ஞான குறள் மொழிகள்-104; ஜட்ஜ்: எதற்காக விவாகரத்து கேட்கிறாய்? (Post No.11,136)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 11,136

Date uploaded in London – 25 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

தெருக்குறள்—வெள்ளத்துப்பால்

—————————————————————————————

தமிழில் ஒன்றேமுக்கால் அடியில் டிவிட்டரை அந்த காலத்துலேயே தட்டிவிட்ட

வள்ளுவர் இன்று இருந்து சென்னையை உலுக்கிய மழைவெள்ளத்தை

அனுபவித்திருந்தால் எந்த மாதிரி குறள் எழுதியிருப்பார்…ஒரு கற்பனை

————————————————————————————————–

மேட்டினில் வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்

‘போட்’டினில் பின் செல்பவர்

———-

வெள்ளப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார்

வேளச்சேரியில் வீடு கட்டியோர்

———————

மேல்தளத்தில் வசிப்போரே பிழைத்தார்…இளைத்தார்

கீழ்போர்ஷனில் குடி இருப்பவர்.

————————-

நிலமெங்கு வாங்கினும் நன்கு கேட்டறிக.

ஜலம் உள்ளே வருமாவென !

—————————–

சம்சாரம் தந்திடுமே துன்பம் புயல்மழையால்

மின்சாரம் போயினும் அஃதே !

————————-

வெள்ளத்தால் வந்திடும் துயரம் – நல்ல

உள்ளத்தோர் உதவா விடின்

—————————-

நீர்மட்டம் ஏறி வீட்டினில் புகுந்திடின்

ஊர்வனவால் பெருந்தொல்லை காண்.

———————————

ஏரிப் படுகையில் வீட்டைக் கட்டினால்

நாறிடும் பிழைப்பு என்றறி.

———————————————-

தண்ணீராய் செலவழித்து கட்டிய வீடுதனில்

தண்ணீரே நுழைந்தது பார்,

———————————————-

ஆஸ்தியென ஆசையாய் கட்டின வீடெல்லாம்

நாஸ்தி ஆனதே சோகம்

————————————————————

இருளில் தவிப்பது துன்பமதனினும் துயரம்

பொருள்கள் பாழாகும் நிலை *

சிரிக்காம படிக்கனும்* 😀😀😀😀😀

*ஜட்ஜ்:* எதற்காக விவாகரத்து கேட்கிறாய்???

*விண்ணப்பதாரர்:* ஐயா என் மனைவி என்னை தினமும் பூண்டு உறிக்கச் சொல்கிறாள். வெங்காயம் வெட்டச் சொல்கிறாள் , பத்து பாத்திரம் தேய்க்கச் சொல்கிறாள். என்னால் முடியவில்லை .

அதனால் விவாகரத்து தாருங்கள். …

*ஜட்ஜ்:* இதெல்லாம் காரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது. உரிக்க வேண்டிய பூண்டை ஒரு பாட்டிலில் போட்டு மூடி நான்கு முறை குலுக்கினால் தோல் தன்னால் வரப்போகிறது. ,

அரிய வேண்டிய வெங்காயத்தை பத்து நிமிடம் பிரிடஜ்ல வைத்தால் ஈசியாகவும் வெட்டலாம் அரியும்போது கண்ணிலும் தண்ணீர் வராது. , பத்து பாத்திரத்தையெல்லாம் பத்து நிமிஷம் தண்ணீரில் ஊறவைத்து விம் பாரால தேய்ச்சா சரியாபோயிடுது. அப்படியும் போகலேன்னா பேக்கிங் பவுடர் ஒரு சிட்டிகை போட்டு ஒரு ஸ்பூன் வினிகர் விட்டா எப்படிபட்ட தீச்சல் கடாயா இருந்தாலும்பளிச்சுண்ணு ஆயிடும்,

அது மட்டுமில்ல துணிய சர்ப்ல ஊறவைக்கறதுக்கு முன்னாடி , நல்ல தண்ணியில ஒருதடவ நனைக்கணும்.

அதன் பின் சர்ப்ல ஊறவைச்சி மிஷின்ல போட்டா, துணி தும்ப பூ மாதிரி இருக்கும்.

நீ சொன்ன காரணங்களுக்கொல்லாம் டைவர்ஸ் தரமுடியாது. புரிஞ்சதா…?

*விண்ணப்பதாரர்:* ஐயா நல்லா புரிஞ்சதுங்க.

*ஜட்ஜ்:* என்ன புரிஞ்சது.?

*விண்ணப்பதாரர்:* _*எம் பொண்டாட்டி பூண்டு , வெங்காயம், பாத்திரத்தோட நிறுத்திகிட்டா, ஆன நீங்க துணியும் துவைக்கிறீங்க!!*_ 

Xxxx

Tags- ஞான குறள் மொழிகள் 104, ஜட்ஜ், விவாகரத்து,

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: