COMPILED BY KATHUKUTTI, CHENNAI
Post No. 10,835
Date uploaded in London – – 12 APRIL 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
COMPILED BY கத்து குட்டி, CHENNAI
மனைவியிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டால், அது “யோகா”.
மனைவி திட்டுவதை காதில் வாங்கி கொள்ளா விட்டால், அது “தியானம்”.
யோகாவும், தியானமும் நம் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம் மக்களே…!
*
‘தோளுக்கு மேல வளர்ந்தாச்சு !
இனி இவனை அடிக்க முடியாதுன்னு”
பெத்தவங்க, மகனை அடிக்க இன்னோருத்தியை ஏற்பாடு பண்றது தான் திருமணம்!
*
மாப்பிள்ளை வீட்டில், “மாப்பிள்ளைக்கு ஒரு தங்கை உண்டு” என்று சொன்னவுடனே, பெண்ணுக்கு லேசா கொஞ்சம் முகம் வாடும்.
ஆனால்
பெண் வீட்டில் “பெண்ணுக்கு, ஒரு தங்கை உண்டு” என்று சொன்னவுடனே மாப்பிள்ளைக்கு ஒரு சந்தோஷம் முகத்தில் பிரகாசிக்கும் பாருங்கள்!
ஆண்களுக்கு எப்பவுமே பரந்த மனசுங்க.
*
இது தான் அர்த்தம்!
அடிக்கடி டீயோ, காபியோ கேட்கிறார் என்றால்
உங்கள் நிறுத்தாத பேச்சை புத்துணர்ச்சியுடன் கேட்க விருப்புகிறார் என்று அர்த்தம்.
.
மற்ற அழகான பெண்களை பார்க்கிறாரா?
என் பொண்டாட்டிய விட அவ என்ன அழகான்னு செக் பண்றார்னு அர்த்தம்.
.
உங்கள் சமையலை குறை கூறிக்கொண்டே இருக்கிறாரா?
அவரது சுவையறியும் திறன் கூடிக்கொண்டே போகிறது என்று அர்த்தம்.
.
இரவில் குறட்டை விட்டு உங்கள் தூக்கத்தை கெடுக்குறாரா?
.
உங்களை மணந்தபின் தான் நிம்மதியாக உறங்குகிறார் என்று அர்த்தம்.
.
உங்கள் பிறந்தநாளுக்கு பரிசு வாங்கி தரவில்லையா?
.
உங்கள் எதிர்காலத்துக்கு பணம் சேமித்து வைக்கிறார் என்று அர்த்தம்.
.
நேசித்தே ஆகவேண்டும் உங்களுக்கு வேற வழியும் இல்லை.
*
மனைவியும் திருக்குறளே!
மூணு காரணங்களால், மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!!
1. நிறைய “அதிகாரம்” இருப்பதால்.
2. நிறைய இடங்களில் “புரிந்தும், புரியாமலும்” இருப்பதால்.
3. இரண்டு “அடி”யில், எல்லாவற்றையும் உணர வைப்பதால்…..வாழ்க வளமுடன்!
சும்மா நகைச்சுவைக்காக போடப்பட்டது இந்த பதிவு!
XXX
ஆண்கள் பெண்களைப்பற்றி பேசுவதைவிட பெண்கள் ஆண்களைப்பற்றி மூன்று மடங்கு அதிகமாக பேசுகிறார்கள்!!!
பூமியில் வாழும் 85% உயிரினங்கள் என்ன தெரியுமா???
“பூச்சிகள்”
TAGS – மனைவி, திருக்குறளே, ஞான மொழிகள் – 32 , அதிகாரம்,