
Post No. 11,675
Date uploaded in London – – 16 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
அம்பலவாணரும் அப்பரும் செப்பியது ஒன்றே !
உடலிலுள்ள ஒவ்வொரு அங்கமும் இறைவனைத் தொழுவதற்குத்தான் உள்ளது என்ற விஷயம் அப்பர் பாடிய தேவாரத்தில் திரு அங்கமாலை என்னும் பதிகத்தில் உள்ளது. அதர்வண வேதத்திலும் இதே கருத்து இருக்கிறது அம்பலவாணரும் அதே கருத்தை இறைவனின் அடியார்களிடத்தில் எதிரொலிக்கிறார்.
ஹஸ்தெள ச பாதெள நயனே ப்ரஸன்னே
கர்ணெள சுதீக்ஷ்ணெள வதனம் ச காந்தம்
நாஸா சு ரம்யா மனநாய சித்தம்
ஈ சேன தத்தம் ததிதம் ஸமக்ரம்
— என்று ஸம்ஸ்க்ருதத்தில் ஒரு ஸுபாஷிதம் / பொன்மொழிப்பாடல் – உள்ளது.
இதன் பொருள்
இரண்டு கைகள், கால்கள், கண்கள் , காதுகள், அழகிய முகம் , மூக்கு, சிந்திப்பதற்காக ஒரு மனம் — இவையாவும் நல்வழியில் செயல்படவே இறைவனால் கொடுக்கப்பட்டுள்ளன .
ஆதி சங்கரரும் பஜ கோவிந்தத்தில் சத் சங்க மஹிமையை ஸத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம் — என்ற பாடலில் எடுத்துரைக்கிறார் .
ஆயினும் தமிழில் மிக எளிமையாகச் சொன்னது அவ்வையார்தான்
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே – நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோ(டு)
இணங்கி இருப்பதுவும் நன்று— அவ்வையார்
Xxxx
அப்பர் பாடிய திரு அங்க மாலை பதிகத்தில் இருந்து பாடல் முதல் வரிகளை மட்டும் காண்போம்
தலையே நீ வணங்காய் – தலை மாலை தலைக்கணிந்து
தலையாலே பலி தேரும் தலைவனைத்
தலையே நீ வணங்காய்
கண்காள் காண்மின்களோ – கடல்
நஞ்சுண்ட கண்டன்றன்னை…………
செவிகாள் கேண்மின்களோ – சிவன்
எம்மிறை செம்பவள……………………………
மூக்கே நீமுரலாய் – முது
காடுறை முக்கணனை………………………….
வாயே வாழ்த்துகண்டாய் – மத
யானை யுரிபோர்த்துப்……………………………….
நெஞ்சே நீநினையாய் – நிமிர்
புன்சடை நின்மலனை……………………………
கைகாள் கூப்பித்தொழீர் – கடி
மாமலர் தூவிநின்று……………………………………..
ஆக்கை யாற்பயனென் – அரன்
கோயில் வலம்வந்து
பூக்கையா லட்டிப் போற்றியென் னாதஇவ்
ஆக்கை யாற்பயனென்.
கால்க ளாற்பயனென் – கறைக்
கண்ட னுறைகோயில்……………………………
என்று ஒவ்வொரு பாட்டும் ஒரு அங்கத்தின் பயன், இறைவனைத் தொழுவதற்கானதே என்று சொல்கிறார்.
XXXX
இதோ இறைவனின் அடியார்கள் பற்றி சதகத்தின் பாடலும் பொருளும்:–
76. நற்சார்பு
காணரிய பெரியோர்கள் தரிசனம் லபிப்பதே
கண்ணிணைகள் செய்புண் ணியம்;
கருணையாய் அவர்சொல்மொழி கேட்டிட லபிப்பதுஇரு
காதுசெய் திடுபுண் ணியம்;
பேணிஅவர் புகழையே துதிசெய லபித்திடுதல்
பேசில்வாய் செய்புண் ணியம்;
பிழையாமல் அவர்தமைத் தொழுதிட லபிப்பதுகை
பெரிதுசெய் திடுபுண் ணியம்;
வீணெறிசெ லாமலவர் பணிவிடை லபிப்பதுதன்
மேனிசெய் திடுபுண் ணியம்;
விழைவொடவர் சொற்படி நடந்திட லபிப்பதே
மிக்கபூ ருவபுண்ணியம்;
ஆணவம் எனுங்களை களைந்தறி வினைத்தந்த
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) ஆணவம்எனும் களைகளைந்து அறிவினைத் தந்த அண்ணலே
– நான் என்னும் களையை யெடுத்து, அறிவையருளிய பெரியோனே!, அருமை
….. தேவனே!, காண்அரிய பெரியோர்கள் தரிசனம் லபிப்பது
கண்இணைகள்செய் புண்ணியம் – பார்த்தற்கரிய பெரியோர்களின் தரிசனம் கிடைப்பது இருவிழிகளின் நல்வினையாகும், கருணையாய் அவர் சொல்மொழி
கேட்டிட லபிப்பது இரு காது செய்திடு புண்ணியம் – அவர்கள் அருளுடன் கூறும்மொழியைக் கேட்கக் கிடைப்பது இரு காதுகளும் செய்த நல்வினையாகும்,
அவர் புகழையே பேணித் துதிசெய லபித்திடுதல் பேசில்வாய் செய்புண்ணியம்
– அவர்களுடைய புகழையே விரும்பிப் போற்றிடக் கிடைப்பது கூறினால் வாய்செய்த நல்வினை ஆகும், அவர்தமைப் பிழையாமல் தொழுதிட லபிப்பது
கைபெரிது செய்திடு புண்ணியம் – அவர்களைத் தவறாமல் வணங்கக்
கிடைப்பது கைகள் பெரிதும் செய்து நல்வினையாகும், வீண்நெறி செலாமல்
அவர் பணிவிடை லபிப்பது தன்மேனி செய்திடு புண்ணியம் – பயனற்ற
வழிகளிற் செல்லாமல் அவர்களுக்குத் தொண்டு செயக் கிடைப்பது தன்மெய் செய்திட்ட நல்வினை ஆகும். விழைவொடு அவர் சொற்படி நடந்திட
லபிப்பது மிக்க பூருவ புண்ணியம் – விருப்பத்துடன் அவர் கூறியவாறு
நடந்திடும் பேறு கிடைப்பது முற்பிறப்பிற் செய்த பெரிய வினையாகும்.
—SUBHAM—-
tags- நல்லோர், சத் சங்கம், அம்பலவாணர் , சான்றோர் , ஒளவையார் ,அப்பர், அங்க மாலை