மணிமேகலை பொன்மொழிகள் 31; ஆகஸ்ட் 2022 காலண்டர் (Post No.11,153)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,153

Date uploaded in London – –    30 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

விழா நாட்கள் – ஆகஸ்ட் 1 ஆடிப்பூரம் /ஆண்டாள் பிறந்த தினம்; 3-ஆடிப்பெருக்கு , சிலருக்கு ரிக் உபாகர்மம்; 5-வரலெட்சுமி விரதம் ; 11- யஜுர் உபகர்மா சிலருக்கு ரிக் உபாகர்மம், ரக்ஷா பந்தன்; 12- காயத்ரீ ஜபம்; 13- ஸ்ரீ ராகவேந்திரர் ஆராதனை ; 15- சுதந்திர தினம் ; 19- ஜன்மாஷ்டமி ; கோகுலாஷ்டமி /கிருஷ்ணர் பிறந்த தினம் ; 20-ஸ்ரீ ஜயந்தி ; 31- கணேஷ் சதுர்த்தி

சுப முகூர்த்த தினங்கள்- ஆகஸ்ட் 21, 24, 29.

அமாவாசை – 26; பெளர்ணமி -11; ஏகாதசி உண்ணா விரத நாட்கள் – 8, 22/23

Xxx

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

மணிமேகலை மேற்கோள்கள்

ஆகஸ்ட் 1 திங்கட் கிழமை

மண்தினி ஞாலத்து வாழ்க்கைக் கெல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரரே

xxx

ஆகஸ்ட் 2  செவ்வாய்க் கிழமை

சோழ மன்னன் வேண்டியதால் அகத்தியர் தண்ணீர் கலசத்தைக்

கவிழ்க்கவும் காவிரி உற்பத்தி

கஞ்ச வேட்கையிற் காந்தமன் வேண்ட அமர முனிவன் அகத்தியன் தனாது

கரகங் கவிழ்த்த காவிரிப் பாவை (மணி. பதிகம் 11-10)

Xxx

ஆகஸ்ட் 3   புதன் கிழமை

காவிரி நதி ஜீவ நதி

கோள்நிலை திரிந்து கோடை நீடினும்

தான் நிலை திரியாத் தண்டமிழ் பாவை

xxxx

ஆகஸ்ட் 4 வியாழக் கிழமை

அறம் அல்லது தர்மம் என்றால் என்ன, புலவரே?

அறம் எனப் படுவது யாது எனக் கேட்பின்  மறவாது இது கேள் மண் உயிர்க்கெல்லாம்

உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல் (மணி 25-228)

xxx

ஆகஸ்ட் 5 வெள்ளிக் கிழமை

பரசுராமனின் கோபத்துக்கு ஆளாக வேண்டாம்

மன் மருங்கறுத்த மழுவாள் நெடியோன்  தன் முன் தோன்றற்காதொளி நீ யெனக்

கன்னி ஏவலிற் காந்த மன்னவன்  அமர முனிவன் அகத்தியன் ரனாது

துயர் நீங்கு கிளவியின் யாறேன் றறவும் 11-25

 xxxx

ஆகஸ்ட் 6 சனிக் கிழமை

யவனர்களும் தமிழர்களுடன் வேலை

மகத வினைஞரும் மராட்டக் கம்மரும்  அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும்

தண்டமிழ் வினைஞர் தம்மொடு கூடி

 xxxx

ஆகஸ்ட் 7 ஞாயிற்றுக் கிழமை 

பசி வந்திட பத்தும் பறந்துபோகும்

குடிப் பிறப்பு அழிக்கும்; விழுப்பம் கொல்லும்; பிடித்த கல்விப் பெரும்புணை விடூ உம்;

நாண் அணி களையும்;மாண் எழில் சிதைக்கும்; பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்

பசிப் பிணி என்னும் பாவி (மணி 11-76)

 xxxx

ஆகஸ்ட் 8 திங்கட் கிழமை

செல்வத்தின் பயனே ஈதல்

ஆற்றுனர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்  ஆற்றா மாக்கள் அரும் பசி களைவோர்

மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை  மண்தினி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே (மணி.11-92)

xxxx

ஆகஸ்ட் 9  செவ்வாய்க் கிழமை

அரசன் இல்லாவிடில் நாட்டில் என்ன நடக்கும்?

கோல் நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும்

கோள்நிலை திரிந்திடின் மாரிவறங்கூரும்

மாரிவறங்கூரின் மன் உயிர் இல்லை

xxxx

ஆகஸ்ட் 10  புதன் கிழமை

மன் உயிர் எல்லாம் மண்ணாள் வேந்தன்

தன்னுயிர் என்னும் தகுதி இன்றாகும்

தவத்திறம் பூண்டோள் தன்மேல் வைத்த

அவத்திறம் ஒழிக (மணி 7-8)

xxxx

ஆகஸ்ட் 11 வியாழக் கிழமை

ஆறு அறிவு படைத்த மனிதன்

பல்லுயிர் அறுவகைத் தாகும்

மக்களும் தேவரும் நரகரும் பிரமரும்

தொக்க விலங்கும் பேயுமென்றே (30-56)

xxxxx

ஆகஸ்ட் 12 வெள்ளிக் கிழமை

மாதவியை அறவண அடிகள் எப்படித் தேற்றினார்? 

பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம், பிறவார் உறுவது பெரும் பேர் இன்பம்

பற்றின் உறுவது முன்னது பின்னது  அற்றோர் உறுவது அறிக (2-64)

 xxx

ஆகஸ்ட் 13 சனிக் கிழமை

பூம்புகாரில் இந்திர விழா

ஓங்குயர் மலயத்து அருந்தவன் உரைப்பத் தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன்

விண்ணகர் தலைவனை வணங்கி முன்னின்று மண்ணகத்து என்றன் வான்பதி தன்னுள்

மேலோர் விழைய விழாக் கோளெடுத்த நாலேழ் நாளினும் நீன்கனி துறைகே

அமரர் தலைவன் ஆங்கது நேர்ந்தது (மணி 1.11-39

 xxxx

ஆகஸ்ட் 14 ஞாயிற்றுக் கிழமை

மணிமேகலை யார் யாருக்கு உணவு கொடுத்தாள்?

காணார், கேளார், கால் முடப் பட்டோர்

பேணுநர் இல்லோர் பிணி நடுக்குற்றோர்

யாவரும் வருக என்று இசைத்துடன் ஊட்டி (மணி 13-111)

Xxxx

 ஆகஸ்ட் 15 திங்கட் கிழமை

இளமையும் நில்லா யாக்கையும் நில்லா அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்

மறவாது இதுகேள்; மன்னுயிர்க்கெலாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது

கண்டது இல்லென காவலன் உரைக்கும்

xxx

ஆகஸ்ட் 16  செவ்வாய்க் கிழமை

வினையின் வந்தது வினைக்கு விளைவாது

புனைவன நீக்கின் புலால்புறத்து இடுவது

xxx

ஆகஸ்ட் 17  புதன் கிழமை

மூப்பு விளி உடையது தீப்பிணி இருக்கை

xxx

ஆகஸ்ட் 18 வியாழக் கிழமை

பசிப்பிணி என்னும் பாவி

xxx

ஆகஸ்ட் 19 வெள்ளிக் கிழமை

பாடல்சால் சிறப்பின் பரதத்து ஓங்கிய
கோடாச் செங்கோல் சோழர் தம் குலக்கொடி

xxx

ஆகஸ்ட் 20 சனிக் கிழமை

உணர்ந்தோள் முன்னர் உயர் தெய்வம் தோன்றி
‘மனம் கவல் ஒழிக!’ என மந்திரம் கொடுத்ததும்

xxx

ஆகஸ்ட் 21 ஞாயிற்றுக் கிழமை 

இளங்கோ வேந்தன் அருளிக் கேட்ப
வளம் கெழு கூல வாணிகன் சாத்தன்
மா வண் தமிழ்த் திறம் மணிமேகலை துறவு
ஆறு ஐம் பாட்டினுள் அறிய வைத்தனன்

xxxx

ஆகஸ்ட் 22 திங்கட் கிழமை

ஐம் பெருங்குழுவும் எண் பேர் ஆயமும்
வந்து ஒருங்கு குழீஇ ‘வான்பதி தன்னுள்

xxx

ஆகஸ்ட் 23 செவ்வாய்க் கிழமை

திரு விழை மூதூர் வாழ்க!’ என்று ஏத்தி
‘வானம் மும் மாரி பொழிக! மன்னவன்
கோள் நிலை திரியாக் கோலோன் ஆகுக!

xxx

ஆகஸ்ட் 24  புதன் கிழமை

பூரண கும்பமும் பொலம் பாலிகைகளும்
பாவை விளக்கும் பல உடன் பரப்புமின்
காய்க் குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும்
பூக் கொடி வல்லியும் கரும்பும் நடுமின்

xxx

ஆகஸ்ட் 25 வியாழக் கிழமை

நுதல் விழி நாட்டத்து இறையோன் முதலா
பதி வாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறு ஆக
வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை
ஆறு அறி மரபின் அறிந்தோர் செய்யுமின்

xxx

ஆகஸ்ட் 26 வெள்ளிக் கிழமை

ஒட்டிய சமயத்து உறு பொருள் வாதிகள்01-060
பட்டி மண்டபத்து பாங்கு அறிந்து ஏறுமின் 

xxx

ஆகஸ்ட் 27 சனிக் கிழமை

‘பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க!’ என வாழ்த்தி
அணி விழா அறைந்தனன் அகநகர் மருங்கு

xxx

ஆகஸ்ட் 28 ஞாயிற்றுக் கிழமை 

மணம் மலி கூந்தல் சிறுபுறம் புதைப்ப
கண்ணீர் ஆடிய கதிர் இள வன முலை
திண்ணிதின் திருகி தீ அழல் பொத்தி
காவலன் பேர் ஊர் கனை எரி ஊட்டிய
மா பெரும் பத்தினி

xxx

ஆகஸ்ட் 29 திங்கட் கிழமை

அழுக்கு உடை யாக்கையில் புகுந்த நும் உயிர்
புழுக்கறைப் பட்டோர் போன்று உளம் வருந்தாது
இம்மையும் மறுமையும் இறுதி இல் இன்பமும்
தன் வயின் தரூஉம் என் தலைமகன் உரைத்தது

xxx

ஆகஸ்ட் 30  செவ்வாய்க் கிழமை

நல் இள அன்னம் நாணாது ஆங்கு உள
வல்லுநகொல்லோ மடந்தை தன் நடை?
மா மயில் ஆங்கு உள வந்து முன் நிற்பன
சாயல் கற்பனகொலோ தையல் தன்னுடன்?
பைங் கிளி தாம் உள பாவை தன் கிளவிக்கு
எஞ்சலகொல்லோ? இசையுந அல்ல’

xxxx

ஆகஸ்ட் 31   புதன் கிழமை

குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும், 
திலகமும் வகுளமும் செங் கால் வெட்சியும்
நரந்தமும் நாகமும் பரந்து அலர் புன்னையும்
பிடவமும் தளவமும் முட முள் தாழையும்
குடசமும் வெதிரமும் கொழுங் கால் அசோகமும்
செருந்தியும் வேங்கையும் பெருஞ் சண்பகமும்
எரி மலர் இலவமும் விரி மலர் பரப்பி 03-160
 

xxxxx

Tags- மணிமேகலை மேற்கோள்கள், மணிமேகலை, பொன்மொழிகள்,  ஆகஸ்ட் 2022 காலண்டர்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: