காந்திஜி வாழ்க்கையில் ராமர் செய்த அற்புதம் ! (Post No.11,957)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,957

Date uploaded in London – –  May 1 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

விக்ரக ஆராதனையில் நம்பிக்கை இல்லாத ஒரு பள்ளிக்கூட ஆசிரியர் மூன்று கேள்விகளை காந்திஜிக்கு அனுப்பி இருந்தார். அவர் 3 கேள்விகளுக்கும் பதில் எழுதினார். மூன்றாவது கேள்விக்கான பதிலை மட்டும் முதலில் காண்போம்

கேள்வி :

இந்துக்கள் போற்றும் (கடவுள்) ஒருவர், அவரது வாழ்க்கையில் , ஏதேனும் தவறுகள் செய்திருக்கலாம் அந்தத் தவறுகளை, அவரைப் போற்றித் துதிபாடுபவரும் செய்தால் அவருக்கு தீங்கு நேரிடுமே. .அந்த உருவத்தை அவர் வழிபட்டால் அந்தத் தவறை அவர் செய்வது சாத்தியம் அல்லவா?

காந்திஜியின் பதில்:

கடிதம்  எழுதியவர் , இந்துக்களின் அவதார தத்துவத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யவில்லை என்றே தோன்றுகிறது. நம்பிக்கையுள்ள ஒரு ஹிந்துவுக்கு அவதார புருஷர் மாசு மருவற்றவர். ஹிந்து பக்தருக்கு கிருஷ்ணன் , பரிபூரணத்துவம் வாய்ந்தவர். மற்றவர்களின் கடுமையான  விமர்சனம் பற்றி அவருக்கு கவலையே இல்லை.

கிருஷ்ணரையும் ராமரையும் வணங்கும் பல லட்சம் பேருக்கு அக் கடவுளரை அதே பெயரைச் சொல்லி வணங்கியதால் வாழ்க்கையே அடியோடு மாறியிருக்கிறது. . எப்படி  இது நடக்கிறது என்பது  எனக்குத் தெரியாது . இது ஒரு மர்மம்.. இதை நான் உள்ளத்தின் மூலமோ அறிவின் மூலமோ  அறிய முயற்சி செய்யவில்லை ஆனால் நீண்ட காலத்துக்கு முன்னரே கடவுள் என்பவரின் அடையாளம் /குணம்  சத்தியம் என்பதை உணர்ந்தேன்.அந்த சத்தியத்தை ராமர் என்ற நாமத்தின் மூலமே அறிந்தேன்.

எனக்கு சோதனை ஏற்பட்ட இருண்ட நேரத்தில் எல்லாம், அந்த ஒரு நாமம்தான் என்னனைக் காப்பாற்றியது .. இன்னும் காப்பாற்றிக்கொண்டு இருக்கிறது.சின்ன வயதிலிருந்தே எனக்கு ஏற்பட்ட பக்தியே காரணமாக இருக்கலாம். என் மீது துளசிதாஸ் ஏற்படுத்திய தாக்கமும் காரணமாக இருக்கலாம்.. இந்த வரிகளை

எழுதும்போது என் சின்ன வயசில் நடந்ததெல்லாம் நினைவுக்கு வருகிறது; அப்போது நான் தினமும் ராமர் கோவிலுக்குப் போவேன். என்னுடைய ராமன் அப்போது அங்கு வசித்தார்.  பாவங்களிலிருந்தும் பயத்திலிருந்தும் என்னைக் காப்பாற்றினார். இது என்னுடைய மூட நம்பிக்கை இல்லை . அந்த ராமர் விக்ரகத்தை வைத்திருந்தவர் கெட்டவராக இருந்திருக்கலாம். அவருக்கு எதிராக நான் எதையும் கேட்டதில்லை.அந்தக் கோவிலில் தில்லுமுல்லுகள் நடந்திருக்கலாம்.. அவை பற்றியும் எனக்குத் தெரியாது.ஆகையால் அவை என்னைப் பாதிக்காது. எனக்கு எது உண்மையாக இருந்ததோ, இன்னும் இருக்கிறதோ, அது பல லட்சம் மக்கள் விஷயத்திலும் உண்மையே . என்னுடைய ஹரிஜன சகோதரர் அவருடைய சக தர்மிகளுடன் , விரும்பினால், இந்தக் கோவில் வழிபாடு விஷயத்தைப் பகிர்ந்து கொள்ளட்டும். ஜாதி இந்துக்கள், , அவர்களுடைய ஹரிஜன சகோதர்களுக்கு ,கோவில்களைத் திறந்துவிடுவது அவர்களின் தலையாய கடமை ஆகும்.

மனித இனத்துக்குத் தேவையான ஆன்மீகத் தேவையை கோவில் வழிபாடு பூர்த்தி செய்கிறது சீர்திருத்தங்களை ஏற்கிறது மனித இனம் வாழும் வரை இதுவும் நீடித்து இருக்கும் ( ஹரிஜன் பத்திரிகை, 18-3-1933)

—எம்.கே .காந்தி

Tags- காந்திஜி வாழ்க்கை, ராமர் ,அற்புதம் , துளசிதாஸ்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: