31 திருக்குறளில் இந்துமதம்: அக்டோபர் 2022 ‘நற்சிந்தனை’ காலண்டர் (Post.11,311)

Picture line- London University Tiru Valluvar Statue Installation- Right extreme-London Swaminatha, Left extreme Dr Sighvi, High Commissioner of India in Britain

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,311

Date uploaded in London – 30 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

31 திருக்குறளில் இந்துமதம்: அக்டோபர் 2022 ‘நற்சிந்தனை’ காலண்டர்

திருக்குறளில் உள்ள 31 இந்துமத செய்திகள் – இந்த மாத காலண்டரில் இடம்பெறுகின்றன.

பண்டிகை நாட்கள்: 2- காந்தி ஜயந்தி 3-துர்காஷ்டமி 4- ஸரஸ்வதி பூஜை / ஆயுத பூஜை5-விஜயதசமி /தசரா 24- தீபாவளி பண்டிகைலெட்சுமி குபேர பூஜை 25-சூரிய கிரஹணம் 25/26 கந்த சஷ்டி விரதம் ஆரம்பம் 30- கந்த சஷ்டிசூர சம்ஹாரம்

அமாவாசை – 24/25பெளர்ணமி – 9ஏகாதஸி விரத நாட்கள் – 621

சுபமுஹுர்த்த நாட்கள் –  2830

அக்டோபர்  1 சனிக்கிழமை

அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன்-குறள் 1; அக்ஷரானாம் அகாரோஸ்மி – பகவத் கீதையில் (10-33) கண்ணன் ; ஸம்ஸ்க்ருத சொல்லான அகார — என்பதை வள்ளுவர் பயன்படுத்துகிறார்.

xxx

அக்டோபர்  2 ஞாயிற்றுக் கிழமை

இந்திரன் பற்றி

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரி. –குறள் எண் – 25

xxx

அக்டோபர்  3 திங்கட் கிழமை

மோக்ஷம் அடைய வழி –

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்கும் கல்–  குறள் எண்:38

xxx

அக்டோபர்  4 செவ்வாய்க் கிழமை

குறள் 580ல் சிவன் மகிழ்ச்சியோடு விஷம் குடித்த கதையைப் பாடுகிறார்- 

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர்– குறள் 580

நஞ்சுண்ட கண்டன் = சிவன்.

xxx

அக்டோபர்  5 புதன் கிழமை

தானம்தவம் என்ற பகவத் கீதையின் ஸம்ஸ்ருதச் சொற்களை அப்படியே எடுத்தாண்டு இந்துமதத்தின் உயர்வினைக் காட்டுகிறார் -குறள்கள் 19, 295

xxx

அக்டோபர்  6 வியாழக் கிழமை

முதல் அதிகாரத்தில் இறைவனின் பாத கமலங்களை தாள்அடி என்று 7 குறள்களில் சொல்லி வள்ளுவர்,  தான் ஒரு தூய ஹிந்து என்பதை சத்தியம் செய்கிறார்; மற்ற மதங்களில் இறைவனுக்கு உருவம் இல்லை

xxx

அக்டோபர்  7  வெள்ளிக் கிழமை

நூலின் பெயர் முப்பால் -தர்ம, அர்த்த, காம – ஆறாம், பொருள், இன்பத்துப் பால் ; குறள்கள் 754, 760, 501 ஆகியவற்றில் தர்மஅர்த்தகாம என்பதைத் திரும்ப வலியுறுத் துகிறார்.

xxx

அக்டோபர்  8 சனிக்கிழமை

இந்துக்கள் செய்யும் பஞ்ச யக்ஞம் ; யமனுடைய திக்கு- தெற்கு
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை -குறள் 43

xxx

அக்டோபர்  9 ஞாயிற்றுக் கிழமை

ராமனும் கிருஷ்ணனும் , காஞ்சி பரமாசார்யாளும், ரமணரும் கடவுளே!

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்–குறள் 50

xxx

அக்டோபர்  10 திங்கட் கிழமை

இந்து மதக் கருத்து- 7 பிறவிகள்

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின்-குறள் 62, also 107

xxxx

அக்டோபர்  11 செவ்வாய்க் கிழமை

இந்திரர் அமிழ்தம் (புறநானூற்றிலும் உள்ளது ; பாடல் 182

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ்–குறள் 64 ; ALSO 82, 720, 1106

xxx

அக்டோபர்  12 புதன் கிழமை

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்எனும் சொல்–குறள் : 70, also 160

இந்துமதம் தவிர வேறு எதிலும் ‘தவம் செய்து பிள்ளை’ பெறும் வழக்கம் இல்லை

xxx

அக்டோபர்  13 வியாழக் கிழமை

லக்ஷ்மி , அவளுடைய அக்காள் மூதேவி பற்றி

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்

தவ்வையைக் காட்டி விடும்-குறள் 179, Also 617, 519, 920,936

xxx

அக்டோபர்  14 வெள்ளிக் கிழமை

ஈசாவாஸ்யோபநிஷத் கருத்து

இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்

வேண்டாமை என்னுஞ் செருக்கு– குறள் எண்:180

அசையும் உலகனைத்தும் ஈசனால் நிரம்பியுள்ளது;

அதைத் துறந்து நீ இன்பம் துய்த்திடுக;பிறர் பொருளை விரும்பற்க.  

ஈஷாவாஸ்யமிதம் சர்வம் யத்கிஞ்ச ஜகத்யாம் ஜகத் .

தேந த்யக்தேந புஞ்ஜீதா மா கரிதஃ கஸ்ய ஸ்வித்தநம் ৷৷ 1.1.1 ৷৷

xxx

அக்டோபர்  15 சனிக்கிழமை

தீதும் நன்றும் பிறர்தர வாரா- புறநானூறு 192; கர்மா வினை கருத்து

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை

வீயாது அடி உரைந்தற்று (குறள் 208)

ஒருவன் தீங்கு செய்தால் அவன் அதனால் கெட்டுப்போவது நிச்சயம். எப்படி ஒருவனுடைய நிழல் அவன் கூடவே வந்து அவனடியில் தங்குமோ, அது போலத் தீமையும் அவனை நிழல்போலத் தொடரும்.

xxx

அக்டோபர்  16 ஞாயிற்றுக் கிழமை

பகவத் கீதை 2-47

கருமம் செய்வதற்கே உனக்கு அதிகாரம். அதன் பற்றில் அல்ல(2-47)

கர்மண்யேவ அதிகாரஸ்தே மா பலேஷு கதாசன (2-47)

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு

என்ஆற்றுங் கொல்லோ உலகு–குறள் 211

xxx

அக்டோபர்  17 திங்கட் கிழமை

உத்திஷ்ட! யசோ லப !! எழுந்திரு, புகழ்  அடை (பகவத் கீதா 11-33)

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று-  குறள்:236

xxx

அக்டோபர்  18 செவ்வாய்க் கிழமை

வாமன/ த்ரிவிக்ரம அவதாரம்

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்

தாஅய தெல்லாம் ஒருங்கு–குறள் 610

XXX

அக்டோபர்  19 புதன் கிழமை

உலகைப் படைத்த பிரம்மா பற்றி

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான்–குறள் 1062

XXX

அக்டோபர்  20 வியாழக் கிழமை

யமன் பற்றி – மார்க்கண்டேயர் கதை

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்

ஆற்றல் தலைப்பட் டவர்க்கு- குறள் 269 ALSO 326, 765, 1083, 1085

XXX

அக்டோபர்  21 வெள்ளிக் கிழமை

தேவலோகம், இந்திரலோகம் பற்றி

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்

புத்தேளிர் வாழும் உலகு.–குறள் 58 ALSO  213, 222, 234, 290

XXX

அக்டோபர்  22 சனிக்கிழமை

அரவிந்தாக்ஷன், கமலநயனன் , தாமரைக்கண்ணன் – விஷ்ணு பற்றி

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்

தாமரைக் கண்ணான் உலகு—குறள் 1103

தாமரைக் கண்ணான் உலகு= வைகுந்தம்

XXX

அக்டோபர்  23 ஞாயிற்றுக் கிழமை

பன்மாயக் கள்வன் – மாய கிருஷ்ணன் ; கோபி கிருஷ்ணா

பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்

பெண்மை உடைக்கும் படை–குறள் 1258

XXX

அக்டோபர்  24 திங்கட் கிழமை

அகஸ்தியர்- நகுஷன் கதை, பரசுராமன், சாணக்கியன் கதைகள்

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து

வேந்தனும் வேந்து கெடும்–குறள் 899

XXX

அக்டோபர்  25 செவ்வாய்க் கிழமை

யமனைக் கைதட்டி அழைத்தல் -தக்ஷன் கதை

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு

ஆற்றாதார் இன்னா செயல்–குறள் 894

XXX

அக்டோபர்  26 புதன் கிழமை

பிராமணர் வேதம், கோ மாதா பற்றி

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்

காவலன் காவான் எனின்- குறள் 560 ALSO 134,543, 8, 30

XXX

அக்டோபர்  27 வியாழக் கிழமை

குருகுலத்தில் முதல் பாடம் – தர்மம் சர ; அது மட்டுமே செத்த பிறகும் கூட வரும் . மஹாபாரதக் கதை – தருமனுடன் கடைசி வரை வந்த நாய்.

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை–குறள் 36

அக்டோபர்  28  வெள்ளிக் கிழமை

நல்லோரை வாழ்த்திட தீயோரை வீழ்த்திட; பரித்ராணாய ஸாதூனாம் –கீதை 4-8

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்

களைகட் டதனொடு நேர்–குறள் 550

XXX

அக்டோபர்  29 சனிக்கிழமை

ஆசாரம் பற்றி

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்

அவாவுண்டேல் உண்டாம் சிறிது–குறள் 1075

XXX

அக்டோபர்  30 ஞாயிற்றுக் கிழமை

அஸ்வத்தாமா தீ வைத்த மஹாபாரத/ பஞ்ச தந்திரக்  கதை

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது–குறள் 481

Other Pancha tantra stories in Tirukkural  – 273, 274, 277, 481, 500, 495, 633, 1087,

XXX

அக்டோபர்  31 திங்கட் கிழமை

ஆண்டவன், கடவுள், இறைவன் என்ற தமிழ்ச் சொற்கள் இருந்தும் தெய்வம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லையே வள்ளுவர் போற்றினார்

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை– குறள் 55

‘கணவனே கண்கண்ட தெய்வம்’; ‘பத்தினிப் பெண்கள் அற்புதம் செய்ய முடியும்’ என்பது இந்து மதத்தில் மட்டுமே உண்டு

தெய்வம் Deiva / divine – 43, 50, 55, 619, 702, 1023

–SUBHAM–

tags-  திருக்குறளில், இந்துமதம், அக்டோபர் 2022 ,காலண்டர், குறள்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: