
Post No. 11,310
Date uploaded in London – – 30 SEPTEMBER 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பிறமொழி நையாண்டிக் காவியம்
Written By B.Kannan, New Delhi
மத்தவிலாசம் என்கிற மத்தவிலாச பிரஹசனம் கி.பி 7-ஆம் நூற்றாண்டில் பல்லவ அரசர் முதலாம் மகேந்திரவர்மரால் இயற்றப்பட்ட ஒரு சம்ஸ்கிருத அங்கத நாடகம். இதைத் தவிர பகவதஜ்ஜூகம் என்ற நாடகத்தையும் மகேந்திரவர்ம பல்லவன் இயற் றியுள்ளார்.
ஒரு பகுதி நாடகமான மத்தவிலாசம் சைவப் பிரிவுகளான கபாலிகம், பாசுபதம் ஆகியவற்றின் பழக்க வழக்கங்களையும் புத்த துறவிகளையும் பகடி செய்கிறது. பல்லவப் பேரரசின் தலைநகரான காஞ்சிபுரத்தில் மது போதையில் நிதானமிழந்தி ருக்கும் கபாலிகன் சத்யசோமன் அவனது மனைவி தேவசோமா ஆகியோரின் செய் கைகளை விவரிக்கிறது. புத்த துறவி நாகசேனன், பாசுபத பிரிவைச் சேர்ந்த பாசுப தன் ஆகியோர் இந்நாடகத்தின் பிற முக்கிய கதை மாந்தர். சைவ, புத்த மதங்களை நையாண்டி செய்வதோடு, 7-ஆம் நூற்றாண்டு காஞ்சிபுரத்தின் தோற்றத்தைப் பற்றி யும் இந்நாடகம் விரிவாகப் பேசுகிறது.

பல்லவ மன்னன் மகேந்திரவர்மனால் இயற்றப்பட்ட மத்தவிலாசம், பகவதஜ்ஜுகம் என்ற இரண்டு அங்கத நாடகங்களும் இந்திய இலக்கிய வரலாற்றில் ஓர் உன்னத மான காலகட்டத்தின் சான்றுகளாகும். இந்திய அங்கத இலக்கியத்திற்கு மிகப் பழ மையான எடுத்துக்காட்டுகளாகும் இவை. இவையிரண்டும் மகேந்திரன் காலத்தி லேயே முன்னோடிகளாக எண்ணப்பட்டன. இந்த நாடகங்களின் முன்னுரைகளே இந்த உண்மையினை எடுத்துக்காட்டுகின்றன. பகவதஜ்ஜுகத்தின் முன்னுரையில் அரங்கப் பொறுப்பாளி சூத்திரதாரி தனது நண்பனிடம் நகைச்சுவை சிறந்து தோன்று கிற அங்கத நாடகம் போடவேண்டும் என்று கேட்டுக்கொள்ள, நண்பன் விதூஷகன் அந்தவிதமான நாடகத்தைப் பற்றித் தனக்கு எதுவும் தெரியாது என்கிறான்.
மத்தவிலா¡ச அங்கதத்தில் போதைக் களிப்பு நிறைந்த அங்கத நாடகம் போடப்போவ தாக சூத்திரதாரி சொல்லும்போது, அவனது மனைவி நடீ, அந்தவிதமான நாடகம் புது முயற்சி என்கிறாள். குடவரைக் கோயிலமைப்பு மற்றும் இசை இவைகளுக்கு மட்டுமின்றி நாடகக் கலைக்கும் மகேந்திரன் முன்னோடி என்பதை இக்குறிப்புகள் வெளிப் படுத்துகின்றன. இசை நயம் இந்த நாடகங்களின் மற்றுமொரு சிறப்பு அம்ச மாகும். எடுத்துக்காட்டாக, மத்தவிலாச நாடகத்தின் வசனத்துள் இருபத்துமூன்று பாடல்கள் இணைந்துள்ளன. இந்த இசைநய அங்கதங்கள் ஷேக்ஸ்பியர் காலத்திற் கும் ஆயிரம் ஆண்டுகள் முந்தியவையாகும்.
பல்லவ அரசின் தலைநகரான காஞ்சிபுரம் மத்தவிலாச நாடகத்தின் பின்னணியாக அமைந்துள்ளது. சத்தியசோமன் என்னும் கபாலிகன், அவனுடைய துணைவி தேவ சோமா இவர்களின் குடிக்களியாட்டத்தை மையமாகக் கொண்டு நாடகம் இயங்குகி றது. கபாலிகர் என்பவர்கள் புரட்சிக்கார சைவர்கள். மதுவுண்ணல், மயங்கியாடல், கூடவே துணைவியரோடு யோகபோகம் செய்தல் முதலியவை இவர்களுடைய வேள்விகள் ஆகும். மயானக் காடுதான் கபாலிகர்களின் உறைவிடம். பாத்திரம் போன்ற கபால வோட்டின் மேல் பாகத்தைத் தானவோடாகப் பயன்படுத்துவர். இதன் காரணமாகத்தான் இவர்கள் கபாலிகர் எனப்பட்டார்கள். பிரமனின் சிரம் அறுத்து வேள்வி செய்த சிவ பெருமான் பற்றிய புராண நிகழ்ச்சியைக் குறிப்பாக உணர்த்து வது இது.
சத்தியசோமனாகிய கபாலியின் தானக் கபாலம் காணாமல் போகிறது. அதைத்தேடிக் கண்டெடுத்துக் கொள்வதே நாடகத்தின் கருப்பொருள். குடித்துவிட்டு அரங்கில் நுழை கிறார்கள் கபாலியும் தேவசோமாவும். மதுவுண்ணும் பெருஞ் சபதத்தில் நிலைத்து நிற்பதால் அவளிடம் தோன்றியப் பெரிய மாற்றத்தை கபாலி பாராட்டுகிறான்.
முத்தென வியர்வை சொரிந்திடும் எழில் முகம்
முழுவதும் அழகுற நெளிந்திடும் புருவம்
மத்த நடை ஒரு பொருளற்ற முறுவல்
முறையறு அசையொடு முழங்கிய வாய்மொழி
மருங்கினில் தொங்கியே சுழல் இருவிழிகள்
மேல் இளஞ்சாயச் செந்நிறத் தேமல்
நறுமலர் மாலை ஊடறுந் தளர்ந்திட
தடந்தோள் விளிம்பினில் விழுந்திடும் குழைகள். என அவளிடம் குழைகிறான்
பேச்சின் போக்கிலேயே கபாலி போதை மயக்கத்தில் அவளது பெயரை சோமதேவா என மாற்றிச் சொல்லிவிடுகிறான். அவன் வேறு பெண்ணிடம் சகவாசம் வைத்தி ருக்கிறான் என்று பொறாமை கொள்கிறாள் தேவசோமா. அதைப் போதை மயக்கத் தால் வந்த நா பிசகு எனக் கூறி மன்னிப்பும் கேட்கிறான் சத்தியசோமன். இனி குடிப் பதில்லை என்று சபதமும் செய்கிறான். தனது காரணமாக சபதத்தை முறித்து அழிந்து போக வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறாள் தேவசோமா!
இருவரும் வேறு மதுக்கடைக்குப் போகிறார்கள். (அன்றைய ‘டாஸ்மாக் கடை, அமர்ந்து குடிக்குமிடம் ஆகியவற்றைக் கபாலிகன் வர்ணிப்பதைப் பாருங்கள்)
அன்பே, பார்! பார்! இந்த மதுக்கடை வேள்விக் கூடத்தை ஒத்து விளங்குகிறது. இங்கிருக்கும் அடையாளக் கொடிக் கம்பத்தைப் பார். அதுதான் வேள்விக் குண்டத் துக் கம்பம். மதுதான் சோமரசம். ஜாடிகள் புண்ணியப் பாத்திரங்கள். பொரித்த கறி யும் மற்ற பொருட்களும் சுவைக்கும் நைவேத்தியங்கள். போதைப் பிதற்றல்கள் யஜூர்வேத மந்திரங்கள். பாடல்கள் சாமவேத கீதங்கள். தோல் பைதான் வேள்வி அகப்பை. தவிப்பே தீ. கடைக்காரர்கள் வேள்வி நேர்ந்தவர்கள்… ஆகவே தாராளமாகக்
குடிப்போம். ‘
மதுவைக்குடி காதல் முகத்தை ரசி
தன்னுணர்வின்றியே திகிலுடை தரி
முத்திப் பாதையை இப்படி விதித்த
சூலப் படைச்சிவன் அ(ரு)ளுக என்றும் (நம்மை) எனப் பாடியவாறே கடைக்குள் போகிறார்கள்.
அங்கே தானமாக மதுவைப் பெறப் போகும் போது தனது தானவோடு காணாமல் போனதை அறிகிறான் சத்தியசோமன். நிலைமையைக் கருதி தேவசோமா மாட்டுக் கொம்பில் மதுவை வாங்குகிறாள். சத்தியசோமா கபாலவோட்டுக்காக ஏங்கித் தவிக் கிறான். பழைய இடத்துக்கே வந்து தேடுகிறார்கள். அங்கும் கபாலவோட்டைக் காண வில்லை. தானக் கபாலத்தில் சிறிது பொரித்த மாமிசக் கறி இருந்ததால் அதை ஒரு நாய் அல்லது புத்த துறவிதான் எடுத்திருக்க வேண்டும் என்று சத்தியசோமன் நிர்ண யம் செய்கிறான். அப்போது அங்கு ஒரு புத்த துறவி வருகிறார். கபாலிகர் ஜோடி, தான வோட்டைத் திருடிக்கொண்டது அவர்தான் என்று முடிவு கட்டுகிறது. சண்டை மூளுகிறது. இப்பொழுது சத்தியசோமனுக்கு அறிமுகமான பாசுபதன் என்று பெயர் கொண்ட துறவி வந்து மத்தியஸ்தம் செய்கிறான். முடிவற்ற தர்க்கத்தின் இறுதியில் புத்த துறவி சோர்வடைந்து தனது கபால வோட்டை ஒப்படைக்கவே தயாராகிறான். உண்மையான கபாலவோட்டை அதிலிருந்த மாமிசத்துக்காக ஒரு நாய் எடுத்துக் கொண்டு ஓடிவிடுகிறது. ஒரு பைத்தியக்காரன் அதைத் துரத்திச் சென்று திருவோ டைப் பறிக்கிறான் இதோ அவன் தனக்குத் தானே பேசிக் கொள்வதைக் கேளுங்கள்.
அதோ, அதோ இருக்கிறது அந்தப் பொல்லாத நாய். பொரித்த கறியுடைய கபால வோட்டை எடுத்துக்கொண்டு ஓடுகிறாய். அயோக்கியனே, எங்கே போவாய்? இப் பொழுது மண்டையோட்டைக் கீழே போட்டுவிட்டு என்னை நோக்கி ஓடி வருகிறது. (சுற்றிப் பார்த்து) நான் அதனுடைய பற்களை இந்தக் கல்லால் பொடியாக்கி விடு வேன். கேடு கெட்ட பைத்தியக்கார நாயே, ஏன் கபாலவோட்டைப் போட்டு விட்டு ஓடுகிறாய்? இந்த வீரத்தனத்தில் என்னிடத்தில் ஏன் கோபப்படுகிறாய்? நாட்டுப்புறப் பன்றியின் முதுகின்மீது ஏறி உயரே ஆகாயத்தில் குதித்தேன். சமுத்திரத்தை ஆயுத மாக்கி ஐராவத யானையை வீழ்த்தினேன். இந்திரனின் பிள்ளை மிருக ஜந்து அந்தத் திமிங்கிலத்தையும் பிடித்தேன். ஓய் ஆமணக்கு மரமே, நீ என்ன சொல்லுகிறாய்? அது பொய், பொய் என்றா சொல்லுகிறாய்? இதனால் கொழுத்த குளவி போன்ற கையுடைய இந்தச் சொறித் தவளை இருக்கிறானே அவன் தான் நமக்குச் சாட்சி. ஏன்? மூன்று உலகத்திற்கும் வீரத்திற்குப் பெயர் பெற்ற ஒருவனுக்குச் சாட்சிக்கு என்ன தேவை இருக்கிறது? நான் இப்படிச் செய்கிறேன். நாய் விட்டுப் போன கறித் துண்டை உண்ணுகிறேன். (சாப்பிட,காரக் கறியினால் பைத்தியம் தலைக்கேறுகிறது)…. பலத்த வாக்குவாதத்துக்குப் பின்னர், பாசுபதனின் உதவியுடன் கபாலவோடு உரியவ னானக் கபாலிகனிடம் ஒப்படைக்கப்படுகிறது.
