பிராமணர்களுக்கு தமிழர்கள் வாரி வழங்கியது ஏன்? (Post No.10,481)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,481

Date uploaded in London – –   24 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அதர்வண வேத பூமி சூக்த ஆராய்ச்சிக் கட்டுரை-2

உலகம் முழுதுமுள்ள மாணவர்களுக்கு அதர்வண வேத பூமி சூக்த துதியை கட்டாய பாடமாக வைக்கவேண்டும் ; இதில் மதத்தை விட பொதுவான (More secular than religious) இயற்கை விஷயங்களே அதிகம் உள்ளன. 3000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்துக்கள் இந்த பூமி பற்றி எவ்வளவு சிந்தித்துள்ளனர் என்பதை எண்ணி எண்ணி வியக்காமல் இருக்க முடியாது !

இதோ இரண்டாவது மந்திரம்

அஸம்பாதம்  பத்யதோ மானவானாம்   யஸ்யா உத்வதஹ  பிரவதஹ ஸமம் பஹு

நானாவீர்யா  ஓஷதீர்யா பிபர்த்திம் ப்ருதிவீ நஹ  ப்ரததாம் ராத்யதாம்  நஹ

பொருள்

மலை உச்சியும் பள்ளத்தாக்குகளும் நிறைந்தது இந்த பூமி; மக்களை ஒன்றிணைக்கும் சமவெளிகளை உடையது. பல்வேறு குணப்படுத்தும் மூலிகைகளை உடையது இந்த பூமி. அவள் நமக்காக பல்கிப் பெருகி விசாலம் அடைவாளாக

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது எங்களுக்கு என்ற சொல்லாகும். வேத மந்திரங்கள் பெரும்பாலும் கூட்டுப் பிரார்த்தனை மந்திரங்கள். உலகப் புகழ் பெற்ற, நாலு வேதங்களிலும் உள்ள, காயத்ரீ மந்திரம் கூட எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக என்றே வேண்டுகிறது . இதனால்தான் இமயம் முதல் குமரி வரை உள்ள மன்னர்களும் பிரபுக்களும் பிராமணர்களுக்கு வாரி வழங்கினார்கள் .

மங்கலம் என்ற பெயரில் பல தமிழ்நாட்டு ஊர்கள் உள்ளன. இவை எல்லாம் பிரம்மதேயம்; அதாவது பிராமணர்களுக்கு மன்னர்கள் அளித்த ஊர்கள். இதுதவிர வேள்விக்குடி போன்ற பெயர்களிலும் யக்ஞ பூமி என்பதைக் காணலாம். பார்ப்பனர்கள் தண்டச் சோறு தின்னவில்லை. எப்போது பார்த்தாலும் பாசிட்டிவ் எண்ணங்களைப் positive thoughts  பரப்பி ‘எல்லோரும் வாழ்க’ என்று பிரார்த்தித்தனர். இந்த பூமி சூக்தமும் எல்லோருக்கும் வேண்டுவதை 63 மந்திரங்களிலும் காணலாம்.

ந: (நஹ )= எங்களுக்கு என்பது காயத்ரீ மந்திரம் மற்றும் இந்த இராண்டாவது மந்திரத்தில் வருவதைக் காண்க

மற்றொரு சொல் மனு; மனுவின் வழி  வந்தவர்கள் மானவர்கள் . இன்றும் நாம் மனிதன் என்கிறோம் (மனுஷ= மனித; ஷ =த MAN )

மனுவின் பெயர் ரிக் வேதத்திலும் வருவதால் பிரளயம் ஏற்பட்ட காலம் அதற்கும் முன்னதாக இருக்க வேண்டும் . ஆங்கிலத்திலும் ஐரோப்பிய மொழிகளிலும் மேன் MAN  என்று மனுவை தினமும் நினைவு கூறுகிறார்கள். இதனால் ஒன்று தெளிவாகியறது . வேத கால சொற்களை இன்று வரை புழங்குகிறோம். நாகரீகம் உடைய எவரும் சம்ஸ்க்ருதம் இல்லாமல் பேச முடியாது; தமிழர்களும் சம்ஸ்க்ருதம் இல்லாமல் ஐந்து நிமிடம் கூடப் பேச முடியாது.

ஸம்ஸ்க்ருதச் சொற்களை நீக்கினால் திருக்குறள் செத்துவிடும்; மூன்றில் ஒரு திருக்குறள் அவுட்!

ஆங்கில உலகில் இயற்கையை முன்வைத்துப் பாடிய வோர்ட்ஸ்வொர்த்தும் William Wordsworth மலை பள்ளத்தாக்குகளுடன் தன்  டாபோடில்ஸ் Daffodils கவிதையைத் துவக்குகிறார்

I wandered lonely as a cloud

That floats on high o’er vales and hills

ஆயுர்வேதத்தின் துவக்கம்,  உலகின் பழைய நூலான ரிக் வேதத்தில் உள்ளதை பல துதிகளில் காண முடிகிறது. ஆயுர்வேத மூலிகைகளை பகிரங்கமாகப் பயன்படுத்தியதை அனுமன் சஞ்சீவி பர்வத சம்பவத்தில் காண முடிகிறது. இங்கும் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே மூலிகை வளரும் பூமி என்று முனிவர்- புலவர் புகழ்கிறார்

HANUMAN FLYING WITH SANJEEVINI PARVATHA  IN YAGA FIRE

ஓஷதி என்ற சொல்லைக் கவனிக்கவும் ; அதிலிருந்து வருவதே நம் தமிழ் நூல்களிலும் காணும் அவுடதம்= ஒளஷதம் (ஷ=  ட )

Xxx

இதோ மூன்றாவது மந்திரம்

யஸ்யாம் ஸமுத்ர உத ஸிந்துராபோ  யஸ்யாமன்னம்  க்ருஷ்டயஹ  ஸம்ப பூவுஹு 

யஸ்யாமிதம் ஜின்வதி ப்ராண தேஜத்  ஸா நோ பூமிஹி பூர்வபேயே ததாது

பொருள்

“ஆழி  சூழ்  உலகமும்  நதிகளும் நீர்நிலைகளும் நிறைந்த பூமி,

எவளிடத்தில்   உணவும் தானிய நிலங்களும்    உள்ளதோ

எவளிடத்தில் உயிர்விடும் (சுவாசிக்கும்), நகரும் ஜீவன்கள் உள்ளனவோ

அவள் எங்களுக்கு விளைச்சளைப் பெருகி விசாலம் ஆகட்டும்”

இதிலுள்ள ‘அன்னம்’, ‘பூமி’= புவி (ம=வ), ப்ராண (பிராணன் உள்ளது பிராணி) போன்றசொற்களை நம் இன்றும் எல்லா இந்திய மொழிகளிலும் பயன்படுத்தி வருகிறோம்.

நகர கூடிய, சுவாசிக்கக்கூடிய என்ற அ ழகான சொற்களால் எல்லா உயிரினங்களையும் முனிவர் குறிப்பிடுகிறார். சென்ற மந்திரத்தில் நகராத தாவரங்களை மட்டும் கண்டோம். இந்த மந்திரத்தில் ஒரு நாட்டின் செல்வமான தாவரங்களும் பிராணிகளும் வந்துவிடுகின்றன. வேத கால இந்துக்கள் நாடோடிகள் அல்ல; விவசாயிகள்; தா னிய உழவு நிலங்களைக் குறிப்பிட்டு அமோக அறுவடைக்கும் வேண்டுவதால் பக்கா விவசாயிகள் என்பதும் தெளிவாகிறது

இதை எழுதும் போது பாரதியார் சொன்ன கடல், மலை, ஜீவராசிகள் அனைத்தும் நினைவுக்கு வரும்:-

காக்கை குருவி எங்கள் ஜாதி

நீள் கடலும்  மலையும் எங்கள் கூட்டம் —

இந்த அருமையான கருத்தை 3-ஆவது மந்திரத்தில் காணலாம்.

–தொடரும்

TAGS– பூமி சூக்த ஆராய்ச்சி-2, மலை, கடல், ஓஷதி , பிராமணர்கள்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: