
Post No. 10,132
Date uploaded in London – 25 September 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தேவர்களே கவிஞர்களாகப் புவியில் இறங்குகின்றனர்!
ச.நாகராஜன்
அற்புதமான சுபாஷிதங்கள் கவிதைகளைப் பற்றியும் கவிஞர்களைப் பற்றியும் நூற்றுக் கணக்கில் சம்ஸ்கிருதத்தில் உள்ளன. கவிதையின் மதிப்பையும் சுவையையும் அறியும் கவிதா ரஸிகர்களே இப்படிப்பட்ட சுபாஷிதங்களைத் தர முடியும். அவற்றில் நான்கு சுபாஷிதங்கள் இங்கு தரப்படுகின்றன.
1
கவி கரோதி பத்யானி லாலயத்யுத்தமோ ஜன: |
தரு: ப்ரசூதே புஷ்பாணி மருத் வஹதி சௌரபம் ||
கவிஞன் கவிதைகளை இயற்றுகிறான். ஆனால் உத்தம மனிதர்களே அவர்களை ஆதரிக்கின்றனர். மரமானது பூக்களைப் புஷ்பிக்கிறது. ஆனால் தென்றலே மணத்தைப் பரப்புகிறது.
The poet composes the verses, but the best of men patronises them; the tree puts forth flowers, but the breeze spread the fragrance (K.V. Sarma)
2
கவி சூயதி காவ்யானி ஹ்ருதா வததி சஜ்ஜனா: |
சூதே முக்தாள் பயோ ராஷிர் வஹந்தி தருணீஸ்தனா: ||
கவிஞன் (நல்ல) கவிதைகளை இயற்றுகிறான். ஆனால் அவை நல்ல மனிதர்களால் அவர்கள் இதயத்தில் போற்றப்படுகிறது. கடலானது முத்துக்களைத் தருகிறது. ஆனால் அவற்றை பேரழகிகள் மார்பகத்தில் அணிந்து கொள்கிறார்கள்.
A poet composes (good) poems but they are appreciated by good people in their hearts: the sea gives birth to pearls, but they are worn on the bosoms of young women. (A.A.R.)
3
கவி கரோதி காவ்யானி ஸ்வாது ஜானாதி பண்டித: |
சுந்தர்யா அபி லாவண்யம் பதிர்ஜானாதி நோ பிதா ||
கவிஞன் கவிதைகளை இயற்றுகிறான்.ஆனால் அதன் சுவையை அறிஞன் ஒருவனே அறிகிறான். ஒரு பேரழகியின் லாவண்யத்தை அவன் கணவனே அறிவான். அவளது தந்தை அறிய மாட்டான்.
The poet composes poems, but the wise man knows its taste: the charms of the damsel is known to the husband, not to the father. (K.V.Sarma)
4
கவித்வசக்திம்ஹி திவோவதீர்ணா பூமௌ சுதாசார இவார்ய புண்யாத் |
புனர்க்ரஹிதும் நிஜவஸ்து தேவா: சமாகதாஸ்தத் கவய: சமுத்கா: ||
மனிதர்களின் புண்ணியத்தால் சுவர்க்கத்திலிருந்து கவிதா சக்தி புவிக்கு அமிர்த மழையாக இறங்கியுள்ளது. தேவர்களே கவிஞர்கள் போல தங்களது உடைமைகளை மீட்டெடுக்க வந்துள்ளார்கள் என்பது போலத் தோன்றுகிறது.
Poetic power has descended down to the earth from the heavens as a nectarine shower on accout of man’s meritorious deeds. And it would seem that the gods too have come down in the guise of poets, keen to retrieve their possession. (K.V. Sarma)
***

tags– கவிஞர்கள், தேவர்கள், புவி