ஐந்து வகை உபசாரம், ஐந்து வகை வழிபாடு, ஐந்து வகை கர்மம்! (Post.11,796)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,796

Date uploaded in London –   12 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஐந்து வகை உபசாரம்ஐந்து வகை வழிபாடுஐந்து வகை கர்மம்!

ச.நாகராஜன் 

1. ஆகாயம் ஐந்து வகைப்படும்.

அவையாவன:

1)  ஆகாசம் 2) பரமாகாசம் 3) மஹாகாசம் 4) தத்வாகாசம்

5) சூர்யாகாசம்

2. பங்க்தி பாவனா: ஐவர்

(விருந்தில் கௌரவிக்கப்பட வேண்டியவர்கள் ஐவர்)

1) ஷடங்கி – வேதாங்கங்களில் வல்லுநர்கள்

2) வினயி – எளிமையானவர்கள்

3) யோகி – யோகி

4) சர்வதந்த்ரா – அனைத்து சாஸ்திரங்களிலும் வல்லவர்கள்

5) யாயாவரர் – பக்திமானான க்ரஹஸ்தன்

ஷடங்கி வினயி யோகி சர்வதந்த்ரததைவ ச |

யாயாவரஸ்ச பஞ்சைதே விக்ஞேயா: பங்க்திபாவனா: ||

3. உபசாரம் ஐந்து வகைப்படும்.

அவையாவன:

1) கந்தம் – சந்தனம்  2) புஷ்பம் – மலர்கள் 3) தூபம் – ஊதுபத்தி 4) தீபம் – தீபம் 5) நைவேத்யம் – நிவேதனப் பொருள்கள்

4. உபாசனம் அதாவது வழிபாடு ஐந்து வகைப்படும்.

பாஞ்சராத்ர ஆகமத்தின்படி ஐந்து வகை உபாசனம் கீழ் வருமாறு:

1) அபிகமனம் – access – அணுகுதல்

2) உபாதானம் – ஏற்பாடு செய்தல்

3) இஜ்யா – நிவேதனம்

4) ஸ்வாத்யாயா – வேதம் ஓதுதல் (விஷ்ணு சஹஸ்ரநாமம் உள்ளிட்டவற்றை ஓதுதல்)

5) யோகா – யோகம்

ததுபாசனம் பஞ்சவிதம் – அபிகமனம் – உபாதானம் – இஜ்யா- ஸ்வாத்யாய – யோக இதி ஶ்ரீ பாஞ்சராத்ரேபிஹித்தம்

–    சர்வதர்சன சங்க்ரஹம் (ராமானுஜர்)

5. கர்மங்கள் ஐந்து வகைப்படும்.

1) நித்ய கர்மம் – தினசரி செய்யப்படுவது

2) நைமித்திகம் – எப்போதாவது செய்யப்படுவது

3) காம்யம் – ஆசைப்பட்டவிஷயத்தை அடைவதற்காகச் செய்யப்படுவது

4) ப்ராயச்சித்தம் – பரிகாரமாகச் செய்யப்படுவது

5) நிஷித்தகம் – தடை செய்யப்பட்டது

நித்யம் நைமித்தகம் காம்யம் ப்ராயச்சித்தம் நிஷித்தகம் |

கர்ம பஞ்சகர்மேதத்தை விஜேயம் வேதவாதிபி: ||

–    வேதாந்தசம்ஞாவளி

6. வாசனைகள் ஐந்து வகைப்படும்

1) கஸ்தூரி 2) சந்தனம் 3) கற்பூரம் 4) அகரு – அகர் மரம் 5) மலயாகாருசந்தனம் – மலாயா மலையிலிருந்து வருவது

கஸ்தூரிசந்தனம் சந்த்ரமகரு த்விதீயம் ததா |

பஞ்சகந்தசமாஅக்யாதம் சர்வகார்யேஷு ஷோபனம் ||

7. பாவிகள் ஐந்து வகையாவர்.

அவர்கள் :

அக்னிதன் – இன்னொருவரின் சொத்திற்கு தீயை வைப்பவர்.

காரதன் – மற்றவர்களுக்கு விஷம் வைப்பவன்

சஸ்த்ரபாணி – நிராயுதபாணியைக் கொல்பவன்

தனாபாஹா _ மற்றவரின் சொத்தைத் திருடுபவன்

க்ஷேத்ரதாராபஹர்தா – மற்றவரின் நிலம் மற்றும் மனைவியை அபகரிப்பவன் 

அக்னிதோ காரதச்சைவ சஸ்திரபாணி: தனாபஹ: |

க்ஷேத்ரதாராபஹர்தா ச பஞ்சைதே ஆததாயிந: ||

 ***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: