நான்கு வித புத்திகள்! நான்கு வித போகங்கள்! (Post No.11,693)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,693

Date uploaded in London –  21 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நான்கு வித புத்திகள்! நான்கு வித போகங்கள்!

ச.நாகராஜன் 

நான்கு வித புத்திகள்

புத்தி நான்கு வகைப்படும்.

1) ஆத்மபுத்தி-சுகா – ஒருவருடைய ஸ்வயமான புத்தி – சந்தோஷத்திற்கானது

2) குருபுத்தி விசேஷ – குருவின் புத்தி – விசேஷமானவற்றிற்காக.

3) பரபுத்தி விநாச – மற்றவர்களின் புத்தி – நாசத்திற்கானது

4) ஸ்தீரி புத்தி – ப்ரளயா – பெண்களின் புத்தி – சர்வ நாசத்திற்கானது.

ஆத்மபுத்தி: சுகாயைவகுருபுத்திர்விசேஷத: |

பரபுத்திர்விநாஷாய ஸ்தீரிபுத்தி: ப்ரளயாவஹா ||

–    சுபாஷித ரத்னாகர பாண்டாகாரம் 155/94

நான்கு வித ப்ரமாணங்கள்

ப்ரமாணங்கள் – அதாவது ஏற்கக்கூடிய அறிவானது – நான்கு வகைப்படும்.

1) ஸ்மிருதி – வேதத்தின் மூலம் அடையப்படுவது

2) ப்ரத்யக்ஷம் – நேரடியாக அடைவது

3) இதிஹாஸம் – ராமாயண, மஹாபாரத இதிஹாஸத்தினால்

                 பெறப்படுவது

4) அனுமானம் – ஊகத்தினால் பெறப்படுவது

ஸ்மிருதி: ப்ரயத்க்ஷமைதிஹ்ரம் | அனுமானஸ்சதுஷ்டயம் ||

–    தைத்ரீய ஆரண்யகம் I.2.1

நான்கு வித போகங்கள்

போகங்கள் நான்கு வகைப்படும்.

1) ஸ்தூலம் – மொத்தமாக அடையும் சுகம்

2) ப்ரவிபக்த – தனித்து அடைவது

3) ஆனந்தம் – ஆனந்தம்

4) ஆனந்தாவபாஸ: – ஆனந்தத்தின் தோற்றம்

ஸ்தூலஸ்ச ப்ரவிபக்த: | ஆனந்தஸ்சானந்தாவபாஸ: |

சத்வாரோ போகா தேஹஷ: பவந்தி ||

–    தாஸபோதம் 17.9.3 

நான்கு வித பயங்கள்

பயங்கள் நான்கு வகைப்படும்.

1) ஜன்ம பயம் – பிறப்பினால் வருவது

2) ம்ருத்யு பயம் – இறப்பினால் வருவது

3) ஜரா பயம் – வயது முதிர்ந்தவுடன் மூப்பினால் வருவது

4) வியாதி பயம் – நோய்களினால் வருவது

ஜன்ம-ம்ருத்யு-ஜரா-வ்யாதி-பயம் நைவோபஜாயதே |

–    விஷ்ணு சஹஸ்ர நாமம் – பல ஸ்ருதி

நான்கு வித நண்பர்கள்

நண்பர்கள் நான்கு விதம்.

1) ஔரஸம் – ஒரே பெற்றோர்களிடம் பிறந்தவர்கள்

2) க்ருதசம்பந்தம் – திருமணத்தினால் வருவது

3) வம்ச சம்பந்தம் – வம்சத்தினால் வருவது

4) ரக்ஷக சம்பந்தம் – துயரப்படும் போது ரக்ஷிப்பவரால் வருவது

ஔரஸம் க்ருதசம்பந்தம் ததா வம்சக்ரமாகதம் |

ரக்ஷகம் வ்யஸனேப்யஸ்ச ஞேயம் சதுர்விதம் ||

–    காமந்தகீய நீதி ஸார: IV- 74

முக்தி பெற நான்கு வழிகள்

நான்கு வழிகளில்  முக்தியை அடையலாம்.

1) ப்ரஹ்ம ஞானம் – ப்ரஹ்மனை அறிவதன் மூலமாக முக்தி பெறலாம்.

2) கயா சிரார்த்தம் – கயாவில் சிரார்த்தம் செய்வதன் மூலமாக முக்தி

                    பெறலாம்.

3) கோக்ரஹ மரணம் – கோசாலையில் – பசு தொழுவத்தில் – மரணம்

                      அடைவதன் மூலம் முக்தி பெறலாம்.

4) குருக்ஷேத்ர நிவாஸம் – குருழக்ஷேத்ரத்தில் வசிப்பதன் மூலமாக

                           முக்தி பெறலாம்.

ப்ரஹ்மஞானம் கயாச்ரார்த்தம் கோக்ருஹே மரணம் ததா |

வாஸ: பும்ஸாம் குருக்ஷேத்ரே முக்திரேஷா சதுர்விதா ||

நரகத்திற்குச் செல்ல நான்கு வழிகள்

நரகத்திற்குச் செல்ல நான்கு வழிகள் உண்டு.

1) காமம் – காமம்

2) க்ரோதம் – கோபம்

3) லோபம் – பேராசை

4) தம்பம் – தற்பெருமை

இவையே நரகத்திற்குச் செல்லும் நான்கு வழிகள்.

காமோ லோபஸ்ததா க்ரோதோ தம்பஸ்சத்வார் இத்யமி | 

*** 

tags- நான்கு , புத்திகள், போகங்கள்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: