ராதையும் கோதையும் (Post No.10,501)

WRITTEN BY Dr A Narayanan

Post No. 10,501

Date uploaded in London – –   29 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கண்ணனைக் கடத்திய கன்னியர்

(Uploaded on 2nd January 2022)

தேடியவள் வந்தாளோ

தேடுபவனைக் கண்டாளோ

ஒடியதவ ளுடெம்பெலாம்

ஊதுகுழல் கான ஒலி

உளத்தி லுஞ்சலா டியவன்

உதட்டிலே உறவாடி

தேனுரும் பார்வையிலே

தேரோட்டம் கண்ட சாரதி

ரதியோ இந்த ராதை என்

கதியோ முக மதியோ வென

குழல் தழுவிய கை வார்

குழலி இடை தழுவியது

வண்ண மலர் தேன் உரும்

வண்டினம் போல் வந்தகோபியர்கள்

முகுந்தன் மூச்சுக் காற்றில்

மூர்ச்சித்த ராதையைக் கண்டு

கடத்தினரோ கோவலனை யாதவனோ

மாதவனோ யாவரமிவனோடு

உறவாடபிறவிப் பெரும் பேறாக

பெருந்தன ஆய்ச்சியரை

பிடித்த பேயோ அவ்வஞ்சியர்

கண்ட இடமெலாம் ஒன்றில்

பலவாக நின்றோன் பண்டொரு

நாள் பேய்முலை நஞ்சுண்டனே

நாராயணன்

xxxxxxxxxxxxxxx

POEMS BY DR A NARAYANAN, LONDON

ராதையும் கோதையும்

அந்திமந்தாரைப் பூத்த சந்திவேளையில்

முந்தானையில் முகுந்தனை முடியத் தேடி

வந்த வனிதை ராதையைக் கண்டோடி

ஏங்கிய அவள் மார்பகத்து விமலன் விட்ட

மூச்சுக்காற்று சிந்திய முத்தமோ வெனப்

பேச்சிலா நிலைலயிலவள் கண்கள் சொருக

மேனிப் பெருகிய நீரைப் பருகியதவள் 

மேலாடை யாயினும் பால் மணமே

ஆய்ச்சியர் குலப் பெண் மனமேயாக 

அவளுடல் பெருகியது பாலோவென்ற

தவள் வெண்ணிறமான மேலாடை

மேவிய நூலிடையை இடைச்சி மகன்

மேகலையாய்த் தழுவ எம்மாதருமவன்

மேய்த்திடும் கறவையாய் சுரந்த பாலில்

திரண்ட அன்பாயமுதாயயராப்பற்றாய்

ஆயன் திருடியுண்ட வெண்ணெயாக

வெண்ணெய் களவாடிய கண்ணன்

பெண்ணுள்ளம் பத்திச்சிறைப் பட்ட

மறையோனென விண்ணோரன்றி

மண்ணோரறியா மாயன் லீலையே 

வட மதுரை ராதையின் மேகலையில்

தென் மதுரைக் கோதையின் பாமாலை

தென்றல் சுமந்தத் தேனிசையாயொலிக்க

கன்றொன்று அலருகிறதென்றதனைக்

காக்கச்செல்ல வேண்டுமென்று சாக்கு

சொல்லித் தப்பி வந்த தாமோதரனை

விட்டு விடுவாளோ வில்லிபுத்தூராழ்வான்

விட்டுசித்தன் மகள்!  தேடி வந்த வேணு

விலோலனுக்குச் சூடிக்கோடுத்தப் பூ

மாலையில் பாசுரங்களின் மணம் கமழ

மாதவியின்  மஞ்சள் முகத்தில் தஞ்ச

மடைந்த மாதவனே கஞ்சன் வயிற்றில்

நெருப்பென்ன நின்ற நெடுமாலன் 

நப்பின்னையின் மாலை ஏற்று அவள்

கைப்பற்றித் தீவலம் வந்துத் தாள்பற்றி

மெட்டியிட்டுத் தாரமாக்கிய தரணீதரனே

பண்டொரு நாள் ஆமையாய் அமுதம் 

கடைந்த மந்தரகிரியை மத்தாகத் தாங்க

இன்றோ மங்கையர் மனமெனும் தாழியில்

மத்தாகி பத்தியெனுமமுதம் கடைகிறான் 

உலகத்தோர் உடலுறவாடல் போகம்

உள்ளத்தினுள்ளனோடுறவாடல் யோகம்

BY DR A. NARAYANAN, LONDON

Xxxxxxxxx

சபரிகிரி சாமியே அருள் தாராய்

சபரி கிரி வாழ் சாமி நமோ நம

சர்வ மங்கள ரூபா நமோ நம

சரணம்  ஐயப்பா நமோ நம

அருள் தாராய்

மகர ஜோதியான மணிகண்டனே  நமோ நம

மாலையணிந்துன் மலை ஏறுவோம் நமோ நம

மண்டியிட்டு வருவோரை மறவாத மலையோனே

அருள் தாராய்

ஹரி ஹர சுதனாய் அவதரித்தாய் நமோ நம

ஆதியந்த மில்லா ஈசா நமோ நம

நாதி இலலாதர் நாடிடும் தேவா நமோ நம

அருள் தாராய்

இருமுடி கட்டி உன் திருவடி சேவைக்கு

கல்லும் முள்ளுமுள்ள பாதையானாலும்

கால் வருந்தா வந்தோரைக் கைவிடா

கனக  கிரி ராஜா  நமோ நம

அருள் தாராய்

திரியும் நெய்யும் இட்ட தீபத்தில்

எரியுமோ எங்கள் மேல் சாபமெல்லாம்

ஏற்ற நிலையில் போற்றும் தெய்வமாய்

தேற்றி எம்மைக் காப்பாய் நமோ நம

அருள் தாராய்

ஓதிய வேதமே சரணமயப்பாவென

சாதி சமயம் பாராத தேவனே

தேதியும் கிழமையும் பாராது

தேவை ஒன்றுன் சரணமே ஐயனே

அருள் தராய்

மகர ஜோதியான மணிகண்டனே நமோ நம

மாலையணிந்துன் மலை ஏறுவோம் நமோ நம

மண்டியிட்டு வருவோரை மறவாதமலையோனே

அருள் தாராய்

நாராயணன்

—- subham —–

Tags- ராதையும் கோதையும், சபரிகிரி சாமியே ,அருள் தாராய்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: