

Post No. 11,320
Date uploaded in London – 3 OCTOBER 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
பாண்டிய மன்னர்களின் பெயர்களைப் பார்த்தால் ஒரு அற்புதமான ஒழுங்கு (order) முறை காணப்படும். அதாவது ஒரு மன்னன் பெயர் மாறன் என்றால் அதற்கு அடுத்து வரும் மன்னனின் பெயர் சடையன் என்று முடியும். சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வழக்கத்தை அவர்கள் பின்பற்றினார்கள். இதிலிருந்து அவர்களுக்கு எவ்வளவு வரலாற்று உணர்வு (HISTORICAL SENSE) இருந்திருக்கிறது என்பது புலனாகும். வேறு எந்த ஒரு வம்சத்திலும் இப்படி ஒழுங்கு முறை (ORDER) பின்பற்றப்பட்டதாகத் தகவல் இல்லை.
இங்கு பிரிட்டனில் இது போன்ற ஒரு வழக்கத்தை கடந்த சில தினங்களாக பத்திரிக்கைகள் வெளியிட்டு வருகின்றன. ஆனால் அது 200 ஆண்டு வழக்கம்தான்.பாண்டியர்களோ 800 ஆண்டுக்கும் மேலாக அவ்வழக்கத்தைப் பின்பற்றியதற்கு நமக்கு தக்க சான்றுகள் உள்ளன .
பிரிட்டனில் யார் ஆளுகிறார்களோ அந்த ராஜா அல்லது ராணியின் படம்தான் ரூபாய் நோட்டு, தபால் தலை, நாணயங்களில் இடம்பெறும் .அது மட்டுமல்லாமல் காமன்வெல்த் நாடுகளிலும் இந்தியா போன்ற குடியரசு ஆகாத நாடுகளிலும் பிரிட்டிஷ் ராஜா அல்லது ராணியின் படமே ரூபாய் நோட்டு, தபால் தலை, நாணயங்களில் இருக்கும்.
கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக ரூபாய் நோட்டு, தபலத்தலை, நாணயங்களில் ஒரு ராஜாவோ ராணியோ இடது புறம் பார்க்கும் படி உருவம் இருந்தால், அடுத்த ஆட்சியாளர் வலது புறம் பார்த்திருப்பார்.
செப்டம்பர் எட்டாம் தேதி இறந்து போன பிரிட்டிஷ் மஹாராணி இரண்டாம் எலிசபெத்தின் படம் வலது புறம் பார்க்கும்படி தபால் தலை நாணயங்களில் இருக்கிறது. அடுத்ததாக வரும் சார்லஸின் படம் இடது புறம் பார்ப்பதாக அமைக்கப்பட்டுள்ளது . இந்தப் படத்தை மஹாராஜா ‘ஓகே’ OK என்று சொல்லிவிட்டார். புதிய நாணயங்களுக்காக பிரிட்டிஷ் மக்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இதுவரை உலகிலேயே அதிக அளவு உருவம் அச்சிட்டப்பட்டவர் பிரிட்டிஷ் மஹாராணி . அவரை மிஞ்ச எவராலும் இனி முடியாது. ஏனெனில் அவர் நீண்ட காலம் ஆட்சி புரிந்தவர்! பிரிட்டனில் இப்போது பதவி ஏற்பவர் மூன்றாம் சார்லஸ் (CHARLES iii) என்று அழைக்கப்படுவார். 1952 முதல் கோடானு கோடி நாணயங்களிலும் தபால்தலைகளிலும் இடம்பெற்றவர் எலிசபெத் மஹாராணி. புதிதாக வெளியாகப்போகும் 5 பவுண்டு நாணயங்களில் மட்டும் நாணயத்தின் மறு பக்கத்தில் அவர் உருவம் இருக்கும்.
XXX
பாண்டிய மன்னர் பட்டியல்
கடுங்கோன் (இடைக்காலம்) (560–590)
மாறவர்மன் அவனி சூளாமணி (590–620)
செழியன் சேந்தன் (620–640)
அரிகேசரி மாறவர்மன் நின்றசீர் நெடுமாறன் (670–710)
கோச்சடையன் ரணதீரன் (710–735)
அரசகேசரி பராங்குச மாறவர்மன் இராசசிங்கன் I (735–765)
பராந்தக நெடுஞ்சடையன் (765–790)
இராசசிம்மன் II (790–800)
வரகுணன் I (800–830)
சீர்மாற சீர்வல்லபன் (830–862)
வரகுண வர்மன் (862–880)
பராந்தக வீரநாராயணன் (880–900)
மூன்றாம் இராசசிம்மன் (900–920)
பல பாண்டியர்களின் முழுப்பெயர்களும் நமக்குக் கிடைக்கவில்லை அவைகள் கிடைத்தால் பிற்காலத்திலுமிந்தப் பெயர்கள் இருப்பதைக் காணலாம்.
பிற்காலப் பாண்டியர்கள் (10– 13 நூற்றாண்டுகள்)
சுந்தர பாண்டியன் I
வீர பாண்டியன் I
வீர பாண்டியன் II
அமரபுசங்க தீவிரகோபன்
சடாவர்மன் சுந்தர சோழ பாண்டியன்
மாறவர்மன் விக்கிரம சோழ பாண்டியன்
மாறவர்மன் பராக்கிரம சோழ பாண்டியன்
சடாவர்மன் சோழ பாண்டியன்
சீர்வல்லப மணகுலச்சாலன் (1101–1124)
மாறவர்மன் சீவல்லபன் (1132–1161)
பராக்கிரம பாண்டியன் I (1161–1162)
குலசேகர பாண்டியன் III
வீர பாண்டியன் III
சடாவர்மன் சிறீவல்லபன் (1175–1180)
விக்கிரம பாண்டியன் (1180-1190)
முதலாம் சடையவர்மன் குலசேகரன் (1190–1216)
பராக்கிரம பாண்டியன் II (1212–1215)
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1216–1238)
இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் (1238–1240)
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1238–1251)
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் (1251–1268)
முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் (1268–1308)
சுந்தர பாண்டியன் IV (1309–1327)
வீர பாண்டியன் IV (1309–1345)
ஏறத்தாழ 800 ஆண்டுகளுக்கு இந்த வழக்கத்தைப் பின்பற்றியதால், இந்தியர்களுக்கு வரலாற்று உணர்வே இல்லை என்ற வெள்ளைக்காரன் ஏச்சுப்பேச்சு அடிபட்டுப்போகிறது. மேலும் ஒரு மாறனுக்கு அடுத்தாற்போல் இன்னொரு மாறன் பெயரே நமக்கு இன்று கிடைத்தாலும் இடையே ஒரு சடையன் பெயர் இருந்திருக்க வேண்டும் என்பதை நாம் ஊகிக்க முடிகிறது.

வாழ்க பாண்டியர்கள்!
-SUBHAM-
tags – மூன்றாம் சார்லஸ் , மாறன், சடையன், பாண்டியர், மன்னர்