ராமாயணத்தின் முக்கிய வருடங்கள் 38 – Part 1 (Post No.11,594)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,594

Date uploaded in London – 28 December 2022                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ராமாயண வழிகாட்டி!

ராமாயணத்தின் முக்கிய வருடங்கள் 38 : அதில் அதிசயமான ஒன்றரை நாள்! – Part1

 ச.நாகராஜன்

உலகின் ஆகப் பெரியதும் புனிதமானதுமான இதிஹாஸமான ராமாயணத்தில் முக்கிய வருடங்கள் 38 தான் என்றால் அது ஆச்சரியமாக இல்லை?!

கோடானு கோடி பேர்கள் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக அதைப் படித்து எல்லையற்ற நன்மைகளை அடைந்து வருகின்றனர்; இனியும் வருங்காலத்தில் அனைவரும் அடையப் போகின்றனர்.

எல்லையற்ற மஹிமை கொண்ட ஒரு புனித புருஷரைப் போற்றுகிறோம், ஆனால் அது 38 வருடங்களில் அவர் வாழ்வில் நடந்த வாழ்க்கையைப் பற்றித் தான் என்றால் பிரமிப்பாயில்லை?

38 வருடங்களில் பிரபஞ்ச நாயகனாக ஒருவர் உயர முடியுமா?

முடியும், மஹா விஷ்ணுவினால் முடியும்!

அவரே ராமாவதாரம் எடுத்தார்.

அந்த 38 வருடங்களைப் பற்றி ஒரு பார்வை பார்ப்போமா?

எண் சம்பவம்                                   வருடம் மாதம்  நாள்

 1.   பிறந்ததிலிருந்து சீதையை மணந்தது முடிய      12   –     –

 2.   திருமணத்திற்குப் பிறகு அயோத்தியில் வசித்தது 12    –     –

 3.   ரிஷிகளுடன் சித்ர கூடத்தில் இருந்தது               10    –     –

 4.   சுதீக்‌க்ஷணரின் ஆஸ்ரமத்தில் இருந்தது           2    –     –

 5.   கர, தூஷணர்களுடன் போர் வரை – பஞ்சவடியில் 1    1     25

 6.   சீதை கடத்தப்பட்டதும், சுக்ரீவ மகுடாபிஷேகமும் –     2     –

 7.   குளிர்காலத்தில் கழிந்தது                       –     4    –

 8.   சுக்ரீவன் சேனையைத் திரட்டியது               –     1    –

 9.   சீதையைத் தேடியது                            –     2    –

10.   குகையிலிருந்து வந்தது, ஹனுமானின் லங்கை

     விஜயம், ஹனுமான் திரும்பி ராமரிடம் வருதல்,

     சேனையை ஒருங்குபடுத்தல்                    –     –     15

11.   கடற்கரையை ராமர் அடைதல், தர்ப்பசயனம்     –     –     3

12.   இலங்கைக்குப் பாலம் அமைத்தல்               –     –      5

13.   ராவணனுடன் யுத்தம்                           –     –     7

14.   ராவணனின் உடலை அகற்றல், அயோத்தி

     திரும்பல்                                       –     –     5

                                                     —————————–

                           மொத்தம்                 38    –     –

                                                     —————————–

மொத்த வருடங்கள் 38 மட்டுமே!

இதை ராமாயணத்தின் காண்டங்களின் படி பார்த்தால் வரும் அட்டவணை இது:-

எண் காண்டம்                                   வருடம் மாதம்  நாள்

 1. பால காண்டம் – ராமரின் இளமைப் பருவம்        12    –       –

 2. அயோத்யா காண்டம்- அயோத்தியில்

    ராமரின் மணவாழ்க்கை                                12    1      10

 3. ஆரண்ய காண்டம்                                13    1       0

 4. கிஷ்கிந்தா காண்டம் – சுக்ரீவனுடன் நட்பு          0    8       27

          கணக்கில் வராதது                         –    –       1

 5.  சுந்தர காண்டம்  – ஹனுமான் இலங்கைக்குச்

    சென்று மீண்டும் ராமரிடம் திரும்பி வருதல்      –     –     1 ½

 6.  யுத்த காண்டம் – ராம-ராவண யுத்தம்             –     –       20

நந்தி கிராமம் வருதல், ராம பட்டாபிஷேகம்           –    –        2

                                                           ———————————

                           மொத்தம்                  38   –        –

                                                     ———————————

இதில் வியக்கத்தக்க ஒரு விஷயம் ஹனுமாரின் ஒன்றரை நாள் சாதனை தான்.

ஒன்றரை நாளில் செயற்கரிய காரியத்தைச் சாதித்து அனைவரும் வியந்து பிரமிக்கும் வண்ணம் லங்கை சென்று சீதையை தரிசித்து மீண்டும் திரும்பி வந்தவர் ஹனுமார்.

நினைக்க நினைக்க பிரமிப்பூட்டும் இந்த விஷயத்தினால் காலமெல்லாம் கோடானுகோடி பேர்கள் துதிக்கும் பெரும் நாயகனாக சொல்லின் செல்வன் விளங்குகிறார்.

இதில் உள்ள முக்கியமான அம்சங்களை இன்னும் அடுத்துப் பார்ப்போம்.

குறிப்பு :

மேற்படி அட்டவணை காலம்சென்ற வித்வான் D.T.தாத்தாசாரியார் அவர்களால் தொகுக்கப்பட்டது.

இந்த விவரத்தை அப்படியே மறுபிரசுரம் செய்துள்ளார்

திரு S.V. பார்த்தசாரதி அவர்கள், தனது புத்தத்தில்.

புத்தகம் : “ Whatever is Your Profession

                                       Valmiki’s

                              GUIDE TO GOOD LIFE

வெளியிட்ட ஆண்டு : 1975

நன்றி : வித்வான் திரு  D.T.தாத்தாசாரியார்,

திரு திரு S.V. பார்த்தசாரதி அவர்கள்,

to be continued 

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: