
St Edwards Crown (Not Kohinoor Crown)
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 11,505
Date uploaded in London – 4 December 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
பிரிட்டிஷ் பத்திரிகைகள் மஹாராஜா (Coronation) பட்டமேற்பு விழா பற்றிய செய்திகளை வெளியிட்டு வருகின்றன. எலிசபெத் மஹாராணி செப்டம்பர் 8- ஆம் தேதி (2022) இறந்தார். இதைத் தொடர்ந்து அவரது மகன் சார்ல்ஸ் மூன்றாவது சார்ல்ஸ் (Charles III) என்ற பெயரில் அடுத்த ஆண்டு 2023 மே 6-ஆம் தேதி (2023) பதவி ஏற்கப்போகிறார். பின்னர் பிரிட்டனின் தபால்தலை, கரன்ஸி , காசுகளில் அவரது உருவப்படம் இருக்கும். பிரிட்டிஷ் அரசன் அல்லது அரசி படங்களுடன் தபால்தலை வெளியிடும் நாடுகளும் அவரது படத்தை வெளியிடலாம்.

செயின்ட் எட்வர்ட்ஸ் கிரீடம்
நேற்றைய செய்தி என்னவென்றால் ராணி அணிந்த பட்டமேற்பு செயின்ட் எட்வர்ட்ஸ் கிரீடம் St Edward’s Crown லண்டனிலுள்ள டவர் ஆப் லண்டன் மியூசியத்திலிருந்தது (Tower of London Museum) அகற்றப்பட்டுவிட்டது என்பதாகும். அவருடைய (Charles) தலை அளவுக்குப் பொருந்துமாறு செய்ய இப்படி அகற்றப்பட்டது என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.
இதில் இந்தியர்களுக்கு சுவையான செய்தியையும் பத்திரிகைகள் கிளப்பிவிட்டுள்ளன . இளவரசி டயானா இறந்தபின்னர் கமில்லா (Camilla) என்ற பெண்மணியுடன் சார்ல்ஸ் வசித்து வருகிறார். அவர் துணைவி என்ற முறையில் அவருடன் அமரும்போது கோஹினூர் வைரம் பிரகாசிக்கும் கிரீடத்தை அணிவாரா? என்பதே கேள்வி. இது பற்றி அரண்மனை வட்டாரம் எதையும் சொல்ல மறுத்துவிட்டதாகப் பிரிட்டிஷ் பத்திரிகைகள் எழுதியுள்ளன . கோஹினூர் வைரம் கடைசியாக பஞ்சாப் மன்னர் ரஞ்சித் சிங்கிடமிருந்து கைமாறியது. அதை பிரிட்டிஷார் கவர்ந்து சென்றனர் என்ற செய்தியும், ‘இல்லை இல்லை அதை ரஞ்சித் சிங்கே பரிசாககக் கொடுத்தார் என்ற செய்தியும் அனைவரும் அறிந்ததே. பிரிட்டிஷாரே மற்ற சில நாடுகளைத் தூண்டிவிட்டு எங்களுடையது என்று நீங்களும் சொல்லுங்கள் என்று ஏவி விட்டதையும் நாம் அறிவோம்.
105 காரட் எடை யுள்ள கோஹினூர் வைரம் தாங்கிய கிரீடத்தை மகாராணியின் அன்னை (Queen Mother) அணிந்து வந்தார் .
இப்போது மஹாராஜா CHARLES பதவி ஏற்கும் நாளன்று அணியப்போகும் செயின்ட் எட்வர்ட்ஸ் கிரீடம் St Edward’s Crown வெள்ளிக்கிழமை இரவில் , அதி பயங்கர செக்யூரிட்டியுடன் ஒரு ரகசிய இடத்துக்கு அகற்றப்பட்டது. இது நடந்த பின்னரே இதை பக்கிங்ஹாம் அரண்மனை, அறிவித்தது . அது வரைக்கும் பரம ரஹசியம்
2017 ஆம் ஆண்டு முதல் Mark Appleby, of Mappin and Webb மார்க் ஆப்பிள் பி நிறுவனம்தான் ராஜ கிரீடங்களைப் பராமரித்து வருகிறது. அவர்கள்தான் ரஹசிய இடத்தில் கிரீடத்தை பெரிதாக்கப் போகிறார்கள். மன்னரின் தலை , ராணி எலிசபெத்தின் தலையைவிடப் பெரியது.
செயின்ட் எட்வர்ட்ஸ் கிரீடம் St Edward’s Crown
1661ம் ஆண்டில் இரண்டாவது சார்ல்ஸ் மன்னருக்காக செயின்ட் எட்வர்ட்ஸ் கிரீடம் செய்யப்பட்டது 1649-ம் ஆண்டில் உருக்கப்பட்டுவிட்ட முந்தைய கிரீடத்தைப் போல அது வடிவமைக்கப்பட்டது. ஒரிஜினல் கிரீடம் பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த , ஜனக மஹாராராஜா போன்ற ஞானி/ அரசர் எட்வர்ட் (royal saint, Edward the Confessor, the last Anglo-Saxon King of England). உடையது
பின்னர் செய்த புதிய கிரீடத்தில் சிலுவையும் பூக்களும் இருக்கின்றன. இந்த கிரீடம் தங்கக் கட்டிக்களால் ஆனது (தங்கத்தகடு அல்ல ; கட்டித்தங்கம்)அதில் மாணிக்கம், நீலம் , புஷ்பராகம் மற்றும் (Semi Precious Stones) அமெதிஸ்ட் கார்னெட் , டோர்மலின் போன்ற நவரத்னங்களுக்கு நிகரான கற்களும் இருக்கின்றன . அதை வெல்வெட் துணியால் up of a solid gold frame set with rubies, amethysts, sapphires, garnet, topazes and tourmalines) போர்த்தியிருப்பார்கள் .

St Edwards Crown (Not Kohinoor Crown)
அண்மையில் மஹாராணி இறுதி ஊர்வலத்தைக் கண்ட கோடிக் கணக்கானோர் இதை டெலிவிஷனில் பார்த்திருப்பார்கள் (made
— subham —
tags–கோஹினூர், கிரீடம், செயின்ட் எட்வர்ட்ஸ், மஹாராஜா , சார்ல்ஸ்
tags- கோஹினூர், கிரீடம், மகாராஜா , செயின்ட் எட்வர்ட்ஸ் கிரீடம்