வால்மீகி  ராமாயணத்தில் பெண்கள் – 2 (Post.11,270)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,270

Date uploaded in London – 16 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இந்தக் கட்டுரையின் முதல் பகுதி நேற்று வெளியிடப்பட்டது .

இந்து மதம் ஒன்றில்தான் பெண்ணுக்கு சம உரிமை அளிக்கப்படுகிறது. இதை அர்த்த நாரீஸ்வரர் சிற்பம் விளக்குகிறது (சிவன் பாதி, உமை பாதி உருவம்). மனைவிக்கு வேதத்தில் அர்த்தாங்கினி  என்று பெயர். இதை இன்று ஆங் கிலத்தில்  தி அதர் ஹாப் THE OTHER HALF என்கின்றனர். இந்து மதத்தில் வாம/ இடது பாகத்தைப் பெண்களுக்கு அளித்தனர். இதை கிறிஸ்தவர்கள் அப்படியே எடுத்துக் கொண்டனர். பைபிளின் முதல் அதிகாரத்திலேயே ஆணின் இடது விலா எலும்பை எடுத்து இறைவன் பெண்ணை உருவாக்கினான் என்று கிறிஸ்தவர்கள் எழுதிவைத்தனர். அர்த்த நாரீஸ்வரர் சிலையில் இடது பக்கம் உமை /பார்வதி இருப்பதைப் பார்த்து அவர்கள் கற்றுக்கொண்டனர். பெண்களுக்கு தர்ம பத்தினி என்று இந்து மதத்தில் பெயர்; அதாவது அவள் இல்லாமல் எந்த நல்ல காரியமும் செய்யக்கூடாது; செய்ய முடியாது. பிற மதங்களில் பெண்களுக்கு இந்த பங்கு, பணி விதிக்கப்படவில்லை. யாக யக்ஞங்களில் அவர்கள் அருகில் நிற்பதோடு அவர்கள் ஒரு தர்ப்பைப் புல்லின் மூலம் கணவனின் தோளைத் தொட்டுக்கொண்டு நிற்பார்கள். அதாவது அவர்கள்தான் BATTERY பாட்டரி; அவர்கள் மூலம் கரண்ட் பாய்ச்சப்பட்டவுடன்தான் கணவர் சக்தி பெறுகிறார். நான் இல்லாமல் நீ இல்லை என்று சொல்லுவது போன்றது இது.

XXX

இவைகளை வால்மீகி ராமாயணத்தில் (வா.ரா .)காண்போம்

சீதையை காட்டுக்கு வரவேண்டாம் ஏனெனில் சிங்கம், புலி உலவும்; காலில் முள் குத்தும்; மேலும் சந்நியாசி (No sex; celibate life) வாழ்க்கை என்று எச்சரிக்கிறான்; சீதையோ கணவன் இருக்கும் இடமே சொர்க்கம்; ராமன் இருக்கும் இடமே அயோத்தி ; கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை! சாமியே ராமப்பா என்கிறாள் .

மனைவி என்பவள் பிறவிதோறும் தொடர்ந்து வருபவள்; இதற்கு சங்கத் தமிழ் நூல்களும் இயம்பும். எற்றறைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உற்றோமே ஆவோம் உமக்கே நாம் ஆட்செய்வோம் (ஆண்டாள் திருப்பாவை 29) என்று சீதை கூறுகிறாள்:

आर्यपुत्र पिता माता भ्राता पुत्रस्तथा स्नुषा।

स्वानि पुण्यानि भुञ्जानाः स्वं स्वं भाग्यमुपासते।।2.27.3।।

Translation

आर्यपुत्र ஆர்ய புத்ர (பண்பாடுமிக்கவனே) , पिता தந்தை , माताதாய் , भ्राता சகோதரன் , पुत्रः மகன் , तथा அவ்வாறே , स्नुषा மருமகள் , स्वानि அவர்களுடைய , पुण्यानि புண்யங்களை , भुञ्जानाःஅனுபவிக்கையில் , स्वं स्वम् அவரவர்  भाग्यम् விதிப்படி , उपासते கிடைக்கிறதல்லவா

இங்கே பூர்வ ஜன்மக் கருத்து வருகிறது

ஆர்ய புத்ர பிதா மாதா ப்ராதா புத்ரஸ் ததா

ஸ் வானி புண்யானி புஞ்ஜனாஹா  பாக்யம் உபாஸதே

XXX

வா.ரா.2-27-6

यदि त्वं प्रस्थितो दुर्गं वनमद्यैव राघव।

अग्रतस्ते गमिष्यामि मृद्नन्ती कुशकण्टकान्।।2.27.6।।

“ராகவா! (ரகு வம்ச ஆண் மகனே), நீ இப்போதே காட்டுக்குப் புறப்பட்டால் , உனக்கு முன்னே நான் முட்களையும், புல்லையும் நசுக்கிக்கொண்டு நட ப்பேன் — என்று சீதை சொல்கிறாள். அதாவது உனக்கு மெத்தை போன்ற பாதையைப் போட்டுத் தருவேன்”.

राघव ராகவா , अद्यैव இப்போதே , त्वम् நீங்கள் , दुर्गम् ஊடுருவ முடியாத , वनम् காட்டுக்கு , प्रस्थितः यदि புறப்பட்டால்  कुशकण्टकान् குச புற்கள், முட்கள் மீது , मृद्नन्ती நசுக்கி மெதுவாக்கிக்கொண்டு , ते अग्रतः iஉனக்கு முன்னால் , गमिष्यामि I நான் செல்வேன்

யதி த்வம் பிரஸ்திதோ துர்கம் வானம் அத்யைவ ராகவ

அக்ரதஸ்தே கமிஷ்யாமி ம்ருத்நந்தி குச கண்டகான்

தமிழில் காதலிக்குத்தான் காதலன் இதைச் செய்வதாகக் காண்கிறோம். ஆனால் வால்மீகியோ காதலி (சீதை இதைச் செய்வதாகக் கூறுகிறார்.

XXX

भर्तुर्भाग्यं तु भार्यैका प्राप्नोति पुरुषर्षभ।

अतश्चैवाहमादिष्टा वने वस्तव्यमित्यपि।।2.27.4।।

पुरुषर्षभ ஆண்களில் சிறந்தவனே , भर्तुर्भाग्यं tகணவனுக்கு எதுவோ , एका அதை மட்டுமே , भार्या மனைவி , प्राप्नोति அடைகிறாள் , अतश्च ஆகையால் , अहमपि நானும் கூட , वने காட்டில் t, वस्तव्यमिति வசிக்கவேண்டும் l, अदिष्टा एवஎன்பதே கட்டளை (உன்னுடைய சின்னம்மா போட்ட உத்தரவு உனக்கு மட்டுமல்ல; எனக்கும்தான். ஏனெனில் ஆணும் பெண்ணும் ஒன்னு ; அதை அறியாதவன் வாயில மண்ணு )– என்று சீதை செப்புகிறாள்

பர்த்து பாக்யம் து பார்யைகா ப்ராப்னோதி புருஷ ஷர்ப

அதஸ் சைவா ஹமாதிஷ்டா வனே வஸ்த்வயம்  இதி அபி

XXX

சீதா தேவி, கணவனுக்கு ஆலோசகராகவும் காட்சி தருகிறாள் (வா.ரா. 3-9-3/4)

காமம் காரணாமாக 3 தீமைகள் ஏற்படுகின்றன.முதலில் பொய் சொல்லுவான், அதைவிடக் கொடுமையானது பிறர் மனைவி மீது ஆசைவைப்பான்;காரணமே இல்லாமல் வன்முறையில் ஈடுபடுவான் ; கடைசி இரண்டும் மிகவும் கொடுமையானவை — என்று சீதை உரைக்கிறாள்

त्रीण्येव व्यसनान्यत्र कामजानि भवन्त्युत।

मिथ्यावाक्यं परमकं तस्माद्गुरुतरावुभौ।।3.9.3।।

परदाराभिगमनं विना वैरं च रौद्रता।

अत्र இங்கே(இந்த சூழ்நிலையில்  ), कामजानि காமத்தினால் ஏற்படும் , व्यसनानि தீயவை , त्रीण्येव மூன்று மட்டுமே , उत தான் , भवन्ति இருக்கின்றன , मिथ्यावाक्यम् பொய் சொல்லுதல் , परमकम् அதிலும் பெரிது , परदाराभिगमनम् மற்றவர் மனைவியுடன் கொள்ளும் தொடர்பு  विना वैरम् விரோதமே இல்லாதபோது , रौद्रता வன்செயலில் ஈடுபடுதல் , उभौ இந்த இரண்டு  तस्मात् ஆக , गुरुतरौ மோசமானவை .

த்ரீயமேவ வ்யஸனானி  அத்ர  காமஜானி பவந்த் யுத

மித்யாவாக்யம் தஸ்மாத் குரு தரா உபெள பரதாராபிகமனம்

வினா வைரம் ச ரெளத்ரதா

XXX

வாலியின் மனைவி தாரா மகனைவிட, கணவனை அதிகமாக நேசிக்கும் காட்சியையும் படம்பிடித்துக் காட்டுகிறார் புலவர் வால்மீகி: (வா.ரா. 4-19-18)

पुत्रेण मम किं कार्यं राज्येनच किमात्मना।

कपिसिंहे महाभागे तस्मिन्भर्तरि नश्यति4.19.18।।

புத்ரேண  மம கிம் கார்யம் ராஜ்யேன  ச கிம் ஆத்மனா

கபி ஸிம்ஹே  மஹாபாகே தஸ்மின் பர்த்தாரே நஸ்யதி


कपिसिंहे வானர வம்சத்தில் சிங்கம் போன்ற , महाभागे மிகச்சிறந்த , तस्मिन् அவர்  , नश्यति सति இறந்துகொண்டு இருக்கிறார் , मम எனக்கு  पुत्रेण என்னுடைய மகனால் , किं कार्यम् என்ன பயன்  राज्येन (अपि) च இந்த ராஜ்யம் கூட  , आत्मना என் உயிரும் கூட , किम् இருந்து என்ன /பயன்??

சிங்கம் போன்ற என் கணவன் இறந்த பின்னர் என் மகனால், ராஜ் யத்தால் என்ன பயன் ? உயிர் வாழ்ந்து என்ன பயன் ? – இது வாலியின் மனைவியின் புலம்பல்/அழுகை

TO BE CONTINUED………………………………..

Tags- வால்மீகி , ராமாயணம், பெண்கள், பகுதி 2, தாரா, வாலி சீதை

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: