
WRITTEN BY Dr A. Narayanan, London
Post No. 11,543-2
Date uploaded in London – 18 December 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மார்கழி 2
அஞ்சுகம் கரமேந்திய வஞ்சிக் கொடியாளே
கஞ்சன் வயிற்றிருந்த நெருப்பான நெடுமாலை
நெஞ்ச முருகும் பாமாலைப் பஞ்சணையிலே
தஞ்ச மடைய வைத்தவளுமிந்தத் தாரகையே 2.5
நான் மறை போற்றும் நாரணன் பேர் பாடி
நாளோர் பாவை நற்றமிழில் பண்ணிசையாக
நாச்சியார் திருமொழியில் பேச்சிலே மயங்கி
ஆய்ச்சியன் மையல் கொண்ட மங்கை வாழி 2.6
வையத்து வாழ்வோருய்ய மார்கழித்திங்களில்
நெய்யும் பாலுமுண்ணா அதி காலை நீராடி
மையிடாக்கண்களும் நறு மலரிடாக் கூந்தலுமாய்
பொய்யும் புன்னெறியும் புறங்கூறலையும் புறம்
பெய்தி வாயும் வயிறும் வரந்தியோர் எஞ்சா
அன்னமிட்டு நோன்பு காத்துப் பாற்கடலில்
பையத்துயின்ற பரமனடிபாடிப்பணிந்த நங்
கையர் குழாம் நாயகி நப்பின்னை வாழியே 2.8
நாராயணன்
Xxxx
மார்கழி 3
மூவுலகளந்த முகுந்தன் மலரடியே முதலாக
முறையான நூற்ற நோன்பிலே மும்மாரி
முகில்களோர் திங்களிற் சொரிந்ததிலே
முளைவிட்டச் செந்நெல்ஓங்கிய நிலத்திலே
ஊடு கயலோட கறவைகள் மடி கனத்ததிலே
முலை பீச்சிய பால் தாங்கிய குடம் வழிய
தீங்கின்றி நாடெல்லாம் தீராச் செல்வம் பெற
பன்னோர் நலம் கோரியக் கோதை வாழியே
மறையுள் நின்ற மாதவனோ யாதவனே
குறையொன்று மில்லாக் கோவலனாக
நிறைவான செல்வம் நீங்காதருள வேண்டி
வரையிலாதோனைப் பாடிய பாவை வாழி
Xxxx
மார்கழித் திங்கள் 4
மறையுள் நின்ற மாதவனோ யாதவனே
குறையொன்று மில்லாக் கோவலனாக
நிறைவான செல்வம் நீங்காதருள வேண்டி
வரையிலாதோனைப் பாடிய பாவை வாழி
வீங்கு நீர் கடலொத்த உடலோன், கை
வாங்கிய நீரால் கார் முகில் வண்ணனாக
தாங்கிய கரங்களில் மின்னிய ஆழியும்
முழங்கிய சங்கும் வில் விடுத்த சரம்போல்
மழையில் உலகோர் உய்ய இயற்கையில்
இழைந்தியங்கும் இருடிகேசனுக்கு மார்கழி
நீராடி தூயமங்கையராய்த் தூயானைத்தொழ
கோரிக்கை வைத்த கோதைநாயகி வாழியே
நாராயணன்
To be continued………………………………