கடவுளைக் காட்டு என்போருக்கு பதில் கேள்வி (Post No.11,309)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,309

Date uploaded in London – –    30 SEPTEMBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கடவுளைக் காட்டு என்போருக்கு பதில் கேள்வி: கடவுள் இல்லை என்பதை நிரூபி!

ச.நாகராஜன்

கடவுளைக் காட்டு என்போருக்கு ஆன்மீக அருளாளர்களும், அறிஞர்களும், அறிவியல் மேதைகளும் பலவாறாக பதில் கூறி விட்டார்கள்; இன்னும் அவர்களுக்குப் புரியும் வண்ணம் பதில் சொல்லி வருகின்றனர்.

ஆனால் நீ சொல்லப் போவது எதுவும் எனக்குப் புரியப் போவதில்லை என்ற நிலையை முதலிலேயே எடுத்துக் கொண்டவர்களிடம் எதைச் சொல்வது? அவர்களுக்குத் தான் எது சொன்னாலும் புரியப் போவதில்லையே.

என்றாலும் கூட இறை நம்பிக்கை பற்றித் தங்களை மேம்படுத்திக் கொள்ள விழைவோருக்கு கடவுளைப் பற்றி விளக்க வேண்டியது சமூகம் சார்ந்த ஒரு கடமையாக ஆகிறது.

விஞ்ஞான பூர்வமாக விளக்கம் கேட்போருக்கு அறிவியலை வைத்தே ஆதாரம் காட்ட வேண்டி இருக்கிறது.

கணிதத்தை எடுத்துக் கொண்டால் உலகில் நாம் காணும் எதிலும் ஒரு கணித அமைப்பு இருக்கிறது.

ஒன்றை 137 என்ற எண்ணால் வகுத்தால் வரும் விடை பிரமிக்க வைக்கும் ஒன்று. அது பூஜ்யம். வகுத்து வரும் மீதமோ 1.

1 divided by 137 = 0. The remainder is 1.

1/137 is 0.007299270072992700729927007299270072992700729927007299270072992701 (in the set of reals).

இது ஏன் இப்படி வருகிறது என்பதை யாராலும் சொல்ல முடியவில்லை.

137 என்ற எண்ணின் மகத்துவத்தை அறிவியல் அறிஞர்களே அதிசயத்துடன் பார்க்கின்றனர்.

கடவுள் இல்லை என்று சொல்வோருக்கு பதில் கேள்வியாக இப்போது பலரும் கேட்பது : “ நாங்கள் சொல்வதைச் சொல்லி விட்டோம்; இப்போது உங்களைக் கேட்கிறோம். கடவுள் இல்லை என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபியுங்கள்” என்பது தான்.

இதற்கு பதிலைச் சொல்ல யாராலும் முடியவில்லை.

கடவுள் தான் அனைத்தையும் படைத்தார் என்றால் அவரைப் படைத்தவர் யார் என்பது நாத்திகவாதிகளின் கேள்வி.

மண்ணால் ஆன குடம் என்று ஒன்றைப் பார்த்தால் அதை உருவாக்கியவன் என்று ஒருவன் இருக்கத் தானே வேண்டும்.

இல்லை, தானாக அனைத்தும் உருவாகியது என்பது புது நாத்திகவாதிகளின் வாதம்!

பிரபஞ்சம் பெரு வெடிப்பு என்ற நிகழ்வால் ஏற்பட்டது. சரி, ஒப்புக் கொள்கிறோம். அதற்கு முன்னால் என்ன இருந்தது? அந்தப் பெருவெடிப்பு ஏன் ஏற்பட்டது? யாரால் ஏற்பட்டது.

பதிலைக் காணோம்.

மனம் என்றால் என்ன, மனச்சாட்சி எங்கு எப்படி உருவாகிறது?

பதிலைக் காணோம்.

உயிர் எப்படி எப்போது எதற்காக ஒரு உடலில் சேர்கிறது, அது எப்படி எப்போது எதற்காக நீங்குகிறது. உயிரைக் கொஞ்சம் காட்டுங்கள்.

பதிலைக் காணோம்.

இயற்பியல் என்று எடுத்துக் கொண்டால் க்வாண்டம் மெகானிக்ஸ் என்ற புதிய கிளை வந்த பின்னர் ஹிந்து மதம் கூறும் கொள்கை அதனுடன் ஒத்திருக்கிறது என்பதை அனைவரும் அறிந்து பிரமிக்கின்றனர்.

ஒரு துகளானது ஒரே சமயத்தில் ஒரு இடத்திலும் பல இடத்திலும் இருக்க முடியும் என்பதை தர்க்கவாதத்தால் அனுமதிக்க முடியவில்லை என்றாலும் க்வாண்டம் பிஸிக்ஸ் அதை வற்புறுத்துகிறது.

அறிவியல் சொல்வதால் அதை ஒப்புக் கொள்கிறோம்.

இதையே தான் இறைவன் எங்கும் பரவியுள்ளான் என்பதை ஆன்மீகம் வற்புறுத்துகிறது.

தி காட் டெலூஷன் (The God Delusion) என்ற தனது புத்தகத்தில் புதிய நாத்திகத்தைத் தீவிரமாகப் பரப்பி வரும் ரிச்சர்ட் டாகின்ஸ் (Richard Dawkins) கடவுள் நம்பிக்கைக்கான ஒரு அளவு கோலைத் தருகிறார்.

அந்த அளவுகோலில் 7 நிலைகள் உள்ளது!

யாராலும் மாற்றவே முடியாத தீவிர ஆன்மீகவாதி

100 விழுக்காடிற்கு நெருங்கி வரும் இறை பக்தர்

50 விழுக்காடிற்கு மேல் உள்ளவர். எனக்கு நிச்சயமாகத் தெரியாது. ஆனால் கடவுளை நம்புகிறேன் என்பவர்.

எந்த ஒரு நிலையையும் எடுக்காத நடுநிலையாளர். எனக்கு கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது தெரியாது. நான் சந்தேகப்படுபவன் தான் என்று கூறுபவர்.

நாத்திகவாதியாக ஆகி வருபவர். 50 விழுக்காடிற்கும் கீழாக இருப்பவர். கடவுள் இருக்கிறாரா என்பது தெரியாது. ஆனால் நாத்திகவாதி தான் நான்!

எனக்கு நிச்சயமாகத் தெரியாது. ஆனால் கடவுள் என்பவர் இருக்கவே முடியாது எனது வாழ்க்கையை அவர் இல்லை என்பதை வைத்துத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

நிச்சயமாக கடவுள் இல்லை; இல்லவே இல்லை!

(Richard Dawkins Seven-Point Scale:

  • Strong Theist: 100 per cent probability of God. In the words of C.G. Jung: “I do not believe, I know.”
  • De facto Theist: Very high probability but short of 100 per cent. “I don’t know for certain, but I strongly believe in God and live my life on the assumption that he is there.”
  • Leaning towards Theism: Higher than 50 per cent but not very high. “I am very uncertain, but I am inclined to believe in God.”
  • Completely Impartial: Exactly 50 per cent. “God’s existence and non-existence are exactly equiprobable.”
  • Leaning towards Atheism: Lower than 50 per cent but not very low. “I do not know whether God exists but I’m inclined to be skeptical.”
  • De facto Atheist: Very low probability, but short of zero. “I don’t know for certain but I think God is very improbable, and I live my life on the assumption that he is not there.”
  • Strong Atheist: “I know there is no God, with the same conviction as Jung knows there is one.”)

இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால் ரிச்சர்ட் டாகின்ஸே தன்னை ஆறாவது நிலையில் இருப்பதாகச் சொல்லிக் கொள்வது தான்.

ஒரு வேளை கடவுள் அவர் முன் வந்து நேரில் தோன்றி. “நான் இல்லை; நிச்சயமாக இல்லை” என்று உறுதி மொழி அளித்தவுடன் அவர் ஏழாவது நிலையான தீவிர நாத்திகர் என்ற நிலைக்குத் தாவி கடவுள் இல்லவே இல்லை; அவரே என்னிடம் சொன்னார் என்று சொல்லி விடுவாரோ என்னவோ!

கிறிஸ்டோபர் ஹிட்சென்ஸ்,(Christopher Hitchens)  சாம் ஹாரிஸ் (Sam Harris) உள்ளிட்டவர்கள் தங்களின் தீவிர நாத்திக வாதங்களை முன் வைக்கின்றனர்.

 அதே சமயம் பிரபல விஞ்ஞானியான ஃபிரான்ஸிஸ் எஸ். காலின்ஸ் (Francis S. Collins) எழுதியுள்ள ‘தி லாங்வேஜ் ஆஃப் காட்” (The Language of God) பிரபல ஆன்மீகவாதியான டீன் எல்.ஓவர்மேன் (Dean L. Overman) எழுதியுள்ள ‘எ கேஸ் ஃபார் தி எக்ஸிஸ்டென்ஸ் ஆஃப் காட் (A Case For The Existence of God), பிரபல அறிவியல் எழுத்தாளரான அமிர் டி. அக்ஸெல் (Amir D.Aczel) எழுதியுள்ள ‘ஒய் ஸயின்ஸ் டஸ் நாட் டிஸ்ப்ரூவ் காட்’ (Why Science Does not Disprove God) உள்ளிட்ட நூல்கள் பல அருமையான எடுத்துக்காட்டுகளுடன் நீக்கமற நிறைந்து இருக்கும் இறைவனைப் பற்றிக் கூறுவதைப் படித்து மகிழலாம்.

இதே போல அறிவியல் உலகில் மேதைகளால் எழுதப்படும் நூற்றுக்கணக்கான நூல்கள் உள்ளன.

இவற்றைப் படிப்பதோடு, படிக்கும் நல்ல கருத்துக்களை இறைவனைப் பற்றி அறியத் துடிக்கும் இளைய வயதினருக்கும் சொல்லலாம்.

அருணகிரிநாதர் சொல்வதை மறக்கமுடியுமா என்ன?

“அறிவால் அறிந்து உன் இரு தாள் இறைஞ்சும்               

     அடியார் இடைஞ்சல் களைவோனே”

–    அருணகிரிநாதர் (விறல் மாரனைந்து எனத் தொடங்கும் திருப்புகழ்)

—  subham—

Tags- கடவுளைக் காட்டு,  பதில் கேள்வி,: கடவுள்

புத்தக அறிமுகம் – 72

நாக நங்கை!

நாவலில் உள்ள அத்தியாயங்கள்

1. மூலிகை எங்கே?

2. நாட்டு மிருகங்களும் காட்டு மிருகங்களும்

3. நாக நங்கை

4. அமாவின் சபதம்

5. சிற்றருவியில்!

6. ஜைன சித்தர் 

7. ஈட்டி பாய்ந்தது!

8. கடமையும் காதலும்

9. ராட்சஸ ஆசை!

10. நகர் பவனி

11. குரு தக்ஷிணை!

12 வாளின் மீது ஆணை

13. காதல் உஷ்ணம்!

14. மங்கையின் ரகசியம்!

15. உஜ்ஜயினிக்கு ஆபத்தா!

16. சத்திரத்துச் செய்தி

17. போர்த் திட்டம்!

18. தந்தையும் மகனும்!

19. கொலைகாரனின் ஈட்டி

20. நங்கைக்கும் நாகமணிக்கும் ஆபத்து!

21. மன்னர் எங்கே!

22. கௌடவஹோ

23. நாகாவலோகா

24. முடிவுரை

இந்த நாவலைப் பற்றிய சிறு அறிமுகக் குறிப்பு:-

அயோத்தியில் ஒரே நாளில் ராமருக்குக் கோவில் கட்டிய மன்னன் யசோவர்மன் காலத்தைக் களமாகக் கொண்டு புனையப்பட்ட வரலாற்றுப் புதினம். யசோவர்மன் புதல்வனான சோம்பேறி இளவரசன் அமா ஒரு நாகத்தின் உதவியால் எப்படிப் பெரும் வீரனானான் என்பதைச் சித்தரிக்கும் இந்தப் புதினம், உண்மையான வரலாற்று நிகழ்வுகளையும் அடிப்படையாகக் கொண்டு பின்னப்பட்டுள்ளது. கதையின் இயல்பான போக்கு ஒரு மகோன்னதமான காலத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது. கதை நிகழும் களங்களான கன்யாகுப்ஜம், உஜ்ஜயினி, மோதரகபுரம் ஆகியவை மத்திய பாரதத்துக்கே நம்மை அழைத்துச் செல்கின்றன. இளவரசன் வாழ்வில் குறுக்கிட்ட நாகநங்கை முதலான கற்பனைக் கதாபாத்திரங்களுடன், யசோவர்மன், சுயஜாதேவி, பவபூதி, வாக்பதி, முகம்மது இபின் காசிம் ஆகிய உண்மையான வரலாற்று மாந்தர்களையும் இந்தக் கதை நம் கண் முன்னே கொண்டு வருகிறது! பக்கத்துக்குப் பக்கம் ஆவலைத் தூண்டும் காவியம்!

*

இந்தச் சரித்திர நாவலின் முன்னுரையில் பாரத தேசத்தின் வரலாற்றில் மாமன்னர்களின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள் பிரமிப்பூட்டுகின்றன என்றும் அவற்றில் தன்னைக் கவர்ந்த ஒன்றை வாசகர்களுக்கு அளிப்பதாகவும் நாவல் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

*

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். நாக நங்கை என்ற சரித்திர நாவலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

Singapore, National Library இல் நிலாச்சாரல் வெளியீடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

**

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: