
WRITTEN BY Dr A. Narayanan Ph.D., London
Post No. 11,543- Part 8
Date uploaded in London – 14 January 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மார்கழித்திங்கள் 28
பசுக்களை கானகத்தே மேய விட்டு நல்லுணவு
புசித்து உடலைப் பேணுவதின்றி தேவை வேறறியா
பாமரராய் அறிவிலா ஆய்குலத்தோரிடையே
பேதம் காணாப் பழகிய போதனான கோவிந்தா!
பிரியாத உன் உறவின் பெருமையும் கீர்த்தியும்
தெரியாதுன்னை அன்று சிறு பேரழைத்ததில்
சினம் கொள்ளா மன்னித்துப் பறை தருவாயோ
என்று ஆய்ச்சியர் குலத்தோரிலொருத்தி போல்
முறையிட்ட கோதை வாழியே
நாராயணன்
கூடாரை வெல் பவனும் கூடியவருடன்
குளிர்ந்து நீராடுபவனும் நாடு புகழும்
கோவிந்தனைத் தேடி அலைந்து கிட்டாத
கோவலனைக் கட்டிவிட்ட பாமாலையில்
புரியாத சொற்களுக்கவன் பொருள் கேட்க
புதிரான நீயே அவைகளின் பொருளென்றாளே
XXXX

மார்கழித்திங்கள் 29
பொழுது விடியும் முன் கோயில் படி வாயில் நின்றுன்
பொற்றாமரையடி போற்றி யாம் கோரும் பலனோ
உற்ற உறவினனாய் ஆய்ச்சியர் குலம் தோன்றிக்
கற்றுக்கறவைகள் பல கறந்துப் பாலும் தயிரும்
சற்றும் தயங்காமல் எம்முடன் பகிர்ந்த கோவிந்தா!
ஏற்றுக் கொள்வீரே ஏழேழ் பிறவி எங்கள் குலமுதிக்க
பற்றறுத்து யாமுன் திருவடி பற்றிப் பணி புரிவதற்று
வேறின்பம் எப் பறை பொருளும் தர இயலாவென
ஆய்ச்சியாக பாவித்துரைத்த பாவை வாழியே
நாராயணன்
வேதியருக்கெல்லாம் வேதியன்
வேதனை விளைப்போர்க்கு விருத்தன்
வேண்டுவோர்க்கு விருந்தினன்
விசயனுக்கு சாரத்யன்
ஏற்றோர் எளியோரெனறியான்
வெற்றிடம் வேறிடமறியான்
பற்றுமிடமோ அவனையே பற்றுவோரை
உற்றவரவரென உறவு கொண்டாடுவானே
நாராயணன்
XXXX

மார்கழித்திங்கள் 30
கலங்களுடைய திருப்பாற்கடலை மாதவனே கேசவனுமாய்
கடைந்தமுதமெடுக்கத் தனை ஆட்படுத்திக் கொண்டோனை
கண் கவருமாடையணிகலன் அணிந்த மதிமுக ஆய்ச்சியர்கள்
கனிமொழியில் போற்றிப் பாட வேதியர் கோன் விட்ணுசித்தன்
கன்னிமகள் பூங்கோதை வாய் பொழிந்த பாமலையே போதுமென
பாரோரனைவரும் பரகதியடைய பாசுரங்கள் முப்பதும் திராவிட
வேதமாயோதிட திரண்ட தோள்களும் செந்தாமரைக் கண்களும்
கொண்ட திருமாலின் நீ ங்கா நிறை செல்வம் நிலைத்திடுமென
வாக்குறு தியளித்த வனிதை கோதை வாழியே
போற்றுவோம் போற்றுவோம் கோதையைப் போற்றுவோம்
கோதையைப் பற்றிய கோவிந்தனைப் போற்றுவோம்
போற்றுவோம் போற்றுவோம் கோவிந்தனைப் போற்றுவோம்
கோவிந்தனைப் பற்றியத் திருப்பாவையைப் போற்றுவோம்
நாராயணன்
—SUBHAM—