
Post No. 11,685
Date uploaded in London – 19 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஜோதிட மஹரிஷிகள்!
ச.நாகராஜன்
ஜோதிடம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுவோரும், அதைக் கற்போரும் தெரிந்துகொள்ள வேண்டிய மஹரிஷிகள், ஜோதிட அறிஞர்கள் மற்றும் சில சிறந்த நூல்களின் பட்டியல் இதோ:
1) வசிஷ்டர்
2) நாரதர்
3) சக்தி
4) பராசரர்
5) வியாஸர்
6) விஷ்ணுகுப்தர்
7) தேவலர்
8) மயன்
9) யவனர்
10) ஜைமினி
11) மனிதா
12) சத்யாசார்யர்
13) ஜீவசர்மா
14) மாண்டவ்யர்
15) பரத்வாஜர்
16) கார்கி
17) சங்கராசார்யர்
18) வித்யாரண்யர்
19) பட்டபாலர்
20) வராஹமிஹிரர்
21) காளிதாஸர்
22) காலாம்ருதர்
நூல்கள்
23) சர்வார்த்த சிந்தாமணி
24) மானஸகாரி
25) முஹூர்த்த தர்ப்பணம்
26) கோபாலரத்னாகரம்
27) சராவளி
28) நக்ஷத்ரசூடாமணி
29) ஜைனேந்த்ரமாலா
30) உடுதசாப்ரதீபிகா
31) ஜாதகாலங்காரம்
32) ஜாதக கலாநிதி
33) யோகாவளி
36) கேரளம்
37) ஜாதகசந்த்ரிகா
38) தைவக்ஞாபரணம்
39) தைவக்ஞவிலாஸம்
40) ஹோரப்ரதீபிகா
41) சூர்யசித்தாந்தம்
42) நவநீதார்ணவா
43) பராசரஹோரா
44) தைவக்ஞபூஷணம்
மேலே உள்ள அனைத்து மஹரிஷிகளின் வாக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தவர் புரபஸர் சூர்யநாராயண் ராவ்.
மேலே தரப்பட்ட நூல்கள் அனைத்தையும் அவர் கற்றுத் தேர்ந்தவர்.
ஜோதிடத்தை 18 மஹரிஷிகள் உலகிற்கு அளித்தனர்.
அந்த 18 மஹரிஷிகள்:
1) சூர்யன்
2) பிதாமஹர்
3) வியாஸர்
4) வசிஷ்டர்
5) அத்ரி
6) பராசரர்
7) கஸ்யபர்
8) நாரதர்
9) கார்க்யர்
10) மரீசி
11) மனு
12) ஆங்கீரஸ்
13) பௌலுஷர்
14) லோமசர்
15) சியவனர்
16) யவனர்
17) பிருகு
18) சனகர்
ஜோதிடம் என்பது ஜோதியின் விளைவுகளை ஆராயும் ஒரு விஞ்ஞான சாஸ்திரம்.
பல்வேறு கிரகங்களின் ஒளி பூமியை நோக்கி வருகிறது. அந்த ஒளி மனிதர், விலங்கினம் உள்ளிட்ட அனைத்தின் மீதும் தனது செல்வாக்கைச் செலுத்துகிறது.
ஜோதிட சாஸ்திரம் மூன்று முக்கிய பாகங்களைக் கொண்டுள்ளது.
முதலாவது கணித ஸ்காந்தம் – அதாவது கணிதத்தைக் கொண்டுள்ள பாகம்.
இரண்டாவது பாகம் ஹோரா ஸ்காந்தம் – அதாவது ஜாதகத்தின் பலன்களைச் சொல்லக் கூடியது.
மூன்றாவது ஸம்ஹிதா ஸ்காந்தம் -அதாவது உலகம் சார்ந்தது
கணித ஸ்காந்தம் ஜோதிடத்தில் செய்யப்பட வேண்டிய ஏராளமான கணிதம் பற்றிய விஷயங்களைச் சொல்லும் பாகம்.
ஹோரா ஸ்காந்தம் ஒரு மனிதன் வாழ்வில் நடக்கப்போகும் நிகழ்ச்சிகளைக் கணித்துச் சொல்லும்.
ஸம்ஹிதா ஸ்காந்தம் மழை பெய்வது, பூகம்பம் நிகழ்வது, வெள்ளம் ஏற்படுவது, உற்பத்திப் பொருள்களின் உற்பத்தி, விலைகள் உள்ளிட்டவை பற்றிச் சொல்லும்.
ஜோதிடராக ஆக விரும்பும் ஒரு மனிதர் முதலில் இவை பற்றிய அடிப்படை அறிவைப் பெற வேண்டும்.
நல்ல குருவை அணுகி அவரிடம் ஜோதிடக் கலையை உண்மையுடனும், சிரத்தையுடனும் கற்க வேண்டும்.
பணத்திற்காகப் பலன்களைச் சொல்ல ஆரம்பிக்கக் கூடாது.
இத்துடன் ஜோதிடரின் தகுதி பற்றிய எனது கட்டுரை, ஜோதிட மேதைகள் என்ற எனது புத்தகம், ஜோதிடம் உண்மையா என்ற எனது புத்தகம் உள்ளிட்டவற்றை இணைத்துப் படித்தால் ஜோதிடக் கலை பற்றிய பல அடிப்படை உண்மைகளை அறியலாம்.
***
tags-ஜோதிட மேதைகள், ஜோதிடம் உண்மையா, ஜோதிடக் கலை