Post No. 12,008
Date uploaded in London – 17 May , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
சுபாஷித செல்வம்
சந்த்யா காலத்தில் செய்யக் கூடாதவை ஐந்து!
ச.நாகராஜன்
கிடைக்க அரிதான ஐந்து!
கீழ்க்கண்டவை கிடைக்க அரிதானவை.
1) வித்யா – கல்வி
2) துங்கா – உயர்ந்த மாளிகைகள்
3) குங்குமம் – குங்குமம்
4) சஹிமம் பய: – குளிர்ந்த நீர்
5) த்ராக்ஷை – திராக்ஷைப் பழம்
வித்யா வேஷ்மானி துங்கானி குங்குமம் சஹிமம் பய: |
த்ராக்ஷாதி யத்ர சாமான்யமஸ்தி த்ரிதிவதுர்லபம் ||
துன்பங்கள் ஐந்து
மனித வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் துன்பங்கள் ஐந்து.
அவையாவன
1) கர்பம் – கர்ப்பத்தில் ஏற்படும் துன்பம்
2) ஜனனம் – பிறவி என்னும் துன்பம்
3) ஜரா – மூப்பு – வயதானதால் ஏற்படும் துன்பம்
4) வ்யாதி – நோய் – நோய்களால் ஏற்படும் துன்பம்
5) மரணம் – மரணம் – மரணத்தினால் ஏற்படும் துன்பம்
பஞ்ச: – கர்பதுக்க – ஜன்மதுக்க – ஜரா துக்க – வ்யாதிதுக்க – மரணதுக்கானி !
சங்கரரின் விளக்கவுரை – ஸ்வேதாஸ்வதரோபநிஷத்
பெண்ணுக்கு கௌரவம் தரும் ஐந்து ‘ப’காரங்கள்
‘ப’ எழுத்து வரிசையில் ஆரம்பிக்கும் ஐந்து விஷயங்கள் ஒரு பெண்ணுக்குக் கௌரவம் தருபவையாக அமைகின்றன.
அவை யாவை?
1) புத்ரஸு – நல்ல மகனுக்குத் தாயாக இருப்பது
2) பாககுஷாலா – சமைப்பதில் நிபுணியாக இருப்பது
3) பவித்ரா – தூய்மையாக இருப்பது
4) பதிவ்ரதா – கற்புடன் இருப்பது
5) பத்மாக்ஷி – தாமரை போன்ற கண்களுடன் இருப்பது
நாரி கௌரவம் இவையே.
புத்ரஸு: பாககுஷாலா பவித்ரா ச பதிவ்ரதா |
பத்மாக்ஷி பஞ்சபைர்நாரி ப்ருவி சம்யாதி கௌரவம் ||
சுபாஷித ரத்னாகர பாண்டாகாரம் 157 / 194
ஐந்து ‘ம’காரங்கள்!
ஐந்து முக்கிய விஷயங்கள் ‘ம’ என்ற எழுத்து வரிசையில் வைத்து ஆரம்பிக்கின்றன.
1) மத்ய – சாராயம் (குடி)
2) மாம்ஸம் – மாமிசம்
3) மத்ஸ்யம் – மீன்
4) முத்ரா – சமிக்ஞை
5) மைதுனம் – பாலியல் உறவு
மத்யமாம்ஸமத்ஸ்யமுத்ராமைதுனரூபம் |
– சப்தகல்பத்ருமம்
உலகம் முன்னேறத் தேவையான ஐந்து விஷயங்கள்!
உலகம் முன்னேறுவதற்காக ஐந்து விஷயங்கள் இன்றியமையாதவை.
அவையாவன:
1) ரக்ஷாதிகரணம் – நீதி காக்கப்பட வேண்டும்
2) யுத்தம் – போர் (தர்மம் காப்பதற்காக நடப்பது)
3) தர்மானுசாஸனம் – தர்மத்துடன் கூடிய அரசாட்சி
4) மந்த்ர சிந்தா – மந்திரிகளுடன் கலந்து ஆலோசனை செய்தல்
5) காலே சுகம் – தகுந்த காலத்தில் சுகத்தை அனுபவிப்பது
ரக்ஷாதிகரணம் யுத்தம் தர்மானுசாஸனம் |
மந்த்ர சிந்தா சுகம் காலே பஞ்சபிர்வர்ததே மஹி ||
மஹா பாரதம் – சாந்தி பர்வம் 93-24
சந்த்யா காலத்தில் செய்யக்கூடாதவை ஐந்து!
சந்த்யா காலத்தில் ஐந்து விஷயங்களைச் செய்யக் கூடாது.
அவையாவன:
1) ஆஹாரம் – உணவு உண்பது
2) மைதுனம் – பாலியல் உறவு
3) நித்ரா – உறக்கம் – தூங்குவது
4) சம்பாதம் – சாஸ்திரங்களைப் படிப்பது
5) அத்வானி கதி – பயணப்படுதல்
ஆஹாரம் மைதுனம் நித்ராம் சம்பாடம் கதிமத்வநி |
ஏதானி பஞ்ச கர்மாணி சந்த்யாயாம் வர்ஜயேத புத: |
***