
Post No. 11,845
Date uploaded in London – – 27 MARCH 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
பிள்ளையாருக்கு உள்ள வினோத அடைமொழிகள் போல வேறு எந்த இந்துக் கடவுளுக்கும் விசித்திரமான அடைமொழிகள் இல்லை என்றே சொல்லலாம். ஒவ்வொரு பெயருக்கும் பின்னர், ஒரு கதை அல்லது சம்பவம் இருக்கும். மதுரை மேல மாசிவீதி பிள்ளையார் கோவிலில் நேருஜி பெயர் ஒட்டிகொண்டது ! சாமியே கும்பிடாத காஷ்மீரிப் பார்ப்பான் ஜவஹர்லால் நேரு. ஒரு காங்கிரஸ்கார கவுன்சிலர் சொன்னதற்காக மதுரையில் நேருவின் கார் அங்கே நின்றதாம். இதனால் நேருவின் பெயர் ஒட்டப்பட்டது.

அட , இது புது வழக்கம் என்று நினைத்து விடாதீர்கள். இது புது வழக்க ம் அல்ல. திருவண்ணாமலைக் கோவிலுக்குள்நுழைந்தால் ஒரே கோவிலுக்குள் பல பிள்ளையார் பெயர்களைக் காணலாம். அவ்வளவு பிள்ளையார் பெயர்களுக்கும் விளக்கம் எழுத ஒரு ‘என்சைக்ளோபீடியா’ தேவைப்படும். இது 1000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ராஜ ராஜன் சோழன் காலத்திலிருந்து இருந்து வருகிறது. நம்பி ஆண்டார் நம்பியைத் திருப்திப் படுத்துவதாற்காக சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்ட பொல்லாப் பிள்ளையார் முதல் மதுரை மீனாட்சி கோவில் முக்குறுணி விநாயகர், விபூதிப் பிள்ளையார் வரை சொல்லிக்கொண்டே போகலாம்.
லண்டனில் வசிக்கும் சாமிநாதன் என்ற நண்பர், கும்பகோணம் கரும்பாயிரம் கொண்ட விநாயகர் ஆலயம் கோவிலில் நீண்ட நெடுங்காலம் பூ ஜை செய்த பட்டரின் மகன் ஆவார். அவர் இந்தப் பிள்ளையாரின் மஹிமை பற்றி ஏற்கனவே சொல்லியிருந்த தால். இந்த முறை இந்திய விஜயத்தில் அவரைச் சந்தித்து ஒரு ஸலாம் (சல் யூட்).போடத் தீர்மானித்தேன். அதன்படி ஒரே நாளில் 6 கோவில் தரிசன சூறாவளி சுற்றுப் பயணத்தில் 19-3-2023 அன்று நாங்கள் 3 பேர் அந்தக் கோவிலில் பிள்ளையாரைத் தரிசி த்து அருளாசி பெற்றோம். நல்ல சாந்நித்யம் உள்ள கோவில். நாமே வைப்ரேஷன்VIBRATIONSகளை உணரலாம். சுமாரான கூட்டம்; எளிதான தரிசனம்.
Xxxx
இதோ அவர் கதை :
இக்கோயில் பற்றி திருக் குடந்தைப் புராணம் போற்றுவதைக் கீழ்க்கண்ட பாடலில் காணலாம்.
“அருகரும்புத் தரும்வியப்ப அவனியொரு
கோட்டுநுனி அமைத்துத் தீயோர்
திருகரும்புக் கிடங்கொடாச் செங்கண்வரி
கமும்கிழத் தேதே யென்று
வருகரும்புட் குலமுழக்கு மலர்க்கேழற்
புனற் கோட்டார் வணிகன் பாங்கர்
ஒருகரும்புக் காயிரங்கொண் டுறுகரும்பா
யிரக்களிற்றை உளங்கொள்வோமே“
பிரசித்திபெற்ற கும்பேஸ்வரர் ஆலயத்துக்கு அணித்தே உள்ளது கரும்பாயிரம் பிள்ளையார் கோவில் . ஒரு காலத்தில் வராகப் பிள்ளையார் என்ற பெயர்தான் இருந்தது. ஏனெனில் அருகிலுள்ள வராகப் பெருமாள் கோவிலை ஒட்டி அதற்காக அமைக்கப்பட்டது. பின்னர் பிள்ளையார் செய்த லீலையால் கரும்பு ஆயிரம் ஒட்டிக்கொண்டது.
அது என்ன கதை?
ஒரு வியாபாரி ஆயிரக்கணக்கான கரும்புகளை வண்டியில் ஏற்றிக்கொண்டு கரும்பு ஆலைக்குச் சென்று கொண்டிருந்தான். யானைக்கு கரும்பு என்றால் கொ ள்ளை ஆசைதானே ! ஆனை முகப் பிள்ளையார் ஒரு சிறுவன் வேடத்தில் வந்து ஒரே ஒரு க ரும்பைக் கேட்டார். எச்சில் கையாலும் காகத்தை ஓட்டா தக் கஞ்சன் அந்த வியாபாரி . ஒரு கருபம்பைக் கூடத் தர மாட்டேன் என்றான். மேலும் அதற்காக சில பொய்களையும் சொல்லிவிட்டுப் போனான். ஆனால் அவன் கரும்பாலைக்குச் சென்றபோது அவை எல்லாம் தரக்குறைவானவை என்று நிராகரிக்கப்பட்டன. கவலை அடைந்த வியாபாரியின் கனவில் பிள்ளையார் தோன்றி , அவனது கஞ்சசத்தனத்தால் விளைந்த கருமம் இது என்று விளக்கினார். பின்னர் அவனும் மனம் திருந்தி பிள்ளையாரை கரும்பு சகிதம் வந்து வணங்கினான் ; அது முதற்கொண்டு புதுப்பெயருடன் புகழ் பெற்றார் ஆயிரம் கரும்புப் பிள்ளையார்!

கோவில்களும் இத்தகைய கதைகளும் நமக்குப் போதிப்பது என்ன?
பிறருக்கு உதவி செய்; ஐயமிட்டு உண் ; யாராவது , எதையாவது கேட்டால் , உன்னிடம் அதிகம் இருந்தால், அதைப் பிறருக்கும் கொடு.ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணுங்கள்.
–subham—
Tags- கும்பகோணம், கரும்பாயிரம் பிள்ளையார், கோவில் , ஆயிரம் கரும்பு