எத்தனை சிக்கந்தர் தோன்றினாலும் இந்து மதம் அழியாது!(Post No.11,728)

 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,728

Date uploaded in London –  30 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

எத்தனை சிக்கந்தர் தோன்றினாலும் இந்து மதம் அழியாது! 

ச.நாகராஜன் 

கி.பி. 1391ஆம் ஆண்டு.

சுல்தான் சிக்கந்தர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான்.

பட்டம் ஏற்ற சில நாட்களிலேயே அவன் ‘புத்-ஷிகான்’ என்ற பெயரைப் பெற்றான்.

அதாவது சிலைகளை உடைப்பவன் என்ற பெயரைப் பெற்றான்.

பழைய ஹிந்து கோவில் எதைக் கண்டாலும் அவனுக்கு ஆகாது. அதை அழிப்பது ஒன்றே அவனது குறிக்கோளாக இருந்தது. காஷ்மீரில் இருந்த கோவில்களை எல்லாம் இடிப்பதையே தன் முழு நேரத்

தொழிலாக அவன் கொண்டான்.

மார்த்தாண்ட கோவில்கள் என்று சொல்லப்படும் பிரம்மாண்டமான ஆலயங்களை இடிப்பதற்காகவே

அவன் ஒரு பெரும் பிரிவை ஆரம்பித்தான்.

ஆனால் கோவில் மதில்களையோ உள்ளே இருப்பவற்றையோ அவனால் எளிதில் உடைக்க முடியவில்லை.

அவ்வளவு வலுவாக அவை கட்டப்பட்டிருந்தன.

இறுதியில் தீயை வைக்க ஆரம்பித்தான்.

கோவில்கள் அனைத்தும் தங்கள் களையை இழந்தன.

சில கோவில்களில் கல்வெட்டுக்கள் இருந்தன. அந்தக் கோவில் கல்வெட்டுகள் எதிர்காலத்தில் வரும் சிக்கந்தர் என்பவன் இந்தக் கோவிலை அழிப்பான் என்று வெட்டப்பட்டிருந்தது.

இதைக் கேள்விப்பட்ட சிக்கந்தர் சிரித்தான்.

“இதை முன்னாலேயே யாரும் எனக்குத் தெரிவிக்கவில்லையே. அப்படி ஒருவேளை தெரிந்திருந்தால் அந்த ஆலயங்களை அழித்திருக்க மாட்டேனே. உருவத்தை வைத்து வழிபடுபவர்களின் வாக்கு பொய்த்துப் போகட்டும் என்று கோவில்களை அழிக்காமல் அல்லவா விட்டிருப்பேன். இப்போது அவர்கள் வாக்கு உண்மையாக ஆகி விட்டதே” என்று அங்கலாய்த்தான் அவன்!

கோவில் அழிக்கப்படும் போது அதிலிருந்து கிடைத்த அருமையான அடிப்பீடங்கள் இதர அழகிய பொருள்களையும் தனியே எடுத்து வைத்துக் கொண்ட அவன், அவற்றை எல்லாம் ஜும்மா மசூதி கட்டும் போது பயன்படுத்தலானான். ஜும்மா மசூதி அஸ்திவாரமே இந்தக் கோவில் இடிபாடுகளினால் அமைக்கப்பட்டது தான்.

இது மட்டுமல்ல, கோவிலில் வந்து வழிபடும் பக்தர்களின் மீதும் அவன் கோபம் திரும்பியது.

அவன் மூன்று வழிகளை அவர்கள் முன்னே வைத்தான்.

1) சாவு

2) சனாதன தர்மத்தை விட்டு விட்டு இஸ்லாமியனாக மாறுவது.

3) வீட்டையும் நாட்டையும் விட்டு ஓடுவது

பலர் நாட்டை விட்டு ஓடினர். உயிருக்குப் பயந்த சிலர் மதம் மாறினர். பலரும் இறைவன் நாமத்தைச் சொல்லியவாறே சொந்த தர்மத்தில் இருந்து உயிரைத் தியாகம் செய்தனர்.

பிராமணர்களைக் கொல்வதில் அவனுக்கு அலாதியான ஒரு சந்தோஷம் இருந்தது.

பிராமணர்களைக் கொன்ற போது அவர்களின் பூணூலை மட்டும் அவன் தனியே எடுத்து ஓரிடத்தில் குவிப்பானாம்.

இப்படிக் குவிக்கப்பட்ட பூணூல்கள் மட்டும் 7 மணங்கு அளவு உயர்ந்திருந்ததாம். (ஒரு மணங்கு என்பது பழைய கால வீசைக் கணக்குப் படி 8 வீசை ஆகும்)

எல்லா ஹிந்து மத சாஸ்திர நூல்களை எடுத்து அதை தால் ஏரியில் அவன் போட்டான்.

ஹிந்து மதத்தை காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து ஒழித்து விட்டதாகத் தம்பட்டம் அடித்துக் கொண்டான்.

ஆனால் அவனது ஆசை ஒன்றும் நிறைவேறவில்லை.

இன்றும் அர்த்தமுள்ள இந்துமதம் அழியாமல் இருக்கிறது. அனைவரும் வியக்கும் வண்ணம் பல நாடுகளில் வளர்கிறது.

உலகெங்கும் ஹிந்து ஆலயங்கள் இன்று பிரம்மாண்டமான அளவில் கட்டப்பட்டு அனைவரையும் வியக்க வைக்கின்றன.

அழியாத மதம் இந்து மதம்!

எத்தனை சிக்கந்தர்கள் தோன்றினாலும் இந்த மதம் அழியாது. இதுவே உண்மை!

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: