தீ எரிக்காது — இந்து மத அற்புதம் (Post No.11,377)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,377

Date uploaded in London – 20 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx

தீ எரிக்காது — இந்து மத அற்புதம்

இந்துக்கள் கடும் தவத்தினால் பல அபூர்வ சக்திகளைப் பெறுகிறார்கள் ஆனால் அவற்றை அரிதே பயன்படுத்துவார்கள். பஞ்ச பூதங்களையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் அவர்களுக்கு உண்டு. பஞ்ச பூதங்களாக மாறி விண்வெளியில் பயணம் செய்யும் ஆற்றலும் அவர்களுக்கு உண்டு. ஐன்ஸ்டீன் , நியூட்டன் போன்றோர் சொன்ன பெளதீக விதிகள் அங்கே செல்லுபடியாவது இல்லை.  ராமலிங்க சுவாமிகள், ஞான சம்பந்தர், ஆண்டாள்,ஆதி சங்கரர் முதலிய பல ஞானிகள்,  ஜோதி சொரூபமாக மாறி  இறைவனை அடைந்ததை நாம் அறிவோம். குமாரில பட்டர் என்னும் பெரிய அறிஞர் எரியும் உ மிக் குவியலுக்கு இடையே தன் உடலை வைத்துக் கொண்டு ஆனந்தமாக எரிந்ததையும் நாம் படித்திருக்கிறோம்.

கற்புள்ள பெண் ‘பெய்’ என்றால் மழை கொட்டித் தீர்க்கும் என்று வள்ளுவன் சொன்னதும் நாம் அறிந்ததே. சீதையை  அனுமன்  அசோக வனத்தில் சந்தித்து ராமன் பற்றிய இன்பச்  செய்தியைக் கொடுத்த பின்னர் , இறுதியாக புறப்படும் முன்பாக ஒரு வேண்டு கோள் விடுக்கிறான் . அன்னையே என் தோள் மீது ஏறி அமருங்கள் ; ஒரே  நொடிப்பொழுதில்  உங்களை ராமனிடம் அழைத்துச் செல்கிறேன் என்கிறான். அப்போது அவள் சொல்கிறாள்,

என்னை யார் என்று எண்ணி எண்ணி  நீ பார்க்கிறாய்? என்னுடைய சக்தியால் ஈரேழு புவனங்களையும் எரிக்க முடியும். ஒரு சொல் போதும் ஆயினும் என் சொல் பெரிதல்ல. ராமனின் வில்லுக்கு இழுக்கு வந்து விடக்கூடாது என்கிறாள். ராமாயணத்தின் கருத்தே அதுதானே. மக்கள் சக்தியை எழுப்பி தீமையை  மாய்க்க வேண்டும் என்பதே ராமாயண தாத்பர்யம் .

மேலும் இந்து சந்யாசிகள் எவ்வளவு சக்தி இருந்தாலும் அற்புதங்களை செய்வதில் அதை வீணடிக்க மாட்டார்கள்; கஷ்டப்பட்டு சம்பாதித்து பாங்கில் சேமித்து வைக்கும்  பணத்துக்கு ஈடானது , ஒருவர் தவத்தினால் சம்பாதித்த புண்யம் ஆகும். ஒருவருக்கு ஒருவர் வரம் கொடுத்தாலோ, சாபம் கொடுத்தாலோ அப்போது பாங்க் பாலன்ஸ் (BANK BALANCE) குறையும். அதாவது உங்கள் புண்யத்தைச் செலவழிக்கிறீர்கள்.

இதை விஸ்வாமித்திரர் கதையிலும் பார்க்கிறோம் . க்ஷத்ரியனாக பிறந்து மந்திரங்களைக் கற்ற அவருக்கு பிராமணன் ஆக வேண்டும் என்று ஆசை.அதற்காக அவருக்குப் போட்டி என்று கருதிய வசிஷ்டர் வாயினால் பிரம்ம ரிஷி பட்டம் வாங்க முயன்று மூன்று முறை தோற்கிறார் ; காமம், க்ரோதம், லோபம் மூலம் அவர் பாங்கு பாலன்ஸை /(BANK BALANCE OF PUNYA) சேமித்த புண்யத்தை வீணடி க்கிறார் . மேனகா மூலம் காம சுகம் அனுபவித்ததிலும்,திரிசங்கு என்ற மன்னரை உடலுடன் சொர்க்கத்துக்கு அனுப்ப ஆசைப்பட்டதிலும், வசிஷ்டர் மகன மீதான கோபத்தாலும் அவர் சக்தி விரயமாகியது. இறுதியில்  காம,க்ரோத லோபத்தை விடுத்து வசிஷ்டர் வாயினாலேயே பிரம்மா ரிஷி பட்டம் பெறுகிறார். இது மனித குலத்துக்கு அவர் தந்த பாடம்.

சீதா தேவியும் தன ஆற்றலைப் பயன்படுத்தவில்லை; ஒரு சாதாரணப் பெண்மணி போலவே செயல்படுகிறாள் . ஆனால் தனக்கு நல்ல செய்தி கொண்டுவந்த அனுமன் வாலில் ராக்ஷசர்கள் தீயை மூட்டிவிட்டனர் என்று சொன்னவுடன் அக்கினி பகவானை  “ஏ , அக்கினியே , அனுமனைச் சுடாதே என்கிறாள்.அப்படியே அவனும் செய்கிறான். சுண்ணாம்புக் காளவாயில் மஹேந்திர வர்மனால் தூக்கி எறியப்பட்ட அப்பருக்கு எப்படி அது சுடவில்லையோ அப்படி அனுமனுக்கும் தீ சுடவில்லை. அவனுக்கும் ஆசர்யம் தாங்கவில்லை சிந்திக்கிறான். மூன்று காரணங்கள் மனதில் உதிக்கின்றன: 1.ராமனின் மகத்தான சக்தி, 2.சீதையின் கற்புக்கனல், 3.தனது தந்தையான வாயு பகவானுக்கும் அக்கினி பகவானுக்கும் உள்ள நட் புறவு ஆகிய இந்த மூன்றினால்தான் இந்த அற்புதம் நிகழ்கிறது என்று ஊகிக்கிறான் . இதோ வால்மீகியின்  சொற்களிலேயே அதைக் கேட்போம்.

यस्त्वया कृतसंवाद स्सीते ताम्रमुखः कपिः।।5.53.25।।

लाङ्गूलेन प्रदीप्तेन स एष परिणीयते।

யஸ்த்வயா  க்ருத ஸம்வாத  தாம்ர முகஹ கபிஹி

லாங்கூலேன  ப்ரதீப்தேன  ஸ ஏஷ பரிணீயதே 5-53-25

சுந்தர காண்டம், வால்மீகி ராமாயணம்

ஓ சீதா ! உன்னுடன் இப்போது கதைத்தே,  ஒரு செம்முகக் குரங்கு ; அதைத் தெருவில் இழுத்துக் கொண்டு செல்கிறார்கள்; அதன் வாலில் தீ வைத்துவிட்டார்கள் .

(லாங்கூலம் = வால் ; கபி = குரங்கு; தாம்ர முக = செம்முகம் ; ப்ரதீப் தேன – தீ மூட்டப்பட்ட)

தொடரும் ……………………….

PLEASE READ MY OLD ARTICLE, IF YOU HAVE NOT READ IT.

ராமரின் வில் பெரிதாசீதையின் சொல் பெரிதா?

Date: 15 May 2017 

Post No. 3910 

அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ

எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்

சொல்லினால் சுடுவேன் அது தூயவன்

வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன்

–சுந்தர காண்டம், சூளாமணிப் படலம், கம்ப ராமாயணம்

 பொருள்:-

பிறருக்குத் துன்பம் தருவதையே தொழிலாகக் கொண்ட அரக்கருடைய இலங்கையை மட்டுமாகணக்கற்ற உலகங்கள் அனைத்தையும் எனது ஒரு சொல்லினால் சுட்டெரிப்பேன் அவ்வாறு செய்வது ராமனின் வில்லாற்றலுக்கு இழிவு உண்டாக்கும் என்று உணர்ந்து அத்தொழிலைச் செய்யாது விட்டேன் – என்று அனுமனிடம் சீதை சொல்கிறாள்.

என் தோள் மீது ஏறிக் கொள்ளுங்கள்உடனே ராம பிரானிடம் சேர்த்து விடுகிறேன் என்று அனுமன் சொன்னபோது சீதை கூறியது இது.

நீ ஒரு ஆண்மகன்உன் தோள் மீது ஏறுவது தர்மம் ஆகாது” என்றும் வாதிடுகிறாள்.

அதாவது ராமனின் வில் ஆற்றலுக்காவது அவர் தனது சொந்த சக்தியைச் செலவழிக்க வேண்டும். ஆனால் பத்தினிப் பெண்ணாகிய சீதைக்கோ அது கூடத் தேவை இல்லை. உடல் வலிமையின்றி மன வலிமையால் சாபம் போட முடியும்.

பெண்களுக்குள்ள இந்த அபார சக்தியை வள்ளுவனும் போற்றுவான்:

தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை (குறள் 55)

வேறு தெய்வத்தைக் கும்பிடாமல் கணவனையே தெய்வமாகக் கும்பிட்டுத் துயில் எழும் பெண்/ மனைவி ‘பெய்’ என்று சொன்னால்அவள் சொல் கேட்டு மழையும் பெய்யும்” என்பான் வள்ளுவன்.

கண்ணகியும் தன் சொல்லால் மதுரையைச் சுட்டெரித்தாள்.

சாவித்ரி எமனுடன் வாதாடிகணவன் உயிரை மீட்டுக் கொண்டு வந்தாள். சந்திரமதிதமயந்தி போன்றோரும் துயரங்களைக் கடந்து வெற்றி பெற்றனர்.

திரவுபதியும் தான் எடுத்த சபதத்தை பாண்டவர்களின் மூலம் நிறைவேற்றிக் காட்டினாள்.

 ஆகையால் சொல்லால் சுடுவேன் என்று சூ ளுரைத்தது பொருத்தமே.

அமெரிக்க அதிபர்ரஷ்ய அதிபர்இந்தியப் பிரதமர் கைகளில் அணுகுண்டுகளை ஏவிவிடும் “பட்டன்” (switch or Button) இருக்கிறது. ஆயினும் அச்சக்தியைப் பிரயோகிக்காமலேயே பிரச்சனைகள் தீர்க்கப்படுகின்றன. அது போல பத்தினிப் பெண்களிடமும் அபார சக்தி இருக்கிறது அதை எவ்வளவு கவனத்துடன் பயன்படுத்த வேண்டுமோ அவ்வளவு கவனத்துடன் பயன்படுத்துவார்கள். அதை வீணாகப் பயன்படுத்தமாட்டார்கள்பெண்கள் கருணை உள்ளம் படைத்தவர்கள்.

ராமனின் வில்லாற்றலுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தக் கூடாதுராவணன் என்ற அரக்கனை அகற்றும் பணியை அவதார புருஷனாகிய ராமனே செய்யட்டும் என்று சீதை பொறுமையாக இருக்கிறாள்.

வால்மீகி ராமாயணத்தில் இது போன்று உலகங்கள் அனைத்தையும் சுட்டெரிக்கும் வல்லமை பற்றிப் பேச்சு இல்லை.

வால்மீகி ராமாயணத்தையே கம்பன் பின்பற்றினாலும்பல இடங்களில் அவன் புதுக் கதைகளையும்புது வசனங்களையும் சொல்லுவது அவன் வேறு சில  ராமாயணங்களின் கதைகளையும் எடுத்தாண்டதைக் காட்டுகிறது. அவனே மூன்று ராமாயணங்கள் பற்றிப் பேசுகிறான். ஆனால் அவன் குறிப்பிட்ட மூன்றில் இன்று நமக்குக் கிடைப்பது வால்மீகி ராமாயனம் ஒன்றே.

கம்பனைப் பயில்வோம்கவின்சுவை பெறுவோம்.

-Subham–

 Tags தீ எரிக்காது, இந்து மதம்,  அற்புதம், 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: