
Post No. 11,719
Date uploaded in London – – 27 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
அரக்கன் என்று சங்க இலக்கிய நூலான புறநானூறு வருணிக்கும் இராக்ஷச ராவணன் பெண் பித்தன். சீதையைக் கடத்தும் முன்னரே பல பெண்களைக் கவர்ந்து அவர்களிடம் சாபமும் வாங்கி அழிந்தான் இமய மலையில் சிவ பெருமானிடம் அடி வாங்கிய ராவணன், நர்மதை நதிக்கரையில் கார்த்த வீர்ய அர்ஜுனனிடம் அடி வாங்கி, இனிமேல் அந்தப்பக்கம் வரவே மாட்டேன் என்று ஓடினான். வேதவதி என்னும் மலைவாழ் பழங்குடிப் பெண்ணின் molested tribal girl Vedavathi கூந்தலைப் பிடித்து இழுத்து சாபம் வா ங்ககினான் . அவள் சீதையாகப் பிறந்து அவனை ஒழித்தாள் . இதே போல கிஷ்கிந்தையில் மன்னன் ஆகக் கொலு வீற்றிருந்த வாலியிடமும் வால் ஆட்டினான் ராவணன். இது பற்றிய சுவையான விஷயங்கள் அனைத்தும் வால்மீகி ராமாயணத்தின் உத்தர காண்டத்தில் உள்ளது.
வாலியிடம் அடிவாங்கிய இராவணன் ஒரு வினோத ஒப்பந்தத்தில் கையெழுத்திட நேரிட்டது. இனி எதுவானாலும் உனக்குப் பாதி, எனக்குப்பாதி அதாவது உறவினில் 50–50 உதட்டினில் 50–50 . இதில் பெண்களை அனுபவிப்பதும் அடக்கம். இதில் அதிகம் இழந்தவன் ராவணன்தான். அவன்தான் அதிகமான பெண்களைக் கவர்ந்து வந்தவன். இதைக்கூறும் ராமாயண ஸ்லோகங்கள் வாலி, நாற்கடலில் நீராடி சந்தியாவந்தனம் செய்த சுவையான செய்தியையும் கூறுகிறது.
xxx

என்னுடைய ஆராய்ச்சி
இது என்னுடைய ஆராய்ச்சி முடிவுகளையும் உறுதி செய்கிறது .
ராமாயணத்தில் வரும் கழுகு (ஜடாயு), கரடி (ஜாம்பவான்), வாலி (குரங்கு) என்பனவெல்லாம் உடலில் அணியும் அடையாளங்கள் TOTEM SYMBOLS. உண்மையில் குரங்கோ கழுகோ கரடியோ இல்லை. வாலி இறந்த பின்னர் அவனது உடல் இந்து முறையில் தகனம் CREMATION செய்யப்பட்டது. ஆனால் வேறு சில ராக்கதர்கள் உடல் புதைக்கப்பட்டது BURIAL. மேலும் அனுமன் தன் உருவை மாற்றிக்கொண்டு ஒரு பிரம்மச்சாரி மாணவன் போல வந்தான் என்று கம்பனும் ஒரு பிக்ஷுவாக வந்தான் என்று வால்மீகியும் சொல் வதிலிருந்து அனுமன் குரங்கு முகமூடி வேஷத்தை மாற்றிவிட்டு சாதாரண மனிதன் போல வந்தான் என்பது புலனாகிறது. ராமாயணம் பல ஆயிரம் ஆண்டுப் பழமையானதால் இப்படி உருமாறி , உண்மையியலேயே அவர்கள் குரங்குகள் என்று நம்பவைத்தது . இன்றும் கூட பூடான் நாட்டில் (பூத ஸ்தானம் BHUT+ SHAAN= BHUTAN ) நாட்டில் முகமூடி அணிந்து விழாக் கொண்டாடுகிறார்கள். இலங்கையர் அணிந்த முகமூடிகள் இப்பொழுதும் காட்சிசாலைகளில் உள்ளன.
சுருங்கச் சொல்லின், நவ வியாகரணம் அறிந்த அனுமனும் நாற்கடலில் நீராடி சந்தியாவந்தனம் செய்த வாலியும் சாதாரண இந்துக்கள். ஆனால் தமிழ்நாட்டில் இப்போதும் பல்வேறு ஜாதிகள் பல திருமண, இறுதிச் சடங்கு விதிகளை வை த்திருப்பது போல குரங்கின் அடையாளம் பூண்ட ஒரு இனத்திடையே வினோத வழக்கங்கள் இருந்தன.
நாற்கடல் நீராடியது என்பது தமிழ்க் கல்வெட்டுகளிலும் வருகிறது. இது பற்றிய என்னுடைய பழைய ஆராய்ச்சிக் கட்டுரையில் சுவையான விஷயங்களைத் தந்துள்ளேன்.
XXXX

இதோ ராமாயண ஸ்லோகங்கள் :
க்ருஹீது காமம் தம் க்ருஹ்ய ராக்ஷஸாமீச்வரம் ஹரிஹி
சதுஷ்வபி ஸமுத்ரேஷு ஸந்த்யா மன்வாஸ்ய வாநரஹ
ராவணம் து முமோசாத கக்ஷாத் கபி ஸத்தமஹ
பொருள்
வா நரனான அந்த வாலி , தன்னைக் கட்டிப்பிடிக்க விரும்பிய ராவணனை அக்குளில் அமுக்கிப் பிடித்தவண்ணமே நான்கு மா கடல்களிலும் சந்தியாவந்தனத்தைச் செய்த பின் அக்குளிலிருந்து விடுவித்து ராவணனனைக் கீழே போட்டான் .
(வா நரன் = நரர் கள் / மனிதர்கள் ஆனால் வனத்தில் வசிக்கும் மனிதர்கள்; ஆகையால் வன நரர்கள் = வாநரம் TRIBAL COMMUNITY; FOLLOWING THEIR OWN RULES[ VAA NARA= JUNGLE MAN, FORESTER)
ராக்ஷஸேந்த்ரோ ஹரீந்த்ரம் தமிதம் வசனம் அப்ரவீத்
தாராஹா புத்ராஹா புரம் ராஷ்ட்ரம் போகாச் சாதன பாஜனம்
ஸர்வ மேவா விபக்தம் நெள பவிஷ்யதி ஹரீச்வர
பொருள்
ராவணன், ” வானர வீரனே ! மனைவியர் , மக்கள், நகரம் , ராஜ்யம் , சுகபோகத்துக்குரிய பொருள்கள் , உடைகள், பாண்டங்கள், இவையாவும் நம் இருவருக்கும் பொதுவாக இருக்கக்கடவது” என்ற இந்த ஒப்பந்த வார்த்தையை வாலியிடம் சொல்லிக்கொண்டான்.
வாங்கிய அடியில் அலறிப்போன இராவணன், தன்னிடம் உள்ள பெண்கள், நாடு, நகரம் அனைத்திலும் 50 பெர்சென்ட் FIFTY PERCENT வாலிக்கே என்று சொல்லிவிட்டுத் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிப்போனான்.
இந்தக் கதைகளை அகஸ்தியர் சொன்னதாக உத்தர காண்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
உறவினில் 50- 50; உதட்டினில் 50- 50 என்று வாலி ஆடிப்பாடி கூத்தாடி இருப்பான் என்பதை நாம் மனக்கண்களில் காணலாம்.
பாண்டியனுக்கும் ராவணனுக்கும் இடையே ஏற்பட்ட சமாதான உடன்படிக்கையை பழைய உரை ஆசிரியர் நச்சினார்க்கினியர் சொன்னதை பல ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு கொடுத்து இருக்கிறேன்.
Picture- Ravana in Sanyasi disguise

ராவணன் – பாண்டியர் சமாதான உடன்படிக்கை
https://tamilandvedas.com › ராவ…
24 Jun 2014 — “ஒரு பாண்டியன் இராவணனைச் சமாதானம் செய்துகொள்ளும்படிச் செய்தான் என்று சாசனம் …
Missing: ஒப்பந்தம் | Must include: ஒப்பந்தம்
இலங்கை அரக்கன் மீது ஞான சம்பந்தர் கடும் …
https://tamilandvedas.com › இலங…
·
18 Nov 2021 — tamilandvedas.com, swamiindology.blogspot.com … ராவணன் – பாண்டியர் சமாதான உடன்படிக்கை.
நாலு கடல் நீரில் ஒரே நாளில் குளியல்?
https://tamilandvedas.com › நால…
6 Jun 2012 — நாலு கடல் நீரில் ஒரே நாளில் குளியல்? சமுத்திர குப்தன் என்ற மாபெரும் குப்தப் …
–SUBHAM—tags- ராவணன் ,வாலி , ஒப்பந்தம், : உறவினில் 50- 50; உதட்டினில் 50- 50 ,