கபாலவோட்டை அரவணைத்துக்கொண்டு, மதுவருந்தியத் தள்ளலுடன் துள்ளிக் குதித்துப் பாடிக் கொண்டுச் செல்கிறான் கபாலிகன் தன் துணையோடு
காலம் பலவும் பல கலையாத் தவமியற்றி
மகேசுரனுக்கு என்னை நான் கொடுத்திருந்தேன்
புனித கபாலமுனைக் கண்ட இக்கணமே,
இமைத்தக் களிப்பினிலே எந்தனுள்ளம் விட்டு
அமலன் அவனுமுடன் ஏகிவிட்டனே!
இவ்வாறு முடிவில் மகிழ்ச்சியுடன் எல்லோரும் நண்பர்களாகப் பிரிந்து செல்கி றார்கள்.
இந்தக் கபாலி மற்றும் பாசுபதப் பிரிவினர் மகேந்திரன் காலத்தில் சீர்குலைந்த நிலையில் இருந்திருக்கவேண்டும். இதனை நாடகத்தில் மன்னர் எள்ளி நகையாடு கிறார். இவர்கள் இந்த நிலையில் இருந்தாலும் இந்தியாவில் கபாலிகர் பின்பற்றும் தாந்திரீகத் தத்துவம் ஒரு முக்கியத் தத்துவமாக இருந்தது. புராதன சைவர்கள் ஏற் றுக்கொள்ளாத ஐந்து செய்திகள் தாந்திரீகத்தின்படி முக்தி வழிகளாகும். அவை பஞ்ச மகரங்கள் எனப்படும். 1. மத்தியம் (மது), 2. மாமிசம் (புலால்), 3. மத்சியம் (மீன்), 4. மதுரம், 5. மைதுனம் (யோகபோகம்) என்பன அவை. நாடகத்தில் ஆசிரியர் இவற்றை யெல்லாம் குறிப்பாக எடுத்தாளுகிறார்.
மத்தவிலாசம் ஏழாம் நூற்றாண்டின் காஞ்சிபுரத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது. ஏகாம்பரநாதர் கோயில் நேரடியாகவே குறிக்கப்படுகிறது. கோவிலின் மத்தள ஓசை, பூக்கடைகள், எழிலுடைய இளமங்கையர் – இவை போன்ற குறிப்புகளும் காணப்படு கின்றன. ஆண்டவனே, காஞ்சி இந்த தெய்வீக மதுவைப் போலவே அப்பழுக்கற்றுச் சுவைக்கிறது, என்கிறாள் தேவசோமா மகேந்திரவர்மனின் பல பட்டப்பெயர்களும் சுட்டிக்காட்டப்படுகின்றன. சூத்திரதாரி என்பவனால் நாடகம் தொடங்கி வைக்கப்படு கிறது. முன்னுரைக்குப்பின் நாடகம் இயல்பாக இணைக்கப்படுகிறது. சூத்திரதாரி ஆசிரியருடைய புகழைப் பாடியே பழகிவிட்டது என்று சொல்லுகிற உரையாடலின் தொடர்ச்சியாக, நாடகப் பாத்திரமான கபாலிகன் சொல்லுகிற மதுவருந்தியே பழகி விட்டது என்ற உரையாடல் அமைகிறது. சமணர்கள் நாத்திகர்கள்,அவர்களைப் பற் றிச் சொன்ன வாயை மதுவைக் கொண்டு கொப்புளிக்க வேண்டும் என்று வேறொரு இடத்தில் கூறுகிறான் கபாலிகன்!
மகேந்திரவர்மனின் மற்றொரு நாடகமான பகவதஜ்ஜுகத்திலும் இது போன்ற உத்தி பயன்படுத்தப்படுகிறது. ஆனந்தமுடன் ரசித்துப் படிக்கலாம்.
நகைச்சுவை மன்னன் மஹேந்திர பல்லவன் (Post …
https://tamilandvedas.com › நகை…
Written by London Swaminathan. Date: 26 NOVEMBER 2017. Time uploaded in London- 9-09 am. Post No. 4434. Pictures shown here are taken from various sources …
santhanam nagarajan
/ September 30, 2022you may pl introduce all Sanskrit/hindi literature like this all the best
nagarajan