வாயு பகவானின் மூன்று அவதாரங்கள்! (Post No.11,643)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,643

Date uploaded in London –  8 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

வாயு பகவானின் மூன்று அவதாரங்கள்!

ச.நாகராஜன்

வாயு பகவானின் மூன்று அவதாரங்கள்!

வாயு பகவான் மூன்று அவதாரங்களை எடுத்திருக்கிறார்.

1) ஹனுமான் 2) பீமசேனன் 3) மத்வாசாரியார்

ப்ரதமோ ஹனுமான் த்வீதியோ பீம ஏவ ச |

பூரணப்ரக்ஞஸ்த்ரூதியஸ்து பகவத்கார்யஸாதக: ||

–    சர்வதர்சனசங்க்ரஹம் (பூர்ணப்ரக்ஞ)

2) மூன்று விஷயங்கள் எதிரிகளைச் சம்பாதிப்பது போல!

கீழ்க்கண்ட மூன்று விஷயங்களைச் செய்வதானது எதிரிகளைச் சம்பாதிப்பது போலத் தான் என்று விதுரர் கூறுகிறார்.

1) தன்னை அண்டியவர்களுக்கு வரம் தருதல்

2) ஒரு ராஜ்யத்தை ஜெயிப்பது

3) மகனைப் பெறுதல்

இந்த மூன்றும் எதிரியைச் சம்பாதிப்பது போலத் தான்!

வரப்ரதானம் ராஜ்யம் ச புத்ர ஜன்ம ச பாரத |

ஷத்ரோஸ்ச மோக்ஷணம் க்ருச்சாத்த்ரீணி சைகம் ச தத்சமம் ||

–    விதுர நீதி 1.72

–     

3) திருப்தி அடைய வேண்டியவை மூன்று!

கீழ்க்கண்ட மூன்று விஷயங்களில் ஒருவன் திருப்தி அடைய வேண்டும் என்று சுபாஷித ஸ்லோகம் கூறுகிறது.

1) தனது மனைவியிடன்

2) போஜனம் – உணவில்

3) தன்னிடம் இருக்கும் செல்வத்தில்

சந்தோஷஸ்தீரிஷு கர்தவய: ஸ்வதாரே போஜனே தனே |

–    சுபாஷித ரத்னாகர பாண்டாகாரம் 160/337

–     

4) மூன்று விஷயங்களில் ஒருபோதும் திருப்தி அடையக்கூடாது!

கீழ்க்கண்ட மூன்று விஷயங்களில் ஒருவன் ஒருபோதும் திருப்தி அடையக் கூடாது என்று சுபாஷித ரத்னாகர பாண்டாகாரம் தனது ஒரு ஸ்லோகத்தில் அறிவுறுத்துகிறது.

1) தானம் கொடுப்பதில்

2) தவத்தில்

3) கற்றுக் கொடுப்பதில்

த்ரீஷு சைவ ந கர்தவ்யோ தானே தபஸி பாடனே!

–            சுபாஷித ரத்னாகர பாண்டாகாரம் 160/337

–     

5) சூரிய கிரணங்கள் தரும் நன்மைகள் மூன்று!

நமது சாஸ்திரங்களும் அறிவியலும் போற்றும் சூரிய கிரணங்களின் பெருமை சொல்லி மாளாது.

சூரிய கிரணங்கள் மூன்று நன்மைகளைத் தருவதாக நமது அறநூல்கள் கூறுகின்றன.

1) உஷ்ணம்

2) ஆரோக்யம்

3) ப்ரகாசம்

கிரணா ஸ்த்ரீ வித்யா: சூர்யே தாபாரோக்யப்ரகாஷதா: |

க்னந்தி ஸ்வப்ரபாவேண தைன்யம் தாபம் ச பாதகம் ||

6) துக்கத்திற்கான காரணங்கள் நான்கு!

ஒருவன் நிச்சயம் துக்கப்பட வேண்டிய நிலையில் அவனை நான்கு விஷயங்கள் கொண்டு விட்டு விடும். அவை யாவை? விடையை மனு தனது மனு ஸ்மிருதியில் தருகிறார்.

1) குடித்தல்

2) சூதாட்டம்

3) ஸ்த்ரீ சம்போகம் (பெண்களுடனான பாலியல் உறவு)

4) வேட்டையாடுதல்

பானமக்ஷா: ஸ்த்ரீயஸ்சைவ ம்ருகயா ச யதாக்ரமம் |

ஏதத்கஷ்டதமம் வித்யாச்சதுக்கம் காமஜே கனே ||

–    மனு ஸ்மிருதி VII – 50

–     

7) பக்தர்கள் நான்கு விதம்!

பகவத் கீதையில் க்ருஷ்ண பரமாத்மா பக்தர்களை நான்கு விதமாகப் பிரிக்கிறார்.

1) ஆர்த்தா (துன்பத்தில் இருப்பவர்கள்)

2) ஜிக்ஞாஸு (விசாரித்து அறியத் துடிப்பவர்கள்)

3) அர்த்தார்த்தீ – செல்வத்தை விரும்பித் துதிப்பவர்கள்

4) ஞானி

சதுர்விதா பஜந்தே மாம் ஜனா: சுக்ருதிநோர்ஜுன |

ஆர்தோ ஜிஞாஸுரரதார்தீ ஞானி ச பரதர்ஷ்ப ||

–    பகவத் கீதா VII – 16

8) மனதை சந்தோஷமாகவும் அமைதியாகவும் வைத்திருக்க உள்ள நான்கு வழிகள்!

மனதை சந்தோஷமாகவும் அமைதியாகவும் வைத்திருக்க நான்கு வழிகளை  யோக சாஸ்திரம் கூறுகிறது.

1) மைத்ரி : சந்தோஷமான மனிதர்களிடம் நட்பு கொண்டிருப்பது

2) கருணா : சந்தோஷமற்ற மனிதர்களிடம் கருணை காட்டுவது

3) முதிதா – நல்லனவற்றில் சந்தோஷம்

4) உபேக்க்ஷா _ பாவ விஷயங்களில் வெறுப்பு

மைத்ரிகருணாமுதிதோபேக்ஷாணாம் சுகதுக்கபுண்யாபுண்யவிஷயாணாம் பாவ நாதஸ்சித்தப்ரஸாதனம் |

–    யோக சூத்ரம் I – 3

9) தர்ம சாத்யத்திற்கான இரு வழிகள்!

தர்மத்தைச் செய்வதற்கான இரு வழிகள் இதோ

1) த்ரவியம் – செல்வத்தினால்

2) தேஹம் – உடலினால்

இந்த இரண்டினாலும் தர்மம் செய்து உரிய பலன்களை அடையலாம்.

தர்மஸ்ச த்விவித: ப்ரோக்தோ த்ரவ்யதேஹத்வயேன ச |

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: