில் கொண்ட
வேழ முகத்தோனே சித்திக்கு
எத்திக்கும் கோயில் கொண்ட
சித்தி விநாயகனே
நாராயணன், ஸ்ரீ கணபதி துணை
XXX

ONE MORE POEM ON KRISHNA- VISHNU
மாமாயன் மாதவன்
நீட்டிய காலால் நீணில மளந்தோன்
எட்டியுதைத்து எறிந்தானோ மாயச்சகடனை
கட்டிய உரலுடனிணைந்தவன் கவிழ்ந்து செல்ல
தட்டிய உரலால் இரு தருக்கள் தரை சரிய
மீட்டியதோ முனிவர் சாபத்தால் தருவான
தேவரிருவரை காட்டியதோ தாமோதரன் மாயயை
நாராயணன்
DR A NARAYANAN Ph.D. London

–subham–
TAGS- நாராயணன், DR A NARAYANAN , பிள்ளை யார், மாமாயன் , மாதவன்,