வால்மீகி ராமாயணத்தில் பெண்கள் – 3 (Post No.11,272)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,272

Date uploaded in London – 17 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

ராமனை விட  சீதை உயர்ந்து நிற்கும் காட்சிகள் வால்மீகி ராமாயணத்தில் இருக்கின்றன. ராமன், ஒரு அரசன் போல நடந்து கொள்கிறான். ஆனால் சீதையோ ராமனிடத்தில் ஒரு பணிவான பெண்ணாக, அடங்கிய மனைவியாக நடந்து கொள்கிறாள்.

सावित्री पतिशुश्रूषां कृत्वा स्वर्गे महीयते।

तथावृत्तिश्च याता त्वं पतिशुश्रूषया दिवम्।।2.118.10।।

ஸாவித்ரீ பதி சுஷ்ரூஷாம் க்ருத்வா ஸ்வர்க்கே மஹீயதே

ததா விருத்திஸ் ச  யாதா த்வம் பதி சுஷ்ரூஷயா திவம் வா.ரா.2-118-10

சத்தியவான் சாவித்திரி கதையில் கணவனுக்குப் பணிவிடை செய்து சாவித்திரி சொர்க்கம் ஏகினாள் அதே படியில் நீயும் சென்று கணவனுக்கு சேவை செய்தால் சொர்க்கத்துக்குப் போவாய் – என்று அயோத்தியா காண் டத்திலேயே காண்கிறோம்

पतिशुश्रूषाम् கணவனுக்கு சேவை  , कृत्वा செய்ததன் வாயிலாக , सावित्री சாவித்திரி , स्वर्गे சொர்க்கத்தில் , महीयते கவுரவிக்கப்பட்டாள் , तथावृत्ति: அதே பாதையைப் பின்பற்றி , त्वं च நீயும் , पतिशुश्रूषया கணவனுக்கு சேவை செய்து , दिवम् tசொர்க்கத்துக்கு , याता போவாய் ஆகுக

xxx

ராம- ராவண யுத்தம் முடிந்தது. எல்லோரும் சீதை- ராமன் சந்திப்பை — 14 ஆண்டுக்குப் பின்னர் நாட்டைபெறப் போகும் சந்திப்பை — ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கின்றனர். தற்காலமானால் ஆயிரம் போட்டோகிராபர்களும், நூறு டெலிவிஷன் சானல் வீடியோ ஆட்களும் அ ங்கே வந்திருப்பார்கள். அப்போது சீதையைப் பல்லக்கில் தூக்கிக்கொண்டு வருகிறார்கள் . நீ ஏன் நடந்து வரவில்லை என்று கேட்கிறார் ஆனால் சீதை ஒரு எதிவார்த்தையும் சொல்லவில்லை. அதே போல ஓரு சலவைத் தொழிலாளி சீதையின் கற்பு நெறி பற்றிக் கேள்வி கேட்டவுடன் , சீதையை ராமன் காட்டுக்கு அனுப்புகிறான் . அப்போதும் அவள் வாய் திறக்கவில்லை; அதாவது ராமனைத் திட்டவில்லை.

இதே போல வாழ்ந்த சிலப்பதிகாரக் கண்ணகியையும் ஒப்பிடலாம். திருமணமான பின்னரும் வேறு ஒரு ஆடல் அழகியான மாதவியிடம் போய்விட்டுத் திரும்பியபோதும் கண்ணகி ஒரு எதிர்ப்பு பேச்சும் பேசவில்லை.

மஹாபாரதத்தில் திரவுபதி மட்டும் உரிமைக்கு குரல் எழுப்புவதைப் பார்க்கிறோம்.

ஒரு சில முக்கிய ஸ்லோகங்களை மட்டும் காண்போம்:

visR^ijya shibikaaM tasmaatpadbhyaamevopasarpatu |

samiipe mama vaidehiiM pashyantvete vanaukasaH || 6-114-30

விஸ்ரிஜ்ய  சிபிகாம் தஸ்மாத் பத்ப்யாம் ஏவ உபசர்ப்பது

ஸமீபே மம வைதேஹீம் பஸ்யந்த் வேதே வனவ் ஸஹ 

30. tasmaat= ஆகவேதான் ; upasarpatu= அவள் வரட்டும் ; padbhyaameva= கால் நடையாகவே ; utsR^ijya= விட்டுவிட்டு  shibikaam= பல்லக்கினை ; vanaukasaH= இந்த வானரங்கள் ; pashyantu= பார்க்கட்டும் ; vaidehiim= சீதையை  mama samiipe= iஎன் முன்னிலையில்

Xxx

சந்திர பாபு போன்ற நடிகர்கள் ‘உனக்காக, எல்லாம் உனக்காக; இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பது உனக்காக’ என்று திரைப்படங்களில் பாடியிருப்பதைக்  கேட்டிருக்கிறோம். ஆனால் ராமனோ உனக்காக நான் இதைச் செய்யவில்லை ரகு குலத்தின் பெயரை நிலை நாட்டவே  செய் தேன் என்று சொல்லி சீதையை மட்டம்தட்டுகிறான் . அப்போதும் அவள் வாய்திறக்காமல் உத்தமியாகவே காட்சி தருகிறாள்

இந்த யுத்தம் , என்னுடைய நண்பர்கள் உதவி மூலம் ,வெற்றிகரமாக முடிந்துவிட்டது ; ஆனால் இதை உனக்காக நான் செய்யவில்லை நீ வளமோடு வாழ்க! இது எதற்காக செய்யப்பட்டது என்பதை எல்லோரும் அறியட்டும்.என்னைப்பற்றியும், என்னுடைய குலத்தின் பெருமைக்கு இழுக்கு உண்டாகும்படியும்   குறைகூறுவோருக்காக (பதில் தரும்படி) நான் இந்த யுத்தத்தை செய்தேன் –என்கிறான் இராமபிரான்.

viditashchaastu bhadraM te yo.ayaM raNaparishramaH |

sutiirNaH suhR^idaaM viiryaanna tvadarthaM mayaa kR^itaH || 6-115-15

rakShataa tu mayaa vR^ittamapavaadam cha sarvataH |

prakhyaatasyaatmavaMshasya nyaN^gaM cha parimaarjataa || 6-115-16

விதிதாஸ்சாஸ்து  பத்ரம் தே யோஅயம் ரணா பரிஸ்ரமாஹா

சுதீர்ணாஹா ஸுஹ்ரிதாம் வீர்யான்ன த்வதார்த்தம் மயா ந க்ரியதாஹா

ரக்ஷதா து மயா வ்ருத்த மபவாதம் ச ஸர்வதாஹா

ப்ரக்யாதா ஸ்யாத்ம வம்சயா ந்யங்கம் ச பரிமார்ஜிதா

15-16. viditaH astu= நீ அறிவாயாக ; ayam yuddhaparishramaH= யுத்தம் என்ற பெயரில் நான் செய்த இது ; sutiirNaH= வெற்றிகரமாக முடிந்தது ; viiryaat=பலத்தினால்  suhR^idaam= என்னுடைய நண்பர்கள் ; na kR^itaH= செய்யயப்படவில்லை ; tvadartham= உனக்காக ; te bhadram astu= நீ மகிழ்ச்சியோடு வாழ்வாயாக !; mayaa=என்னால் இது செய்யப்பட்டது ; rakShataa= எதற்காகவென்றால்  ; vR^itam=என்னு டைய நன்னடத்தையை நிரூபிக்கவும்   ; parimaarjitaa= துடைப்பதற்காக = அவதூறு சொல்லும் ; sarvataH= பலரையும்  ; nyaNgam= குறைகூறும் பலரும் ; prakhyaatasya aatmavamshasya= என்னுடைய குலத்தைப் பற்றி

To be continued…………………….

 tags- வால்மீகி ,ராமாயணத்தில் ,பெண்கள்-3

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: